புதுடெல்லி: இந்த மாத தொடக்கத்தில், அர்ஜுன் சர்மா (வேண்டுகோளின்படி, பெயர் மாற்றப்பட்டது) டெல்லியில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு தனது தந்தையுடன் சென்று, அவருக்கு ஆக்ஸிஜன் படுக்கையைப் பெற முயன்றார். ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் அவரது தந்தைக்கு கோவிட்-19 க்கு எதிர்மறை கண்டறியப்பட்டது, ஆனால் நோயின் அறிகுறிகள் அவரிடம் தென்பட்டன - அவரது ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிட்டது மற்றும் சி.டி. ஸ்கேன் அவரது நுரையீரலில் தொற்று மற்றும் நிமோனியாவைக் காட்டியது.

"நாங்கள் கலந்தாலோசித்த டாக்டர்கள், என் தந்தைக்கு பெரும்பாலும் கோவிட்-19 இருப்பதாகவும், ஆக்ஸிஜன் பெற, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அவருக்கு தீவிர அறிகுறிகள் இருந்தபோதிலும், பரிசோதனை எதிர்மறையாக இருந்தது, இது தவறான-எதிர்மறை சோதனை விளைவாக இருக்கலாம்" என்று கிழக்கு டெல்லியில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர் சர்மா கூறினார்.

சர்மா தனது தந்தையுடன் சென்ற மூன்று மருத்துவமனைகளும், அவரை அனுமதிக்க விரும்பவில்லை. அவரது தந்தைக்கு கோவிட்-19 நேர்மறை இருந்தால், அவர்கள் இடமளிக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவருக்கு பரிசோதனை எதிர்மறை என்று காட்டியதால், கோவிட்-19 நேர்மறை கண்டறியப்பட்டவர்களுக்கு மட்டுமே அவர்கள் படுக்கைகளை வைத்திருப்பதால், அவருக்கு படுக்கையை வழங்க முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.

பல நாட்கள் போராடிய பின்னர், டெல்லியில் உள்ள பிற சிவில் சமூக தொண்டர்களின் உதவியைப்பெற்று, சர்மா தனது தந்தையை கிழக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார், அங்கு அவரது தந்தை ஏப்ரல் 25ம் தேதி முதல், ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் இருக்கிறார்.

கோவிட்-19 கண்டறிதலில் துல்லியத்திற்கு இன்றியமையாத ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, தவறான எதிர்மறைகளைத் தருகிறதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, மேலும் இது புதிய கோவிட்மாறுபாடுகளைக் கண்டறிவதில் பரிசோதனையால் முடியாதது குறித்து சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டது. சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்கள் கோவிட்-19 இன் அறிகுறிகளைக் காட்டலாம், ஆனால் அவர்களின் பரிசோதனைகள் எதிர்மறையான முடிவுகளைத் தருகின்றன. மற்ற சந்தர்ப்பங்களில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சோதனை கருவிகளின் பற்றாக்குறை காரணமாக மக்கள் பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது, ஆனால் கோவிட்-19 அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். எந்த வகையிலும், ஆர்டி-பி.சி.ஆர் சோதனையின் தன்மை பலருக்கு சிக்கலானது என்பதை நிரூபிக்கிறது.

கோவிட் -19 க்கான ஆர்டி-பி.சி.ஆர் எதிர்மறை சோதனை செய்து கொண்டவர்கள், அறிகுறிகள் இருந்தால், டெல்லி மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஒப்புக் கொண்ட டெல்லி அரசு, ஏப்ரல் 23 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. "மருத்துவ உதவி தேவைப்படும் எந்த நோயாளிக்கும் சிகிச்சை மறுக்கப்படக்கூடாது" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மக்களை பரவலாக பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை வல்லுநர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி உள்ளனர், மேலும் கடுமையான தீவிரமான சுவாச நோய் அல்லது இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட கோவிட்-19 க்கு பரிசோதிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவர்களின் அறிகுறிகள் இதற்கு ஒத்தவை.

