புதுடெல்லி: மென்பொருள் தொழில்முனைவோரான நியதி சந்தர், 30, என்ற பெண், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பாலின சார்புக்கு ஆளானார். பெங்களூருவைச் சேர்ந்த மேலாண்மை பட்டதாரியான அவர், சிறு குறு தொழில்முனைவோராக (MSME), 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எட்டு ஊழியர்களுடன் ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். "நான் வாழ்க்கையில் எங்கு செல்கிறேன் என்பதைக் கட்டுப்படுத்த நான் விரும்பினேன்," என்று அவர் கூறினார்.

முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் முதல் ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் முன்னாள் சகாக்கள் வரை யாரும், தன்னை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை சந்தர் கண்டார். "எங்களுக்கு என்ன வேண்டும் என்று எங்களுக்கு தெரியாது என்று பரவலாக மக்கள் கருதுகிறார்கள். நாங்கள் அலுவலக இடத்தைத் தேடும்போது, நில உரிமையாளரின் பதில் மின்னஞ்சல்கள் எனது ஆண் இணை நிறுவனருக்குத்தான் செல்லும், ஆனால் நான் பிரதான நிறுவனர் என்பது பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது - அது இறுதி அழைப்பு அவருடையதாக இருக்கும் என்று கருதப்பட்டது, "என்று அவர் கூறினார். நெட்வொர்க்கிங் தளங்கள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன, பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எதுவும் இல்லை. உங்கள் திறமைகள், கல்வி, வயது [ஆண்களை விட] மிக நெருக்கமாக பகுப்பாய்வு செய்யப்படுகின்றன" என்றார் அவர்.

பெண் வணிக உரிமையாளர்கள் 2030 ஆம் ஆண்டில் இந்தியாவில் 150-170 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று 2019 ஆம் ஆண்டின் 'Powering The Economy With Her: Women Entrepreneurship In India' என்ற அறிக்கை தெரிவித்தது. போஸ்டனை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான கூகிள் மற்றும் பெயின் & கம்பெனி இணைந்து வெளியிட்டுள்ளன.

பெண் தொழில்முனைவோர் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது ஏனெனில் இது தொழிலாளர் படையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது, ஒரு நேரத்தில் இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்களிப்பு வீதம் (FLFPR), வரலாற்றில் குறைந்தபட்சமாக 2017-18ல் 17.5% ஆக குறைந்துள்ளது. தி எகனாமிஸ்ட் இதழின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 7% மட்டுமே தற்போது வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆயினும்கூட, இந்தியாவில் 100 தொழில்முனைவோர்களில் ஏழு பேர் மட்டுமே பெண்கள், அவர்களில் பாதி பேர் (49.9%) விருப்பத்திற்கு மாறாக தேவையின்றி வணிகத்தில் இறங்குகிறார்கள் என்று, பாலின ஆராய்ச்சி மற்றும் ஆலோசக அமைப்பான, பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் (IWWAGE) அமைப்பின் நவம்பர் 2020 அறிக்கை கூறுகிறது.

உலகளவில், வணிகத்தில் பாலின இடைவெளிகள் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது - இந்தியாவில் ஆரம்ப கட்ட தொழில்முனைவோர்களில் 33% மட்டுமே பெண்கள் என்று, 'இந்தியாவில் பெண் சொந்தமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ) நிதி சேர்க்கை' என்ற தலைப்பிலான சர்வதேச நிதிக்கழகத்தின் (IFC) ஆகஸ்ட் 2019 அறிக்கை கூறியது. பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் (IWWAGE) அறிக்கையின்படி, பெண் தொழில்முனைவோர் குறியீட்டில் உள்ளடக்கப்பட்ட 77 நாடுகளில் இந்தியாவும் 70 வது இடத்தில் உள்ளது.

"உலகளவில், இது [பெண் தொழில்முனைவோர்] அதிகாரம் அளிப்பதற்கான ஒரு கருவியாகும், ஏனெனில் இது தொழில்முனைவோருக்கு முடிவுகளை எடுக்கவும், வழிநடத்தவும், நிர்வகிக்கவும் மற்றும் உற்பத்தியில் திறன்களை வளர்க்கவும் தனிப்பட்ட தலைமைக்கு உதவுகிறது," என்று, IWWAGE இன் முதன்மை பொருளாதார நிபுணர் சோனா மித்ரா கூறினார். ஒரு வணிகத்தை நடத்துவதும் பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக சுதந்திரம், நிதி சுதந்திரத்தை அனுமதிக்கிறது என்று, கொள்கை மற்றும் ஆராய்ச்சி குழுவின் நிகோர் அசோசியேட்ஸ் நிறுவனர் மிதாலி நிகோர் கூறினார்.

