பெங்களூரு மற்றும் மும்பை: ஐந்து தென்னிந்திய மாநிலங்களில் கேரளாவைத் தவிர மற்ற நான்கு, நீதி அமைப்பில் பன்முகத்தன்மையில் முதன்மையாக உள்ளதாக, ஏப்ரல் 4 அன்று வெளியிடப்பட்ட இந்திய நீதி அறிக்கை (IJR) 2022 தெரிவிக்கிறது. நீதி வழங்கல் வழிமுறைகள் - நீதித்துறை, காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் மாநிலங்களின் முன்னேற்றத்தை, இந்த அறிக்கை கண்காணிக்கிறது.

இந்திய நீதி அறிக்கையானது, DAKSH, காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI), காமன் காசஸ் (Common Cause), சமூக நீதிக்கான மையம், சட்டக் கொள்கைக்கான விதி மையம் மற்றும் TISS- Prayas உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து 2019 இல் தொடங்கப்பட்டது. இந்த அறிக்கைக்காக போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPRD), நீதித்துறையின் தரவு மற்றும் பாராளுமன்ற கேள்விகள், இந்தியாவின் சிறைச்சாலை புள்ளிவிவரங்கள், தேசிய நீதித்துறை தொகுப்பு, தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் மாநில பட்ஜெட் ஆவணங்கள் ஆகியவற்றின் தரவுகள் பயன்படுத்தப்படுகிறது.

அறிக்கையின் இந்த மூன்றாவது பதிப்பின்படி, 10 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில், தமிழ்நாடு பன்முகத்தன்மையில் சிறந்த தரவரிசையில் உள்ளது, 2020 இல் முந்தைய மதிப்பீட்டில் இருந்து ஆறு இடங்கள் ஏறி உள்ளது.

நீதி அமைப்பின் நான்கு தூண்களில் பெண்களின் பங்கு மற்றும் காவல்துறை மற்றும் நீதித்துறையில், பட்டியலின சாதி (SC), பட்டியலின பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரதிநிதித்துவம் போன்ற பல்வேறு குறிகாட்டிகளை பன்முகத்தன்மை தரவரிசை மதிப்பீடு செய்தது.

ஒட்டுமொத்தமாக, நீதி வழங்குவதில், நான்கு தென் மாநிலங்கள் --கர்நாடகா (1), தமிழ்நாடு (2), தெலுங்கானா (3) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (5)-- முதலிடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. "... ஒரு குறிகாட்டியில் உள்ள மேம்பாடுகள், காலியிடத்தை நிரப்புவது அல்லது ஒரு அமைப்பில் அதிக பன்முகத்தன்மையை உருவாக்குவது போன்றவை, மற்ற குறிகாட்டிகளில் நேர்மறையான சிற்றலை விளைவைக் கொண்டிருக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த தரவரிசைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றன" என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

சேர்க்கும் வேகம் 'உறைந்து' உள்ளது

வெவ்வேறு தூண்களின் குறிகாட்டிகளில் முன்னேற்றங்கள் இருந்தாலும், பன்முகத்தன்மையின் அடிப்படையில், குறிப்பாக சாதி அல்லது பாலினம், "எல்லா இடங்களிலும் சேர்ப்பதில் குறைபாடு உள்ளது மற்றும் பழுதுபார்க்கும் வேகம் பனிப்பாறையாகவே உள்ளது" என்று அறிக்கை கூறுகிறது.

நிறுவனங்களுக்குள் சாதி மற்றும் பாலின வேறுபாட்டைக் கொண்டு வராததற்கு இரண்டு சாக்குகள் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன என்று இந்திய நீதி அறிக்கையின் ஆசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான மஜா தருவாலா கூறினார். "ஒன்று, போதுமான நபர்கள் முன்வரவில்லை அல்லது சேர்க்கப்படுவதற்கு தகுதி இல்லை," என்று அவர் கூறினார். "[மற்றும் இரண்டாவதாக, அது] குறைபாடுகள் போன்ற பன்முகத்தன்மையின் இருப்புக்கு இடமளிக்கும் போதுமான வசதிகள் நிறுவனத்தில் இல்லை".