இது கோவிட்-19 என்று சொல்ல வேறு வழிகள்

நோயாளிகள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவது "இது மிகவும் பொதுவானது, அரிதானது அல்ல", ஆனால் இது பரிசோதனை முடிவுகளில் காண்பிக்கப்படாமல் இருப்பது அப்படியல்ல என்று, ஹரியானாவின் பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தீவிர சிகிச்சை பிரிவு நுரையீரல் மற்றும் சிக்கலான பராமரிப்பு மருத்துவத்துறையின் மூத்த குடியிருப்பாளர் கம்னா கக்கர் கூறினார்.

"ஆர்டி-பி.சி.ஆர் சோதனை ஒரு நல்ல சோதனை என்றாலும், பஞ்சு குச்சியால் சளி மாதிரி எவ்வாறு எடுக்கப்பட்டது, மாதிரியை எடுக்கும் அளவுக்கு ஆழமாக சென்றதா, அல்லது அந்த நபர் மிகவும் தாமதமாக சோதனையை மேற்கொண்டாலோ மற்றும் வைரஸ் இல்லை என்பதில் சிக்கல்கள் இருந்திருக்கலாம். மேல் சுவாச மண்டலத்தில் நீண்ட நேரம் வைரஸ் இல்லாதிருத்தல், ஆனால் வீக்கம் நுரையீரலுக்குள் இருப்பது". இவை அனைத்தும் எதிர்மறையான ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

ஆய்வக அறிக்கைகள் மட்டுமல்லாமல், அவற்றின் அறிகுறிகளாலும் நோய்களை அடையாளம் காண மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது இதனால்தான் என்று அவர் கூறினார்.

அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நோயாளிகள் மற்றும் பரிசோதனைகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே, சில ப்ராக்ஸிகளை கோவிட்-19 ஐ கண்டறிவதற்கு மருத்துவர்கள் நம்பலாம் என்று கூறும் கக்கர், இந்த சோதனைகளை மக்கள் எளிதில் அணுக முடியவில்லை.

இருப்பினும், ஒரு மருத்துவமனைக்கு வரும்போது நோயாளிகளைச் சந்திப்பது பெரும்பாலும் இளைய மருத்துவர்கள்தான் என்று அவர் கூறினார். "ஒரு நபர் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலுடன் வரும்போது, ​​ஒரு மூத்த நபராக, இது பல விஷயங்களாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும் - இது கோவிட் -19, மாரடைப்பு, டெங்கு, ஸ்க்ரப் டைபஸ், சிக்குன்குனியா, அமில ரிஃப்ளக்ஸ் கூட இருக்கலாம். எனவே இங்கே மருத்துவ தீர்ப்பு மிகவும் முக்கியமானது, வித்தியாசத்தை சொல்ல முடியும்" என்றார். ஆனால் முன் வரிசையில் பெரும்பாலும் இளைய மருத்துவர்கள் இருப்பதால், அமைப்பு ரீதியாக அதிக சுமை கொண்டுள்ளதால், நோயாளிகளை அனுமதிக்க ஆர்டி-பி.சி.ஆர் சோதனை முடிவுகள் போன்ற ஆய்வக அளவுருக்களை நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர், என்று அவர் விளக்கினார்.

"கோவிட்-19 க்கான நம்பகமான ஆர்டி-பிசிஆர் சோதனைகள் நம்மிடம் இல்லையென்றால், ஒரு நோயாளியின் நோயைப் பற்றிய மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் இன்னும் நோய்க்குரியவர்களுக்கு சிகிச்சை அளித்திருக்க மாட்டார்கள் அல்லவா?" என்றார் கக்கர்.

தவறான எதிர்மறைகள்

ஒரு நபருக்கு உண்மையில் ஒரு குறிப்பிட்ட நோய் இருக்கும்போது, ​​அதற்கான நோயறிதல் சோதனை அந்த நோயைக் கண்டறியத் தவறும் போது, பேச்சு வழக்கில் அதனை ஒரு 'தவறான எதிர்மறை' என்கிறோம்.

பரிசோதனையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் துல்லியமாக இல்லாவிட்டால், அல்லது அந்த நோயை கண்டறியும் அளவுக்கு குறிப்பிட்ட அல்லது உணர்திறன் இல்லாதிருந்தால், இது நிகழலாம். சோதனையைச் செய்யும் தொழில்நுட்ப வல்லுநர் அதை சரியாக நடத்தவில்லை, அல்லது பயன்படுத்தப்படும் நுட்பம் தரமற்றவையாக இருப்பதால் இதுவும் நிகழலாம். சில நேரங்களில் தொழில்நுட்பம் நன்றாக இருந்தாலும், எடுக்கும் மாதிரி சரியாக எடுக்கப்பட்டாலும், பொருத்தமற்ற சூழ்நிலையில் மாதிரி ஒரு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம்.

மேலும், நாங்கள் முன்பு கூறியது போல், ஒருவரின் நோய்த்தொற்றில் சரியான நேரத்தில் மாதிரி எடுக்கப்படாவிட்டால், தவறான எதிர்மறை சோதனை முடிவுகள் ஏற்படலாம்.

மாறுபாடுகளுக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா?

தவறான எதிர்மறைகளின் இருப்பு, புதிய சார்ஸ்-கோவ்-2 வகைகளுடன் தொடர்பு கொள்ளவில்லை என்று இந்திய அரசு கூறியுள்ளது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் இங்கிலாந்து, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் இரட்டை விகாரி வகைகளைத் தவறவிடாது, ஏனெனில் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சோதனைகள் இரண்டு மரபணுக்களுக்கு மேல் குறிவைக்கின்றன என்று, ஏப்ரல் 16 அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.

கோவிட்-19 க்கான ஆர்சி-பிசிஆர் சோதனைகள் சார்ஸ்-கோவ்-2 வைரஸில் மூன்று மரபணுக்கள் இருப்பதைக் கவனிக்கின்றன. இந்த மரபணுக்கள் பெரிதும் மாறவில்லை, இதனால் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் இந்த மரபணுக்களை அடையாளம் கண்டு சாதகமான முடிவுகளை அளிக்க முடிகிறது என்று, அசோகா பல்கலைக்கழகத்தின் திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸ் இயக்குனர் ஷாஹித் ஜமீல் கூறினார். "விஞ்ஞானிகள் ஆராயும் புதிய வகைகள், கோவிட் -19க்கு சாதகமான முடிவுகளைத் தர, ஆர்.டி.-பி.சி.ஆர் சோதனைகளின் திறனை கடுமையாக பாதிக்காது" என்று அவர் கூறினார்.


பரிசோதனைகள் செயல்படுகின்றனவா என்பதை சரிபார்க்க ஒரு வழியாக, சீரற்ற தரச்சோதனைகள் மற்றும் இந்த சோதனை கருவிகளின் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்றார்.

இது குறித்து, இந்தியாவின் பெரிய நோயறிதல் சங்கிலியான தைரோகேரின் தலைவரான அரோக்கியஸ்வாமி வேலுமணி, ஆர்.வி.டி-பி.சி.ஆர் சோதனைகள் கோவிட் -19 க்கு துல்லியமான வேலையைச் செய்யாததால் அவரும் கவலைப்படவில்லை என்று கூறினார். "நமது பரிசோதனை முடிவுகள் சரிபார்க்கப்படும், நியமிக்கப்பட்ட அரசு ஆய்வகங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 நேர்மறை மற்றும் எதிர்மறை மாதிரிகளை அனுப்ப, அரசு கேட்டுள்ளது… இந்த பரிசோதனைகள் துல்லியமானவை என்பதை உறுதிப்படுத்த, இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, நாம் சரியாக சோதனை செய்கிறோம், "என்று அவர் கூறினார்.


எப்போது சோதனை செய்ய வேண்டும்?