ஏன் இந்திய பெண்கள் வியாபாரத்தில் மோசமாக பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள்? ஆலோசனை அமைப்பு முதல் மளிகைக் கடைகள் வரை பலவிதமான நிறுவனங்களை நடத்தும் பெண்களை நாங்கள் நேர்காணல் செய்தோம்; அவர்கள் பாலின சார்புகளால் ஒவ்வொரு அடியிலும், நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தால் தடைபடுவதைக் கண்டறிந்தோம்.

எங்களது இரண்டு பகுதிகளை கொண்ட கட்டுரையில், வணிகங்களில் பெண்கள் பங்கேற்பதைத் தடுக்கும் காரணிகளை விரிவாக ஆராய்வோம். முதலாவது பகுதியில், மிகப்பெரிய தடையாக உள்ளவற்றை நாம் பார்க்கிறோம்: அது, நிதி அணுகல். இரண்டாவது பகுதியில், பெண் தொழில்முனைவோரைத் தடுக்கும் பிற பிரச்சினைகள் -- ஆதரவு வலைபின்னல் இல்லாதது, வளைந்த சமூக விதிமுறைகள் மற்றும் நடமாடுவதற்கான தடை -- மற்றும் இந்த சிக்கல்களை எவ்வாறு சிறப்பாகச் சமாளிப்பது என்பது குறித்த நிபுணர்களின் பரிந்துரைகளைத் தொகுத்து தரவுள்ளோம்.

நாங்கள் நேர்காணல் செய்த ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரும் கடன் விண்ணப்பங்கள் நிறுவனங்களால் நிராகரிக்கப்படுவதாகவோ, அல்லது தாமதமாக வருவதாகவோ புகார் கூறினர். இந்த சார்பு ஏற்கனவே ஆய்வுகளால் நிறுவப்பட்டுள்ளது - 2019 ஐஎஃப்சி அறிக்கையின்படி, நாட்டின் பெண் தொழில்முனைவோரின் மொத்த நிதித் தேவையில் 70%க்கும் மேலானது. பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சில அரசு திட்டங்கள் போதுமானதாகத் தெரியவில்லை அல்லது சிவப்பு நாடாவில் பிணைக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.


பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் தொற்றால் அதிக பாதிப்பு

மொத்த ஆரம்ப கட்ட தொழில்முனைவோர் செயல்பாடு (TEA) வீதம் என்பது மக்கள் தொகையில் பணிபுரியும் வயது முதிர்ந்தவர்களின் சதவீதமாகும், அவர்கள் புதிய தொழில்முனைவோர் அல்லது புதிய வணிகங்களின் உரிமையாளர்-மேலாளர்கள். இந்தியாவில், ஆண் ஆரம்ப கட்ட தொழில்முனைவோர் செயல்பாடு வீதத்துடன் ஒப்பிடுகையில் பெண் ஆரம்ப கட்ட தொழில்முனைவோர் செயல்பாடு விகிதம் 2018 மற்றும் 2019 க்கு இடையில் 79.6% முதல் 62.1% வரை குறைந்துள்ளது என்று 2020 பவர்ஹவுஸ் ஆஃப் ரிக்கவரி என்ற பெண் தொழில்முனைவோர் அறிக்கையை சுட்டிக்காட்டி, பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சி தெரிவிக்கிறது. 2018 ஆம் ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு அரசு அழுத்தம் கொடுத்தபோதும், இது இருந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 95% வரை நுண் வணிகங்கள் மற்றும் பெண்களுக்கு இந்த சதவீதம் இன்னும் அதிகமாக உள்ளது - 2019 ஐ.எஃப்.சி அறிக்கையின்படி, பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 98% நுண் பிரிவில் உள்ளன. தொற்றுநோயால் உருவான நெருக்கடியில் முதலில் மடிந்த, பாதிக்கப்படக்கூடிய வணிகங்கள், நாங்கள் விளக்குவது போல, இவைதான்.

