புதுடெல்லி: மும்பை ஆடை வடிவமைப்பாளர் அஸ்வினி மெத்ரே, 31, கடந்த பிப்ரவரியில், தொழில் தொடங்குவதற்காக கடன் கேட்டு வங்கிகளை அணுகியபோது, ​​அங்கு கிடைத்த பதில்கள், பாலினக் குறைபாடுகளுடன் முரண்பட்டன: "உங்களுக்கு 30 வயது, நீங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தால், அப்போது இந்த தொழிலை விட்டுவிட்டீர்கள் என்றால் என்ன செய்வது?", அத்துடன் "நீங்கள் திருமணம் செய்து கொண்டால், தனிநபரைப் போலவே அதே முயற்சியை நீங்கள் மேற்கொள்வீர்களா?" என்று கேட்கப்பட்டது.

40 வயதான கவ்னீத் சாஹ்னி, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குருகிராமில் தனது உணவு ஆலோசனையை அமைப்பை ஏற்படுத்தும் போது இதேபோன்ற சந்தேகக் கேள்விகளை எதிர்கொண்டார். 'ஏன் தனது குழுவில் அதிக ஆண்கள் இருக்கக்கூடாது?' போன்ற கேள்விகளை அவர் எதிர்கொண்டார். அல்லது 'உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் எப்படி தொழிலை கவனிப்பீர்கள்?' என்று கேட்கப்பட்டது.

40 வயதான சனம் தேவி, தெற்கு டெல்லியில் குறைந்த வருமானம் கொண்ட இந்திரா கல்யாண் விஹாரில் பிஸ்கட், உப்பு, மாவு, அரிசி போன்றவற்றை விற்பனை செய்து ஒரு சிறிய கடையை நடத்தி வருகிறார். "என் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என் மனைவி வேலை செய்வதைக் கண்டால், அவர்கள் அதை ஏற்கமாட்டார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை, நாங்கள் வாழ வேண்டும், "என்று அவரது கணவர் ரந்தீர் சிங், 50, கேட்டார். அவர் நடமாட முடியாத நிலையில் உள்ளார்.

இந்தியாவில் தொழில்களில் ஆண்களால் ஆதிக்கம் உள்ளது - இந்தியாவில் 100 நிறுவனங்களில் ஏழு மட்டுமே பெண்களால் நடத்தப்படுகின்றன என்று, பாலின ஆராய்ச்சி மற்றும் ஆலோசக அமைப்பான, பொருளாதாரத்தில் பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் (IWWAGE) நவம்பர் 2020 அறிக்கை தெரிவிக்கிறது. பெண் தொழில்முனைவோர் லட்சக்கணக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அதிகமான பெண்களை வேலைவாய்ப்பு ஓட்டத்தில் இழுக்க முடியும் என்ற போதிலும், இந்த நிலையே உள்ளது.

வணிக நெட்வொர்க்குகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன மற்றும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, மெத்ரே மற்றும் சாஹ்னி போன்ற பெண் தொழில்முனைவோர் வழக்கமாக சார்புகளை எதிர்கொள்கிறார்கள், இந்தியா ஏன் உலகின் மூன்றாவது மிக உயர்ந்த பாலின தொழில் முனைவோர் இடைவெளியை கொண்டிருக்கிறது என்பது குறித்த எங்கள் இரண்டு பகுதி விசாரணை முடிவில் கண்டறிந்தோம். கட்டுரையின் முதல் பகுதி, நிறுவன நிதிக்கான பெண்களின் தேவை ஏன் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை ஆராய்ந்தோம். நிறைவுப்பகுதியான இதில், சமூக விதிமுறைகள், மோசமான நெட்வொர்க்கு ஆதரவு மற்றும் பெண் தொழில்முனைவோரைத் தடுக்கும் தளவாட சிக்கல்களை நாங்கள் ஆராய்வோம்.

"இந்திய பெண்கள் தயக்கமின்றி தொழில்முனைவோராக இருந்த ஒரு காலம் இருந்தது, ஆண்களால் முடியாதபோது குடும்பங்களை ஆதரிப்பதற்காக மட்டுமே வியாபாரத்தில் நுழைந்தனர்" என்று, பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் முதன்மை பொருளாதார நிபுணர் சோனா மித்ரா கூறினார். "இது மாறிவிட்டது." இளம் பெண்களுக்கு இப்போது வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க இடம் உண்டு - இந்தியாவின் 58% பெண் தொழில்முனைவோர், 20-30 வயது எட்டும் போது தொழில் தொடங்கிவிடுகின்றனர், என்று, சமூக ஆய்வுகள் அறக்கட்டளை மற்றும் பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 'Women's Entrepreneurship in India', என்ற ஆய்வறிக்கை தெரிவித்தது.