மக்கள் எதிர்மறையான கோவிட்-19 பரிசோதனை முடிவைப் பெறுவதற்கான மற்றொரு காரணம், ஆனால், அவர்கள் தொற்றுநோயை முன்கூட்டியே அல்லது தாமதமாக சோதித்தால், உண்மையில் வைரஸுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் பரிசோதனைக்கு சரியான நேரம் எப்போது?

கோவிட்-19 க்கான பரிசோதனையில் உலக சுகாதார அமைப்பு (WHO) பகிர்ந்துள்ள பல ஆதாரங்களில், எப்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல் இல்லை. சில கேள்விகளுடன், உலக சுகாதார அமைப்பை, இந்தியாஸ்பெண்ட் தொடர்பு கொண்டது, மேலும் அதன் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் வழியாக பின்வரும் விளக்கத்தை அளித்தார்: ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் பொதுவாக "மிகவும் துல்லியமானவை" ஆனால் "குறைந்த வைரஸ் சுமை என்பது, தவறான எதிர்மறை முடிவுகளின் சாத்தியத்தை அதிகரிக்கும்".

சார்ஸ் - கோவ்-2 வைரஸின் சுமை எப்போது குறைவாக இருக்கும்? இது குறித்து, செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, அல்லது அறிகுறிகள் தொடங்கும் நேரத்தில், மற்றும் லேசான நோயாளிகளுக்கு (ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை) நோயின் ஆரம்ப நாட்களில், மற்றும் நீண்ட காலமாக வைரஸ் சுமைகள் அதிகமாக இருக்கும் கடுமையான நோயாளிகளுக்கு.

"அவர்களுக்கு அறிகுறிகள் தோன்றினால் தவிர, ஒரு நபர் எப்போது பரிசோதிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த நேரமும் இல்லை. ஒருவருக்கு அறிகுறிகள் உருவானால், அவர்கள் விரைவில் பரிசோதிக்கப்பட வேண்டும்," என்று அவர்கள் கூறினர். அறிகுறிகள் "வெளிப்பட்ட சில மணிநேரங்களில் இருந்து சில நாட்களில் உருவாகக்கூடும்" என்பதால், "சோதனைக்கு குறிப்பிட்ட நேரம் இல்லை" என்று அவர்கள் கூறினர்.

எளிமையாகச் சொன்னால், ஒருவர் கோவிட்-19 நேர்மறையை பரிசோதித்த ஒருவருடன், திட்டவட்டமான அருகாமையில் இருந்திருந்தால் அல்லது ஒருவர் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியிருந்தால், அறிகுறிகள் அதிகரிக்கும் வரை காத்திருக்கக்கூடாது என்றால், ஒருவர் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொண்டு விரைவில் பரிசோதனை செய்ய வேண்டும்.

நெருங்கிய தொடர்புகள் பற்றி என்ன? இது குறித்து, அனைத்து தொடர்புகளையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது, ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் இந்த தொடர்புகள் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், அவற்றை "திறன் அனுமதிப்பதால்" சோதிக்க முடியும்.

மொத்தத்தில், "பாதுகாக்கும் காலத்தின் மீதமுள்ள நாட்களில், ஒருவர் கோவிட்-19 ஐ உருவாக்க மாட்டார் என்பதற்கு ஒரு எதிர்மறை சோதனை முடிவு உத்தரவாதம் அளிக்காது" என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். தவறான எதிர்மறைகள் "மோசமான மாதிரி அல்லது செயலாக்கம்" காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர். சுகாதார அமைப்புகள் வலியுறுத்தப்படும்போது, ​​"மனித பிழையின் வாய்ப்புகள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அதிகரிக்கக்கூடும்".

இந்திய அரசு பரிசோதனை மூலோபாய ஆவணங்களை வெளியிட்டது, அது அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது, ஆனால் 2020 மே முதல் அல்ல. இந்த மூலோபாயத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒரு ஆலோசனை செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு ஆவணங்களும் ஒரு நபரின் நோய்த்தொற்றில் எப்போது பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.