இந்தியாவில் சுமார் 63 மில்லியன் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உள்ளன, இவற்றை சுமார் 8 மில்லியன் பெண்களே நடத்துகிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவை - அவை விவசாயத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய முதலாளிகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு கூகிள்-பெயின் அறிக்கை 13.5 - 15.7 மில்லியன் அல்லது அனைத்து நிறுவனங்களிலும் 20% பெண்களுக்கு சொந்தமானவை என்று மதிப்பிட்டுள்ளது. முந்தைய மதிப்பீட்டில், ஆறாவது பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு (2013-14) இந்தியாவில் 13.76% நிறுவனங்களுக்கு பெண்கள் சொந்தமானது என்று கணக்கிட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், இந்த புள்ளிவிவரங்கள் பெண்களுக்கு மேம்படுகின்றன, ஆனால் ஒரு சிறிய சதவீதத்தால் மட்டுமே: இந்தியாவில் உள்ள 63.3 மில்லியன் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில், 60.8 மில்லியன் (96%) தனியுரிமக் கவலைகள் மற்றும் ஆண்களில் 79.6% நிறுவனங்கள் மற்றும் பெண்கள், 20.4%, என்று, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் 2019-20 ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, 2020 ஆம் ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்தது. அக்டோபர் 2020 பைன்-கூகுள்-ஏ.டபிள்யு அறக்கட்டளை அறிக்கையின்படி, பெண்கள் நடத்தும் தொழில்களில் 73% மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 20% மூடும் நிலையில் இருந்தபோதிலும், பெண் தொழில்முனைவோருக்கு உதவ குறிப்பிட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. நானோ மற்றும் உணவு மற்றும் சிகரெட் ஸ்டால்கள் போன்ற சிறிய கடைகள்,குறைந்த வருவாய் கொண்டவை, முதலில் அங்குதான் தொற்றின் தாக்கம் வீசின. இந்த நெருக்கடி, ஏற்கனவே குறைந்திருந்த இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்களிப்பு வீதத்துடன் மேலும் சரிவை சந்தித்தது.

பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட மெக்கின்சி குளோபல் இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய ஆய்வின்படி, பெண் தொழில்முனைவோர் மற்றும் பணியாளர்கள் இருவருமே பாலின சார்பு காரணமாக பணிநீக்கங்கள் மற்றும் வணிக இழப்புகளால் தங்கள் ஆண் சகாக்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 90% பெண் தொழில்முனைவோர், ஊரடங்கிற்கு பிந்தைய விற்பனை வருவாயில் குறிப்பிடத்தக்க குறைவைக் கண்டனர். பண்புரீதியான குறைந்த அளவிலான இலாபங்கள் மற்றும் அதிக ஊதியம் பெறாத மற்றும் வீட்டு வேலைகள் இருப்பதால், பெண்கள் தலைமையிலான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் மிக மெதுவாகவே தாக்கத்தில் இருந்து மீளச் செய்தன.

இணையாளர் இல்லையா, கடனும் இல்லை

இந்தியாஸ்பெண்ட் பேட்டி கண்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண் தொழில்முனைவோரும் நிறுவன நிதியை அணுகுவதில் உள்ள கஷ்டங்களைப் பற்றி பேசினர். பெரும்பாலும் சமூக அணுகுமுறைகள் மற்றும் சார்பு தொடர்பான பிரச்சினைகள், இணையாளர் அடிப்படையிலான கடன்கள் --பெரும்பாலான பெண்களுக்கு சொத்து இல்லை என்பதால் -- பெறுவதில் சிரமம், மற்றும் இணையாளர் -இலவச நிதியுதவி உள்ளிட்ட நிதித் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லை.

ஐ.எஃப்.சி அறிக்கைக்கான ஒரு ஆய்வில் நேர்காணல் செய்யப்பட்ட பெண் தொழில்முனைவோர்களில் 17% மட்டுமே அரசு அல்லது நிதி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட நிதித் திட்டங்கள் குறித்து அறிந்திருந்தனர். அறிந்தவர்களிடையே கூட, திட்டங்களின் குறிப்பிட்ட அம்சங்கள், அவற்றின் சவால்கள் மற்றும் அணுகல் புள்ளிகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் பொருத்தம் குறித்து குறைந்தளவே தெளிவு இருந்தது.

