பெங்களூரு: 2019 மே மாதம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பிறகு பாரதிய ஜனதாவின் புதிய அரசு மேற்கொண்ட முதல் மாற்றங்களில் நீர்வளம், குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சகங்களை ஒருங்கிணைத்தது தான். இது பிரதமர் நரேந்திர மோடி 2019 ஏப்ரலில்" விவசாயிகளுக்கு சுத்தமான தண்ணீர் மற்றும் உயர்தர பாசன வசதிகள் உறுதி செய்யப்படும்" என்ற அளித்த வாக்குறுதியாகும்.

இந்த முயற்சி ஒரு "சாதகமான முன்னேற்றம்" என்றாலும், அது "போதுமானதாக இல்லை" என்று பொருளாதார நிபுணரும் முன்னாள் திட்டக்கமிஷன் உறுப்பினருமான மிஹிர் ஷா, இந்தியா ஸ்பெண்டிற்கு தெரிவித்தார். மத்திய நீர் ஆணையம் - சி.டபிள்யூ.சி (CWC) மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் - சி.ஜி.டபிள்யூ.பி (CGWB) ஆகியவற்றின் மறுசீரமைப்பு தொடர்பான குழுக்களுக்கு அவர் தலைமை தாங்கினார்; மேலும் தேசிய நீர் கட்டமைப்புச் சட்டத்தையும் நிலத்தடி நீரை நிலையான முறையில் நிர்வகிப்பதற்கான மாதிரி மசோதாவையும் அவர். உருவாக்கியவர்.

இந்தியாவிற்கு அதன் தண்ணீர் சவால்களை தீர்க்க "நீரின் அதிகாரத்துவம்" தேவைப்படுகிறது; இதற்கு பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் கூட்டு பங்களிப்பு தேவைப்படுகிறது.

உலகின் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் நாடாக திகழும் இந்தியா, உலகளவி உறிஞ்சப்படுவதில் 12% கொண்டுள்ளது. இந்தியாவில் நீர் மேலாண்மையானது “ நீர்ச்சிதைவு” (hydro-schizophrenia) என்பதன் காரணமாக பாதிக்கப்படுகிறது என்றும் ஷா, நீர் நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தை சீராக்க தேசிய நீர் ஆணையம்- என்.டபிள்யு.சி. (NWC) அமைக்க ஷா கமிட்டி அத்தகைய இணைப்பை பரிந்துரைத்தது.

கடந்த 2009 மற்றும் 2014இல் இருந்த மத்திய திட்டக்குழுவில் மிக இளைய உறுப்பினராக, ஷா இருந்தார். நீர் மற்றும் வாழ்வாதார பாதுகாப்பை மையமாகக் கொண்ட சமாஜ் பிரகதி சஹயோக் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரான இவர், 2012 முதல் 2018 வரை நீர், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்த சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனை குழுவின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

நமக்கு ஷா அளித்த மின்அஞ்சல் நேர்காணலில், நீர் பாதுகாப்பின் பல பரிமாண சிக்கலைச் சமாளிக்க பலதரப்பட்ட அணுகுமுறையின் அவசியத்தை அவர் எடுத்துக்காட்டுகிறார்; மேலும் மத்திய - மாநில அரசுகளை ஒன்றிணைக்கும் நீர் நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

உங்களின், 2016 கமிட்டி அறிக்கை “மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் பெரிய சீர்திருத்தங்கள்” மற்றும் ஒரு தேசிய நீர் ஆணையத்தை உருவாக்க பரிந்துரைத்தது. குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கா மறுசீரமைப்பு அமைச்சகங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஜல் சக்தி என்ற அமைச்சகத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்த வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? சி.டபிள்யு.சி. மற்றும் சி.ஜி.டபிள்யு.பி. இன் மறுசீரமைப்பு இல்லாமல் இந்த நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்க முடியுமா?

ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டிருப்பதல, இந்தியாவில் நீர் நிர்வாகத்தின் வகைப்படுத்தக்கூடிய நீர் சிதைவு எனப்படும் ஹைட்ரோ ஸ்கிசோப்ரினியாவை முடிவுக்கு கொண்டுவருவதில் வரவேற்கத்தக்க, சாதகமான நடவடிக்கையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

வரலாற்று ரீதியாக, குடிநீரின் இடது கை நீர்ப்பாசன செயல்பாடு என்ன செய்கிறது என்பதை வலது கைக்கு தெரியவில்லை. இதன் விளைவாக, குடிநீரை வழங்கும் நீர் ஆதார நிலைகள் [நீர் தேங்கும் பாறையின் நிலத்தடி அடுக்கு] வற்றிவிட்டன. விவசாயிகள் அதே நீர்நிலையில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி தண்ணீர் தேவைப்படும் பயிர்களுக்கு பாசனம் செய்யத் தொடங்கி உள்ளனர். எனவே ஒரே அமைச்சகத்தின் கீழ் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீரை கொண்டு வருவது ஒரு நல்ல நடவடிக்கையாகும்.

ஆனால், அது போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது. நமது நீர் பயன்பாட்டுத் திட்டமிடல், நீர் சுழற்சியின் ஒருங்கிணைந்த பார்வையை எடுக்க வேண்டும்; இது இந்தியாவின் ஒவ்வொரு நதிப்படுகையிலும் நடக்க வேண்டும். நாம் அதைச் செய்யத் தவறினால், மாநிலங்களுக்கு இடையே அல்லது ஒரே நகரம் அல்லது கிராமத்துக்கு இடையே உள்ளவர்கள் மத்தியில் தண்ணீருக்காக மோதல்கள் தொடர்ந்து தீவிரமாக வளரும். எடுத்துக்காட்டாக, மோதலின் இருபுறமும் உள்ள நீர் பயனர்கள் கோரிக்கைகளை புரிந்து கொள்ளும் வரை [கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையிலான] காவிரி மோதலை தீர்க்க முடியாது. அவை வரையறுக்கப்பட்ட நீர்வளங்களில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மிகக்குறைந்த தண்ணீரை கோரும் பயிர்களுக்கு மாற வேண்டும். முடிவில்லாமல் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிப்பதன் மூலம் இந்தியாவின் நீர் பிரச்சினைகள் தீரும் என்று நம்ப முடியாது.

இந்த அணுகுமுறையை அதிக எண்ணிக்கையிலான முதன்மை பங்குதாரர்கள் [விவசாயிகள், தொழில், சமூகம் போன்றவை] முழுவதும் இணைக்க, இந்திய அரசு முன்னிலை வகிக்க வேண்டும்; அதனால்தான் சி.டபிள்யு.சி. மற்றும் சி.ஜி.டபிள்யு.பி. உடன் இணைப்பதன் மூலம் தேசிய நீர் ஆணையத்தை உருவாக்க எங்கள் குழு முன்மொழிந்தது. மிக நீண்ட காலமாக [இரு அமைப்புகளும் ஒன்றுக்கொன்று தனியே செயல்பட்டுள்ளன, சி.டபிள்யூ.சி ஆதிக்கம் செலுத்தும் பங்காளியாகவும், திட்டங்களை கையாளவும், அமைச்சகத்திற்குள் உள்ள படிநிலைகளில் பெருமைக்குரிய இடத்திலும் வழங்கப்படுகிறது.

இந்த ஏற்பாட்டின் முரண்பாடு என்னவென்றால், சி.டபிள்யூ.சி அழைத்த போது, மக்கள் நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சுவதிலேயே தீவிரமாக இருந்தனர். இதனால் நமது நதிகளின் மேற்பரப்பு நீரோட்டத்தை அது பாதிக்கும். நமது தீபகற்ப ஆறுகளில் பருவமழைக்கு பிந்தைய [நீர்] ஓட்டமே, நிலத்தடி நீருக்கான அடித்த ஓட்டம் [நிலத்தடி நீர் வெளியேற்றத்தால் நீரோட்டம் பராமரிக்கப்படுகிறது] என்பதை பலரும் உணருவதில்லை. நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது இந்த ஓட்டங்களை உலர்த்துகிறது. ஆற்றில் இருந்து நீர்நிலையை நோக்கி எதிர் திசையில் நீர் பாயத் தொடங்குகிறது; இதனால் ஆறுகள் வறண்டு போகின்றன.