இருப்பினும், பெண்கள் வணிக உரிமையாளர்களுக்கான அணுகுமுறைகள் இன்னும் மாறவில்லை என்பதை ஆய்வில் நாங்கள் கண்டறிந்தோம்.




வழிகாட்டிகள், நெட்வொர்க்குகள் இல்லை

கடந்த 2018 ஆம் ஆண்டில், அரசு கொள்கை சிந்தனைக்குழுவான நிதி ஆயோக், பெண்கள் தொழில்முனைவோருக்கு அறிவு மற்றும் ஆதரவை வழங்குவதற்கான ஒரு போர்டலாக, மகளிர் தொழில்முனைவோர் தளத்தை (WEP) அறிமுகம் செய்தது. பதிவு செய்ய தளத்திற்கு சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் தேவைப்படுகிறது, அதன் பிறகு உறுப்பினர்கள் கேள்விகளை இடுகையிடலாம் மற்றும் கட்டுரைகளைப் படிக்கலாம். இது மூன்று ஆண்டுகளில் 258 இடுகைகளைப் பதிவு செய்துள்ளது.

சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டில் பெண் தொழில்முனைவோருக்கு, உதயம் சகி (Udyam Sakhi) என்ற வலையமைப்பை அறிமுகப்படுத்தியது. அதன் கூறப்பட்ட நோக்கம் "பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதும், போர்டல் மூலம் உதவி செய்வது, ஆலோசனை வழங்குவது மற்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும்" ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம் 250,245 வருகைகள் மற்றும் 3,035 பதிவுகளை இந்த தளம் பெற்றிருந்தது.

இது தவிர, சில சிதறிய தனியார் நெட்வொர்க்கிங் முயற்சிகள் மட்டுமே உள்ளன.

நாங்கள் நேர்காணல் செய்த பெண் தொழில்முனைவோர், எந்தவொரு நெட்வொர்க், அரசு ஆதரவு அல்லது வேறு ஆதரவு, அல்லது வழிகாட்டல் திட்டங்களின் ஆதரவின்றி பணியாற்றுவதாக கூறினர். "அரசுக்கு நல்ல நோக்கங்கள் இருந்தாலும், களத்தில் அதை நிறைவேற்றுவது சிக்கலாக உள்ளது," என்று, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) எம்.எஸ்.எம்.இ குழுவின் முன்னாள் தேசியத் தலைவரும், அதன் பெண்கள் பிரிவின் தலைவருமான மூத்த தொழில்முனைவோர் அர்ச்சனா கரோடியா-குப்தா கூறினார்.

தற்போதைய மற்றும் எதிர்கால பெண்கள் சார்ந்த திட்டங்கள் குறித்த பதிலை பெறுவதற்காக, உதயம் சகி போர்ட்டல் நடத்தும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இந்தியாஸ்பெண்ட் அணுகியுள்ளது. பதில் கிடைக்கும்போது இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

தனது கணவரின் உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் குடும்ப கணக்காளரின் சில உதவிக்குறிப்புகளைத் தவிர, ஒரு தொழில்முனைவோராக தனது பயணத்தில் எப்போதும் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாக சாஹ்னி கூறினார்.

"[ஒரு பெண்ணாக] ஒரு நிறுவனத்தை எவ்வாறு தொடங்குவது என்பது குறித்து வழிகாட்ட எந்த போர்ட்டல்களும் வழிகாட்டிகளும் இல்லை," என்று அவர் கூறினார். அவரது பணியின் ஒரு முக்கிய அம்சம், மதுபான உரிமங்களை வாங்குதல், விளம்பர பலகைகளைப் பயன்படுத்த நகராட்சி அனுமதிகளைப் பெறுதல், காவல்துறையினரிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழ்கள் மற்றும் பொது பூங்காக்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி பெற்றுத்தருவது ஆகும்.

"கலால் துறை போன்ற பல்வேறு அதிகாரிகளிடம் இருந்து நான் அவதிகளை எதிர்கொண்டேன், அதிகாரிகளைச் சந்திக்க பெண் என்றும் பாராமல் சில நேரங்களில் நான் இரவு 11 மணி வரை காத்திருக்க வேண்டியிருந்தது, ஏனெனில் சம்பந்தப்பட்ட நபர் பிஸியாக இருந்தார்," என்று சாஹ்னி கூறினார். "இது நரகமாக இருந்தது, எடுத்துக்காட்டாக, தடையின்மைச் சான்றிதழுக்கு காவல் நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தது, அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட மனுவுக்காக அதிகாலை 1 மணிக்கு அழைக்கப்படுவது என்று இருந்தது. ஒருவர் லஞ்சம் [வேலையை எளிதாக்க] கேட்டார்; ஆனால் நான் மறுத்துவிட்டேன்" என்றார்.