40 வயதான கவ்னீத் சாஹ்னி, சமையல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தனது சமையல் ஆலோசனை அமைப்பை, ஒரு நுண் நிறுவனமாக 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்தார். "எனது பார்வை என்னவென்றால், உணவு நிகழ்ச்சிகள் இங்கே அடுத்த பெரிய விஷயமாக இருக்கும், எனவே இந்த கனவை என் வீட்டின் அடித்தளத்தில் இருந்து தொடர, நான் வேலையை விட்டுவிட்டேன்," என்று அவர் கூறினார். குருகிராம் பகுதியை சேர்ந்த இவர் இப்போது 10 பேர் கொண்ட குழுவை நிர்வகித்து ரூ .1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளார். ஆனால் இது ஒரு கடினமான பயணம் என்று அவர் கூறினார்.

"நான் 2012 இல் தொடங்கியபோது, ​​வங்கிகள் எனக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டன, ஏனெனில் எனக்கு இணை கணக்காளர் இல்லை. எனது தனிப்பட்ட நிதி சேமிப்புகளை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது, "என்று அவர் கூறினார். இந்தியாவின் பாலின-வளைந்த காலம்காலமான சட்டங்களைப் பொறுத்தவரை, பெண்கள் வரலாற்று ரீதியாக அரிதாகவே சொந்தமான சொத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆகவே,பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பு அறிக்கை காட்டியபடி, தொடக்கக்கடன்களை பெறுவதற்கு தேவையான இணை அவர்களுக்கு இல்லை. பெண்களுக்கு சமமான சொத்துரிமைகளை வழங்கிய உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 2020 தீர்ப்பு, இந்த சூழ்நிலையை மாற்ற முற்படுகிறது.

தங்கள் தொழில்களுக்கு முறையான கடன் பெறாமல் ஏன் விலகினீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ​​சுமார் 36% பெண் தொழில்முனைவோர் தாங்கள் தனிப்பட்ட வளங்களைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறினர், மேலும் 25% பேர், 'மட்டுப்படுத்த பிணை அணுகல்' இருந்ததாக, 2019 ஐ.எஃப்.சி. அறிக்கை கூறியது. ஆய்வின் படி இதில் இரண்டு குறிப்பிடத்தக்க காரணிகள் உள்ளன: முதலாவதாக, பெரும்பாலான பெண்களுக்குச் சொந்தமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் - 95.6% - பதிவு செய்யப்படாதவை, அதாவது நிறுவன நிதியை அவர்களால் அணுக முடியாது. மேலும், பதிவுசெய்யப்பட்ட மற்றும் செய்யக்கூடிய மற்றும் செய்தவற்றுக்கும் கூட - நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற, அனுமதிக்கப்பட்ட கடன் தொகை, தேவைப்படும் சராசரி தொகையில் 68% மட்டுமே.

ஐ.எஃப்.சி ஆய்வின்படி, இந்த பாரபட்சத்திற்கு எந்த அடிப்படையையும் தரவு காட்டவில்லை. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதேபோன்ற சராசரி ஆண்டு லாபத்தை ஈட்டினர் - ஆண்கள் ரூ .2.82 லட்சமும், பெண்கள் ரூ .2.68 லட்சமும் சம்பாதித்தனர். ஆனால் கடன்களுக்கு விண்ணப்பித்த பெண் தொழில்முனைவோர் ஆண்களை விட (8%) இரண்டு மடங்கு நிராகரிப்புகளை (19%) எதிர்கொண்டனர். நாங்கள் கூறியது போல், நாட்டின் பெண் தொழில்முனைவோரின் மொத்த நிதித் தேவையில் 70% பொருந்தவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டில், சாஹ்னி பெரிய ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டை பெற்ற போது, ஒரு தனியார் வங்கி அவருக்கு இணையாளர் இல்லாமலேயே கடனை வழங்கியது. தொற்றுநோய் தாக்கம், அவரது தொழில்களை மோசமாக பாதித்தது - அவர் ஐந்து மாதங்களுக்கு தனது அலுவலகத்தை மூடியதோடு, சம்பளம் பெறுவதையும் தள்ளிப்போட வேண்டியிருந்தது. ஒரு பெண்ணாக இருப்பதால் அவரால் நெருக்கடியைச் சமாளிக்க முடியாது, எனவே தொழிலை கைவிட்டுவிடுவார் என்றே எதிர்பார்த்தனர்.