காவல்துறை, நீதித்துறையில் உயர் பதவிகளில் உள்ளவர்களிடையே பாலின வேறுபாடு தொடர்கிறது

2020ம் ஆண்டில் 10% ஆக இருந்த இந்திய காவல்துறையில் பெண்கள், 12% மட்டுமே உள்ளனர். ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஆறு யூனியன் பிரதேசங்களில் (UTs) 33% இட ஒதுக்கீடு உள்ளது, மற்ற மாநிலங்களில், இலக்குகள் பீகாரில் 35% முதல் அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் திரிபுராவில் 10% வரை இருக்கும். இருப்பினும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதுவும் அவற்றின் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை பூர்த்தி செய்யவில்லை. கேரளா மற்றும் மிசோரம் உட்பட ஐந்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.

அதிகாரி அளவில், போலீஸ் பெண்களின் பங்கு இன்னும் 8% குறைவாக உள்ளது; 2020 ஆம் ஆண்டில் 7% ஆக இருந்தது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குறைந்தது மூன்று பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 10 பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் பல ஆலோசனைகள் பரிந்துரைத்துள்ளன. டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே இதைப் பூர்த்தி செய்ய போதுமான பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.


ஆந்திரப் பிரதேசத்தில், 547 பெண் அதிகாரிகள், 3,172 கான்ஸ்டபிள்கள் மற்றும் ‘மற்றவர்’ பிரிவில் 15,580 பெண்கள் ‘மகிளா போலீஸ்’ ஆக சேர்க்கப்பட்டுள்ளனர். இது மொத்த காவல்துறையில் பெண்களின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்தாக மாற்றியுள்ளது, அதாவது ஜனவரி 2020 இல் இது 5.8% ஆக இருந்து, 2022 ஜனவரியில் 21.8% ஆக அதிகரித்துள்ளது.

“இதில் ‘மற்றவர்’ பிரிவு என்பது யார், எந்த அளவில் அவர்கள் சேவையில் பயன்படுத்தப்படுகிறார்கள், அவர்களின் அதிகாரங்கள் என்ன, அவர்கள் எப்படி கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது யாரிடம் பொறுப்புக் கூற வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை" என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் போலீஸ் சீர்திருத்தத் திட்டத்திற்கு தலைமை தாங்கும் தேவயானி ஸ்ரீவஸ்தவா கூறினார். “ஒட்டுமொத்த போலீஸ் படையில் ‘மற்றவர்’ பிரிவைச் சேர்க்கும் நடைமுறையை 2019 ஆம் ஆண்டு முதல், போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPRD) முதன்முதலில் பதிவு செய்ததில் இருந்து பார்க்கலாம். அப்போதிருந்து, மொத்த காவல்துறை பலத்தில் (பெண்கள் மட்டுமல்ல) ‘மற்றவர்களின்’ பங்கு 1.18% லிருந்து 5% என இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில், மகளிர் காவல்துறையினருக்காக, கிராமம் மற்றும் வார்டு அளவில் தனி மகிளா காவலர்களை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது, அவர்கள் மற்றொரு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட மகளிர் காவல்துறை செயலர்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் இப்போது மகிளா காவல்துறையாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீவத்சவா நம்மிடம் கூறுகிறார். மக்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கும், பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சட்டங்கள் குறித்து சமூகங்களுக்குக் கற்பித்தலுக்கும், தேவைக்கேற்ப குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கும் உதவுவதே அவர்களின் முக்கியப் பணியாகும்.

உயர்நீதிமன்ற அளவில் பொருத்தவரை, தேசிய அளவில் 13% நீதிபதிகள் மட்டுமே பெண்கள், மாவட்ட நீதிமன்ற அளவில் இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது, அதாவது 35%. மேலும், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 இல், 2020 ஆம் ஆண்டு முதல், உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆந்திராவில், இது 19% இலிருந்து 6.6% ஆகவும், சத்தீஸ்கரில் 14.3% லிருந்து 7.1% ஆகவும் குறைந்துள்ளது.