பாலின பாத்திரம் என்ற தடை

2020 பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் அறிக்கைப்படி, பெண்களுக்கு நேரம் மற்றொரு தடை: 6.6 மணிநேர ஊதியம் வழங்கப்படாத பராமரிப்புப் பணிகளில் பெண்கள் 5.8 மணிநேரத்தை வீட்டு வேலைகளுக்கு மட்டுமே ஒதுக்க முடியும். தெற்கு டெல்லியின் ஓக்லா தொழில்துறை பகுதியில் இரண்டு வண்டிகளில் காய்கறிகளை விற்கும் 40 வயதான சரிதா தேவியின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலைகள் (சுத்தம் செய்தல், தண்ணீர் சேகரித்தல், சமைத்தல்) மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை மாலை 3 மணி வரை அவர் சுமக்கிறார். பின்னர் தனது வண்டிகளுடன் வெளியே வந்து இரவு 10 மணி வரை வியாபாரம் செய்ய வேண்டும்.

அவரது வண்டியில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் குவியல்களுக்கு இடையில், மொபைல் ஆப் வழியே கட்டண செலுத்துவதற்கான குறியீடு கொண்ட அட்டை உள்ளது. அது எவ்வாறு இயங்குகிறது என்பதே அவருக்கு தெரியாது. "மக்கள் கையில் காசு இல்லாதபோது, இந்த செயலி மூலம் பணம் செலுத்துகிறார்கள், ஆனால் அது எவ்வாறு இயங்குகிறது என்பது என் கணவருக்கு மட்டுமே தெரியும். இணையத்துடன் மொபைல் எனது இரண்டு மகள்களால் பகிரப்படுகிறது," என்று அவர் கூறினார்.

தங்களது மளிகை கடைக்கு மேலே 10 சதுர மீட்டர் தூரமுள்ள தனது வீட்டை, சனம் தேவி ஐந்து குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் கடையை நடத்துகிறார், ஆனால் அவருக்கு போதுமான நம்பிக்கை இல்லை என்று கருதுகிரார். "நான் இப்போது எல்லா வியாபாரமும் செய்கிறேன், ஆனால் வாடிக்கையாளர்கள் என் கணவர் இருந்தால் பரவாயில்லை என்று விரும்புகிறார்கள்," என்று அவர் கூறினார்.

தனது ஆரம்ப ஆண்டுகளில் தான் கொண்டிருந்த சந்தேகமாக கவ்னீத் சாஹ்னி கூறுவது, தனது நிலையில் உள்ள எந்த மனிதனையும் விட கடினமாக உழைக்கவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும்படி கட்டாயப்படுத்திக் கொண்டதுதான் என்றார். "பிராண்ட் மேலாளர்கள், ஐஐஎம்களில் [இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்] பட்டம் பெற்றவர்கள் கூட எனது அழைப்புகளுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இது அவமானகரமானது, "என்று அவர் நினைவு கூர்ந்தார். "பின்னர், சில ஆண்கள் 'இரவு உணவிற்கு செல்லலாம்' என்பார்கள். நான் அவர்களிடம் 'நான் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டேன்' என்று தெளிவாகக் கூற வேண்டியிருந்தது" என்றார்.

பிரச்சனை என்னவென்றால், பெண்கள் "சவால்களை இயல்பாக்குவது", அவர்கள் எப்போதும் "அட்ஜெஸ்ட்" செய்து இருக்க வேண்டும் என்று கூறும் 43 வயதான ஷப்னம் பத்ரா, ஃபரிதாபாத்தில் உள்ள தனது அடுக்குமாடி வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஒரு இயற்கை உணவு அங்காடி நடத்தி வருகிறார். "இது மாற வேண்டும். நாங்கள் கடை திறந்த நாளில் ஒரு பெண் வந்து நான் என்ன விற்கிறேன் என்று கேள்வி எழுப்பினார். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிவியல் பூர்வமாக விளக்க முயன்றேன், ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அது என் இடத்தில் ஒரு மனிதனாக இருந்திருந்தால், அவர் அப்படி பேசியிருக்க மாட்டார் " என்றார்.

இன்னும் சிலர், கடையின் "அசல் உரிமையாளருடன்" பேச விரும்புவதாக மற்றவர்கள் கூறியதை நினைவு கூறும் பத்ரா , கடை உண்மையில் ஒரு ஆணால் நடத்தப்படுவதாக, பலரும் கருதினர் என்றார்.


முன்புள்ள பாதை

கட்டுரைக்காக நாங்கள் நேர்காணல் செய்த வல்லுநர்கள், பெண்கள் மற்றும் சிறுமியர் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் அமைப்பின் சோனா மித்ரா, கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான நிகோர் அசோசியேட்ஸ் மற்றும் மிக்காலி நிகோர் மற்றும் FICCI MSME கமிட்டியின் முன்னாள் தேசியத் தலைவரான அர்ச்சனா கரோடியா-குப்தா ஆகியோர் தொழில்முனைவோரின் பாலின இடைவெளி எவ்வாறு அழிப்பது என்பது குறித்த சில பரிந்துரைகளை தெரிவித்தனர். இவற்றில் சில நீண்டகால கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியது, மற்றவை குறுகிய காலத்தில் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகள்.