"ஆனால் நான் கிளர்த்தெழ விரும்பினேன், மேலும் தொற்றுநோய் போன்ற கடினமான நேரத்தில் நிறுவனத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கூட, பின்னர் நிறுவனத்தை நாங்கள் கையாள / நிர்வகிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினேன்" என்று சாஹ்னி கூறினார். ஊரடங்கை தொடர்ந்து, வணிகங்கள் தடை பட்டதால், மார்ச் மாதத்தில் மூன்று மாத கடன் வசூலை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டது. பின்னர் இது ஆகஸ்ட் 31, 2020 வரை நீட்டிக்கப்பட்டது. "முதல் தடைக்காலத்தில், எங்களுக்கு இரண்டு மாதங்கள் மட்டுமே நிவாரணம் கிடைத்தது, இரண்டாம் முறை, எங்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. நாங்கள் மாதத்தவணைகளை சரியான நேரத்தில் செலுத்தி வந்தோம். ஆனால் காரணங்களை குறிப்பிடாமல், வங்கி நீட்டிப்புத்தர மறுத்தது. நாங்கள் வங்கிக்கு எழுதினோம், ரிசர்வ் வங்கி கூட அனுப்பினோம். ஆனால் எந்த பதிலும் இல்லை. இதுபோன்ற நேரத்தில் பெண்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு சில நிவாரணம் அல்லது சிறப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்க வேண்டும்," என்று சாஹ்னி கூறினார்.

தெற்கு டெல்லியின் ஓக்லா தொழில்துறை பகுதியில் காய்கறி விற்பனை செய்யும் ரிதா தேவி (40) நடத்தி வரும் சிறு வியாபாரத்தையும் தொற்றின் தாக்கம் விட்டுவைக்கவில்லை. தனது நுண் வணிகத்தை தக்க வைத்துக் கொள்ள, சிறிய கடனுக்கான அணுகலை வழங்கும் முத்ரா போன்ற அரசின் திட்டங்களைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஊரடங்கின் போது தனது வண்டிகளில் வாடகை செலுத்துவதற்கும் வீட்டு செலவுகளை நிர்வகிப்பதற்கும் அவள் ரூ.30,000 கடன் வாங்க வேண்டியிருந்தது. "நாங்கள் எங்கள் பக்கத்து வீட்டுக்கு வந்த ஒரு நடுத்தர வர்க்கத்திடனரிடம் கடன் வாங்கி 5% மாத வட்டிக்கு கடன்களை வழங்கினோம்," என்று அவர் கூறினார்.

கடன் பெற நீண்ட காத்திருப்பு

பெண்கள் கடன் பெற விரும்பினால் சராசரியாக 4-5 முறை வங்கிக்கு சென்று வர வேண்டும், ஆண்கள் இரண்டு முறை மட்டுமே போய் வந்தால் போதுமானது என்று, ஐ.எஃப்.சி அறிக்கை தெரிவித்துள்ளது.

மும்பையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரான 31 வயது அஸ்வினி மெத்ரே, கிராமப்புற கைவினைஞர்களை பணியமர்த்தும் முயற்சிக்கு திட்டமிட்டார். இதற்காக முழுத்தொகையான ரூ.49 லட்சத்தையும் கடன் வாங்க வேண்டியிருக்கும். "எனக்கு அரசு கடன் என்பது சிறந்த வழியாகத் தோன்றியது, ஏனெனில் அதற்கு இணையாளர் தேவையில்லை," என்றார். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சிறு மற்றும் நுண் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2019 ஆகஸ்டில் தொடங்கப்பட்ட, ரூ. 50 லட்சம் வரை கடனுதவி தரக்கூடிய, முதல்வரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (CMEGP) பற்றி அவர் கேள்விப்பட்டார். அவர் கடனுக்காக விண்ணப்பித்தார், ஆனால் இன்னும் அதற்காக காத்திருக்கிறார்.