தேசிய அளவில், பெண்கள் குழு வழக்கறிஞர்களின் பங்கு 18% லிருந்து 25% ஆக அதிகரித்துள்ளது. மேகாலயாவில் 60.4% அதிகமாகவும், நாகாலாந்து 51.4% ஆகவும் இருந்தது. ராஜஸ்தான் (8.6%), அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (10.5%) குழு வழக்கறிஞர்களில் பெண்களின் பங்கைக் குறைவாகக் கொண்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 35% ஆக இருந்த பெண் பிஎல்விகளின் பாரா சட்ட தன்னார்வலர்கள் (PLVs) பங்கு ஜூன் 2022 நிலவரப்படி 40% ஆக அதிகரித்துள்ளது.

காவல் துறையில் உள்ள திருநங்கைகள் மற்றும் சட்ட உதவி வழக்கறிஞர்கள் தொடர்பான மாநில வாரியான விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. சட்டத்திற்கு முரணானவர்களில், 587 பேர் திருநங்கைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், இது 1.3% க்கும் குறைவாக உள்ளது.

முதல் முறையாக, இந்திய நீதி அறிக்கை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் 25 மாநில மனித உரிமைகள் ஆணையங்களை (SHRCs) மதிப்பீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஒரு தலைவர், ஒரு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் அல்லது இருந்த ஒரு உறுப்பினர், அந்த மாநிலத்தில் மாவட்ட நீதிபதியாக இருக்கும் அல்லது இருந்த ஒரு உறுப்பினர், மனித உரிமைகள் ஆணையங்களில் இருக்க வேண்டும் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களில் அறிவு அல்லது நடைமுறை அனுபவம் உள்ள இரண்டு உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பகுதி -நீதித்துறை அமைப்புகள், புகார்களை ஆய்வு செய்கின்றன. சிறைகள், சிறார் அல்லது நலவாரிய இல்லங்கள் மற்றும் அரசால் நடத்தப்படும் பிற நிறுவனங்களில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குகின்றன. மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை மறுஆய்வு செய்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றனர். சிவில் நீதிமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டாலும், அவர்களின் பரிந்துரைகள் கட்டுப்படுவதில்லை.

இங்கும் பாலின பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என அறிக்கை கூறுகிறது. 1993 இல் நிறுவப்பட்டதில் இருந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பெண் தலைவரைக் கொண்டிருக்கவில்லை, மேலும் மூன்று பெண் உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையங்களில், ஒட்டுமொத்தமாக ஆறில் ஒருவர் மட்டுமே பெண் பணியாளர்கள். பெண்கள் தலைவர்கள் இல்லை; 25 ஆணையங்களில் 6-ல் மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக அல்லது செயலாளர்களாக இருந்தனர். கேரளா, மேகாலயா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் தலா ஒரு பெண் உறுப்பினர். தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் நிலை குறித்த பாரிஸ் கோட்பாடுகள் நிறுவனங்களின் அமைப்பில் பன்மைத்துவம் தேவை என்ற போதிலும் இதுவே சூழல்.

பெரும்பாலான மாநில காவல்துறையில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் நிரப்பப்படவில்லை

அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பூர்வ கட்டாய சாதி அடிப்படையிலான ஒதுக்கீடுகள் உள்ளன. ஆனால், அதிகாரிகள் மற்றும் காவலர்களில் எஸ்சி/ எஸ்டி (SC, ST) மற்றும் ஓபிசி (OBC) நபர்களுக்கான ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்த ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே.

பொதுவாக, அரசு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கும், நீதித்துறைக்கும் இடையே நிலவும் சட்ட மோதல்கள், நாடு முழுவதும் உள்ள காவல்துறையில் பதவி உயர்வுகள் முடங்கியுள்ளன என்று காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி (CHRI) அமைப்பின் ஸ்ரீவஸ்தவா கூறினார். ஆனால், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்ற கர்நாடகாவின் கொள்கை, மாநிலம் சிறப்பாக செயல்பட ஒரு காரணியாக உள்ளது என்றார்.