அளவிட அவர்களுக்கு உதவுங்கள்: பெண் தொழில்முனைவோர் நானோ அல்லது மைக்ரோ துணிகரங்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவை அரிதாகவே அவற்றை அதிகம் சம்பாதிக்கின்றன, எனவே அவை விரிவாக்க முடியவில்லை. நிறுவன ஆதரவு மற்றும் கடன் மூலம் தங்கள் தொழில்களை வளர்க்க அவர்களுக்கு உதவ வேண்டும்.

பயிற்சியளித்தல்: பெரிய கடன்களை பெறுவதற்கு பிணையம் இல்லாததால், பெண் தொழில்முனைவோர் பொதுவாக மைக்ரோ நிறுவனங்களில் மிகக் குறைந்த வகை அரசு கடன்களைப் பெறுகிறார்கள். எனவே, அவர்கள் குறைந்த அளவிலான தொழில்களில் சிக்கித் தவிக்கின்றனர். அதிக மதிப்புள்ள கடன்களுக்கான அணுகலுக்கு உதவ வேண்டும். எடுத்துக்காட்டாக, முத்ராவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்ட வட்டி விகிதத்தை வழங்குங்கள், பிந்தையவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெறுவார்கள். இந்த கடன்களை எளிதாக அணுக நிதி கருவிகளை உருவாக்க வேண்டும். செயல்திறனை அதிகரிக்க அவர்களுக்கு கணக்கியல் மற்றும் மேலாண்மை திறன்களை வழங்க வேண்டும்.

ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அரசு மற்றும் தனியார் துறை டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும். நிர்வாகம் மற்றும் தலைமைப் பாடங்கள் போன்றவற்றில் அவர்கள் செயல்படும் துறை பற்றிய தகவல்களும் இதில் அடங்கும். இதுபோன்ற அமர்வுகளில் சேர இளம் பெண்களை ஊக்குவிக்கவும். மாநில கிராமப்புற வாழ்வாதார பணிகள் இந்த பயிற்சி அமர்வுகளை உறுதிப்படுத்தப்பட்ட பயிற்சி வாய்ப்புகளுடன் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கலாம்.

கூட்டாண்மை பலப்படுத்துதல்: பெண்கள் பொருளாதார ரீதியாகவும் சுயாதீனமாகவும் ஆக்குவதன் மூலம் பெண்கள் வெற்றிபெற்ற சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை அரசு அதிகாரம் அளிக்க வேண்டும்.

பேணி காத்தல்: தொழில்துறை சங்கங்களுடன் இணைந்து மாநில அரசுகள் பேணி காக்கும் மையங்களை நிறுவ முடியும். உதாரணமாக, 2018 ஆம் ஆண்டில், தெலுங்கானாவின் 'WE Hub' பெண்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை சந்தைப்படுத்துதல், சட்ட சேவைகள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம் ஊக்குவித்தது, 148 புதிய தொடக்கங்களை அடைத்து வைத்தது.

குழந்தை மற்றும் முதியோர் கவனிப்புக்கு உதவல்: பெரும்பாலான பெண் பணியாளர்களை விட்டு வெளியேறுவது அல்லது ஓய்வு எடுப்பது குடும்பத்தில் உள்ள பராமரிப்பு பணிகள் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, ஐஸ்லாந்து, உயர் பாலின சமத்துவத்துடன், பள்ளி நேரங்களை மதியம் 1.30 மணி முதல் மாலை 5 வரை நீட்டித்துள்ளது. எனவே பெண்கள் குழந்தை பராமரிப்பு பற்றி கவலைப்படாமல் 8 மணி நேரம் வேலை செய்யலாம். இதே போன்ற தீர்வுகளை இந்தியா ஆராயலாம்.

டிஜிட்டல் அணுகலுக்கு வழி: இந்தியாவில் பல பெண்கள் இப்போது வீட்டில் இருந்து தயாரிப்புகளை விற்க ஆன்லைன் தளங்களை பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகளை ஊக்குவிக்க, இந்தியாவின் 300 மில்லியனுக்கும் குறைவான வறுமைக் கோட்டு வீடுகளில் இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வழங்க அரசால் முடியும்.

சொத்து உரிமைகள்: பெண்களுக்கு சொத்துக்களை வைத்திருப்பதை எளிதாக்குங்கள், மேலும் சில கடன் தொகைகளை இணையாளர் இல்லாததாக ஆக்குங்கள்.

(திருத்தியவர், மாலினி நாயர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.