"ஆறு மாதங்களாக நாங்கள் [அதிகாரிகளை] பின் தொடர்ந்து சென்று முறையிட்டோம். எனக்கு எந்தவொரு சொத்தும் இல்லை என்பதைத் தவிர எல்லாமே உரியவகையில் இருந்தன. ஆனால், இணையாளர் தேவையில்லை என்று கூறி கடன்களைக் கொடுப்பதாகக் கூறும் சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட, உத்தரவாத பாதுகாப்பைக் கேட்டன. ஒரு தனியார் வங்கி, 'நாங்கள் அரசு திட்டங்களுக்குள் இல்லை' என்றதாக, அவர் கூறினார்.


அரசின் கீழ் சிறு வணிகங்களுக்கு மூன்று அரசு கடன் திட்டங்கள் உள்ளன -- முத்ரா அல்லது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் -- ஷிஷு, கிஷோர் மற்றும் தருண். இந்த சலுகைகள் ரூ.50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கப்படுகின்றன, இவற்றில் பெண்கள் மிகக் குறைந்த நடைமுறை கொண்ட ஷிஷு திட்டத்தை கேட்க முனைகிறார்கள். "அதிக மதிப்புள்ள கடன்களைப் பெறுவதற்கான நம்பிக்கை பெண்களுக்கு இல்லை. அவர்கள் அதை மிரட்டுகிறார்கள். பெண்கள் பெண்களால் என்ன செய்கிறார்கள் என்பதை குறைத்து மதிப்பிடும் சமூக நிலைமை உள்ளது. பெண்கள் ஆபத்துக்கு புறம்பானவர்கள், எனவே அவர்கள் எளிதாக திருப்பிச் செலுத்த முடியும் என்று நினைக்கும் சிறிய கடன்களுக்கு தீர்வு காணுகிறார்கள் "என்று பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் மித்ரா விளக்கினார்.

மறுபுறம், வங்கிகள் குறைந்த வட்டியை பெறுவதால், இத்தகைய கடன்களை வழங்க தயங்குகின்றன என்று மும்பையைச் சேர்ந்த வணிக ஆலோசகர் சுபாதீப் தாஸ் தெரிவித்தார். "வணிக கடன்கள் 11-14% வட்டிக்கு வருகின்றன, முத்ரா கடனுக்கான வட்டியோ 10% க்கும் குறைவாக உள்ளன" என்று அவர் கூறினார்.

முத்ரா கடன்களை அதிகம் பெறுபவர்களாக (70%) பெண்கள் உள்ளனர். ஏனெனில் இந்தத் திட்டத்திற்கு இணையாளர் தேவையில்லை என்று, பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியரை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. "ஷிஷு கடன் பெறுபவர்களில் 80% க்கும் அதிகமானவர்கள் பெண்கள் என்பதால்,இவை பெண்கள் நானோ நிறுவனங்களை சிறந்த முறையில் உருவாக்க மட்டுமே அனுமதிக்கின்றன" என்று மித்ரா கூறினார்.

கடந்த ஆண்டு, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக திருத்தப்பட்ட வரையறை அறிவிக்கப்பட்டது: உற்பத்தி மற்றும் சேவை இரண்டுமே சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இரண்டு வகையான நிறுவனங்களுக்குப் பதிலாக ஒன்றாகக் கருதப்படும். ஆலை மற்றும் இயந்திரங்கள் / உபகரணங்கள் மற்றும் வருடாந்திர வருவாய் ஆகியவற்றில் முதலீடு ஒரு கூட்டு அளவுகோலாகக் கருதப்படும், இதற்கு முன்னர் ஆண்டு வருவாய் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும், மைக்ரோ நிறுவனங்களுக்கு, தேவையான முதலீடு ரூ .1 கோடிக்கு மேல் இருக்காது [ரூ .10 லட்சம் முதல் ரூ .25 லட்சம் வரை]; ஆண்டு வருவாய் ரூ .5 கோடிக்கு மேல் இல்லை. இதேபோல், சிறு நிறுவனங்களுக்கு ரூ .10 கோடியாக [முன்பு, ரூ .2 கோடி-ரூ .5 கோடி] மற்றும் ரூ .50 கோடி விற்றுமுதல், மற்றும் நடுத்தரத்திற்கு ரூ.50 கோடி முதலீடு [முன்னதாக, ரூ .5 கோடி-ரூ .10 கோடி ] மற்றும் விற்றுமுதல் 250 கோடி ரூபாய் என உயர்த்தி அமைக்கப்பட்டது.