கர்நாடகாவின் 2017 ஆம் ஆண்டு சட்டம் எஸ்சி / எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியான பணிமூப்பு வழங்கப்பட்டுள்ளது. "காவல்துறையில், மாநில அளவில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவி உயர்வுகளுக்கு இது பொருந்தும்" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

குஜராத் மற்றும் மணிப்பூர் அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள் அளவில் எஸ்சி ஒதுக்கீட்டை சந்தித்தனர். 2020 ஆம் ஆண்டிலும், இரு மாநிலங்களும் 100% க்கும் அதிகமான எஸ்சி கான்ஸ்டபிள்கள் மற்றும் அதிகாரிகள் காலியிடங்களை நிரப்பியுள்ளன. பீகார், தெலுங்கானா மற்றும் இமாச்சல பிரதேசம் எஸ்டி ஒதுக்கீட்டிற்காக அவ்வாறு செய்தன.

எஸ்சி மற்றும் எஸ்டி ஒதுக்கீட்டை ஒப்பிடும்போது அதிகமான மாநிலங்கள் தங்கள் ஓபிசி ஒதுக்கீட்டை பூர்த்தி செய்கின்றன. அனைத்து தென் மாநிலங்களும் - கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் - மற்றும் பஞ்சாப், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் ஆகியன, அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளில் ஓபிசி காலியிடங்களை நிரப்பியுள்ளன.

முன்னேற்றம் "உறைநிலையில்" முடங்கியுள்ளது. ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பிறகு, ஜாதி ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும், தேர்தல் அரசியலின் ஒரு பகுதியாக இருந்தாலும், போதுமான பிரதிநிதித்துவம் இல்லாததை நாம் காண்கிறோம் என்று தருவாலா கூறினார். வரலாற்று ரீதியாக பின்தங்கிய மற்றும் பாகுபாடு காட்டப்பட்ட சமூகங்களில் இப்போது மிகவும் படித்தவர்கள் உள்ளனர், எனவே கிடைக்கக்கூடிய திறமைசாலிகள் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது, இருப்பினும் சேர்ப்பது மெதுவாக வளர்ந்து வருவதை நாம் காண்கிறோம் என்று அவர் மேலும் கூறினார். "பதவிகளை நிரப்புவதற்கு ஆட்கள் கிடைக்காததை விட, ஆட்டத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை இது குறிக்கிறது" என்றார்.

அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு இடையே மாநிலங்களில் நிரப்பப்பட்ட காலியிடங்களில் வேறுபாடுகள் உள்ளன. அதிகாரிகளை விட கான்ஸ்டபிள்களில் அதிக காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதிகாரி மட்டத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போலீஸ் நபர்களின் பங்கு முறையே 15%, 10% மற்றும் 27% ஆகும், இது காவல்நிலையத்தில் உள்ள 16%, 12% மற்றும் 32% ஐ விட குறைவாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

"பெரும்பான்மைக் குழுவின் ஆதிக்கத்தால், காவல் துறையானது, ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு, குறிப்பாக சாதி அடிப்படையிலான கொடுமைகளுக்கு அடிக்கடி ஆளாகும் எஸ்.டி.க்கள் மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கு அணுக முடியாததாக இருக்கிறது" என்று ஸ்ரீவஸ்தவா கூறினார்.

கீழமை நீதிமன்றங்களில் ஜாதி அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை

ஜாதிப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நீதித்துறையும் பரந்த வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எந்தவொரு மாநிலமும் கீழம நீதிமன்றங்களில் அனைத்து சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டையும் பூர்த்தி செய்யவில்லை என்று இந்திய நீதி அறிக்கை கண்டறிந்தது.

சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே இரண்டு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்பியுள்ளன. ஆனால், பீகார், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் அனைத்து சாதிப் பிரிவுகளிலும் கீழமை நீதிமன்ற அளவில் காலியிடங்கள் உள்ளன.

ஆறு மாநிலங்களில் எஸ்டி பிரிவில் 90%க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன, மூன்று மாநிலங்கள் - மேற்கு வங்கம் (100%), ஒடிசா (89%) மற்றும் ஜார்கண்ட் (61%) - கீழமைப் பிரிவில் 60% க்கும் அதிகமான காலியிடங்கள், எஸ்சி பிரிவில் உள்ளன.

எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 10% க்கும் குறைவான எஸ்டி நீதிபதிகள் உள்ளனர் மற்றும் மூன்று மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று அறிக்கை கூறுகிறது. சிறிய மாநிலங்களில், கோவாவில் எஸ்சியில் 100%, எஸ்டியில் 65% மற்றும் ஓபிசியில் 85% ஆகிய பிரிவுகளில் அதிக காலியிடங்கள் உள்ளன.

"ஆணாதிக்க மற்றும் சில சமயங்களில் சாதி அடிப்படையிலான சட்டத் தொழிலின் இந்த அமைப்பு... மாற வேண்டும்" என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நவம்பர் 2022 இல் கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.

“...உயர் நீதித்துறையில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மைக்கு அரசு உறுதிபூண்டுள்ளது...” என்று அரசாங்கம் மார்ச் 2023 இல் பாராளுமன்றத்தில் தெரிவித்தது. உயர் நீதிமன்றங்களில் 575 நீதிபதிகள் நியமனத்தில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் இல்லை. 2018 மற்றும் மார்ச் 20, 2023 க்கு இடையில் நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆறு பேரில் ஒருவர் மட்டுமே எஸ்சி (17), எஸ்டி (9) அல்லது ஓபிசி (67) மற்றும் 18 சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பதில் கூறுகிறது.

மார்ச் 2023 இல், பணியாளர்கள், பொதுக் குறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த உயர் நீதிமன்றங்களில் 30% காலியிடங்கள் உள்ளன. ஆறு உயர் நீதிமன்றங்களில் 40% மற்றும் அதற்கு மேல் காலியிடங்கள் உள்ளன, மேலும் ஆறு உயர் நீதிமன்றங்களில் 30% முதல் 40% வரையிலான காலியிடங்கள் உள்ளன.

பொது நிறுவனங்கள் நாட்டின் சமூகப் பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும், மேலும் பலதரப்பட்ட நீதித்துறை இந்தியர்களின் உலகக் கண்ணோட்டங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் பிரதிபலிக்கும் என்று பெங்களூரைச் சேர்ந்த சட்டம் மற்றும் நீதி சீர்திருத்த சிந்தனையான DAKSH இன் ஆராய்ச்சி மேலாளர் லியா வர்கீஸ் கூறினார். "இது நிறுவனம் மற்றும் அதன் நம்பகத்தன்மையின் மீதான பொது நம்பிக்கையை அதிகரிக்கிறது" என்றார்.

இட ஒதுக்கீடு முறை மட்டும் போதாது

"எந்தவொரு நிறுவனத்திலும் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த இடஒதுக்கீடு முறையை உருவாக்குவது போதுமானதாக இல்லை, நீதித்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல" என்று வர்கீஸ் கூறினார். "ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரிவுகளின் உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கு ஆட்சேர்ப்புக்கு பொறுப்பான நிறுவனம் செயலூக்கமான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம், அதனால் அத்தகைய ஒதுக்கீடுகள் நிரப்பப்படும்" என்றார்.

தருவாலாவின் கூற்றுப்படி, நிறுவனங்கள் தங்கள் சொந்த சார்புகளை அடையாளம் காணவும், அவற்றை சரிசெய்யவும், நல்ல நடைமுறை மற்றும் தவறான நடத்தைகளை ஊக்குவிக்கவும் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், காவல்துறை மற்றும் நீதித்துறையில் போதிய சாதி மற்றும் பாலின வேறுபாடுகள் மற்றும் பாலினம் மற்றும் சாதி பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துக்களை, இந்தியாஸ்பெண்ட் கேட்டுள்ளது. தொடர்ந்து நிரப்பப்பட்ட ஜாதி- ஒதுக்கீடு காலியிடங்கள் மற்றும் அதற்கான அணுகுமுறை குறித்து கர்நாடக காவல் துறையிடம் கேட்டுள்ளோம். பதில்களைப் பெறும்போது இக்கட்டுரையைப் புதுப்பிப்போம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.