"இது துறையின் எல்லைக்குட்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதன் பொருள் அதிக நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக போட்டியிடும்" என்று மிதாலி நிகோர் கூறினார். "இந்திய பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, கடன் இடைவெளி 20.52 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது,பெண்களுக்கு வரலாற்று ரீதியாக நிலம் மற்றும் பிற இணை அணுகல் குறைவாக இருப்பதால் நிலைமை மோசமடையக்கூடும்" என்றார்.

அரசு திட்டங்கள் 'தெரியவில்லை, அதிக சிவப்பு நாடா முறை'

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்பது 2008-09 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும், இது நுண் நிறுவனங்களுக்கு நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை உள்ளது - பொது வகைகளுக்கு குறிப்பிடப்பட்ட 10% உடன் ஒப்பிடும்போது அவர்கள் ஆரம்ப மூலதனத்தின் 5% மட்டுமே டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தால் பயனடைகின்ற பெண்களின் எண்ணிக்கை 2018-19 ஆம் ஆண்டில் மிக அதிகமாக இருந்தது, 25,399. ஆனால் இது அடுத்த ஆண்டு 12,529 ஆக குறைந்தது (2019 டிசம்பர் 31 வரை கிடைத்த தரவுகள் படி). 2018 ஆம் ஆண்டில், இந்திய அரசு பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரத்தை மேம்படுத்த உறுதி அளித்திருந்தது. "பெண் தொழில்முனைவோருக்கு உதவ [அரசுக்குள்] குறிப்பிட்ட கருவிகள் உள்ளன. அதையும் மீறி, ஒரு தொழில்முனைவோர் ஒரு தொழில்முனைவோர் "என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் தனியார் செயலாளர் ஒருவர் கூறினார், இது அரசின் வணிகங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை மட்டுமே வழங்க முடியும் என்பதைக் குறிக்கிறது.

அர்ச்சனா கரோடியா-குப்தா 30 ஆண்டுகளாக ஒரு ஆடை நகை வியாபாரத்தை நடத்தி வருகிறார், மேலும் அணுகல் இன்மை மற்றும் சிவப்பு நாடா முறை காரணமாக வணிக பெண்களுக்கான அரசாங்க திட்டங்கள் அரிதாகவே செயல்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். "பெண்கள் தொழில்முனைவோர் திட்டங்களுக்கு ஒருபைசா கூட நான் பார்த்ததில்லை. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு பெண்கள் தொழில்துறை பூங்காவில் ஒரு ஒதுக்கீடு மட்டுமே எனக்கு கிடைத்தது, இது 1999 ல் உத்தரபிரதேச அரசுக்கு மிதக்க உதவியது, " என்று, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் அதன் மகளிர் பிரிவின் எம்.எஸ்.எம்.இ குழுவின் முன்னாள் தேசியத் தலைவருமான கரோடியா-குப்தா கூறினார். "வங்கி கடன்கள் இல்லை, மானியங்கள் இல்லை, நான் எனது சொந்த சேமிப்புடன் முயற்சியைத் தொடங்கினேன். சாதாரண எம்.எஸ்.எம்.இ விகிதத்தில் ஒரு வழக்கமான வணிக நபராக நான் பின்னர் வங்கிக் கடன் பெற்றேன்" என்றார்.

பெண்களுக்கான திட்டங்கள் உள்ளதாக அவர் கூறினார் - உதாரணமாக, பெண் தொழில்முனைவோர் வணிக கண்காட்சிகளுக்கு வெளிநாடு செல்லும்போது, அவற்றின் செலவுகளில் 80-90% வரை அவை திருப்பிச் செலுத்தப்படுகின்றன; ஆண்கள் குறைவாகப் பெறுகிறார்கள்: 60-70%. "ஆனால் பெண்களுக்கான செயல்முறை மிகவும் சிக்கலானது. நீங்கள் ஒரு திட்டத்தை வழங்க விரும்பினால், பெண் தொழில்முனைவோருக்கு வருமான வரி, ஜிஎஸ்டி வருமானம் அல்லது அவரது வழக்கமான வங்கி போன்ற வழக்கமான வழித்தடங்கள் மூலம் கிடைக்கச் செய்யுங்கள்" என்றார்.

(திருத்தியவர், மாலினி நாயர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.