எனவே, இந்தியாவில் மற்றொரு நீர்ச்சிதைவு, நீர் மேலாண்மையை பாதிக்கப்படுகிறது; மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீருக்கு இடையில், இது சி.டபிள்யூ.சி. மற்றும் சி.ஜி.டபிள்யூ.பி. ஆகியவற்றின் தடையற்ற இணைப்பின் மூலம் மட்டுமே உடைக்கப்பட முடியும்.

மேலும், நீரின் பல பரிமாணத்தை நாம் அங்கீகரிக்க வேண்டும், இது அதன் நிர்வாகத்தில் பல நிர்வகித்தலை கோருகிறது. சி.டபிள்யூ.சி மற்றும் சி.ஜி.டபிள்யூ.பி ஆகியவை ஏராளமான துறைகளில் இருந்து நிபுணர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீரை நிர்வகிக்க தேவையான பங்கேற்பு அணுகுமுறைகளுக்கு சமூக அறிவியல் மற்றும் நிர்வாகத்தின் வல்லுநர்கள் தேவை. நமது தேவை பக்க மேலாண்மை சிக்கல்களை சமாளித்து பயிர் நீர் வரவு செலவுத் திட்டத்தை செயல்படுத்தவும், நீர் பயன்பாட்டு திறனை மேம்படுத்தவும் செய்ய, நமக்கு வேளாண்மையில் இருந்து தொழில்சார்ந்தவர்கள் தேவை. சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளின் மதிப்பைப் பற்றிய துல்லியமான புரிதலுக்காக சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் இருந்து தொழில் வல்லுநர்கள் நமக்கு தேவை; மேலும், நமது எங்கள் நதி அமைப்புகளுக்கு புத்துயிர் அளிக்க, நதி சூழலியல் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள் நமக்கு தேவை.

இறுதியாக, அவை அனைத்தும் தேசிய நீர் ஆணையத்தின் ஒரு பகுதியாக ஒன்று சேர வேண்டும்; ஒவ்வொரு நதிப்படுகையிலும் உள்ள மாநிலங்களுடன் சேர்ந்து பல ஒழுங்கு குழுக்களாகப் பணியாற்ற வேண்டும். இதனால் நீர்வளங்களின் உண்மையான முழுமையான நிர்வாகத்தை உருவாக்க முடியும்.

முன்மொழியப்பட்ட தேசிய நீர் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஒன்று தேசிய நீர்நிலை வரைபடம் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தை வழி நடத்துவதாகும். உங்கள் காலத்தில் திட்டக்குழுவால் தொடங்கப்பட்ட தேசிய நீர்நிலை வரைபடம் மற்றும் மேலாண்மை திட்டம் (NAQUIM), நீர்நிலைகளின் சிறப்பியல்பு என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இது முடங்கிவிட்டதாக தெரிகிறது. உங்கள் கருத்துகள்?

தேசிய நீர்நிலை வரைபடம் மற்றும் மேலாண்மை திட்டம் (NAQUIM) போன்ற பாதையை தகர்க்கும் முன்முயற்சிகளுக்கு மனித வளங்கள் மற்றும் திறன்களின் முற்றிலும் மாறுபட்ட வரிசை தேவைப்படுகிறது. முரண்பாடாக, நிலத்தடி நீர் இந்தியாவின் மிக முக்கியமான ஆதாரமாக மாறியுள்ள சூழலில் மத்திய மற்றும் அனைத்து மாநிலங்களிலும் நிலத்தடி நீர் துறைகள் மிகவும் பலவீனம் அடைந்துள்ளன.

இத்தகைய போக்கை நாம் விரைவாக மாற்ற வேண்டும். இந்த முன்னோடியில்லாத நீர்வாழ் நிர்வாகத்திற்கு அரசை மட்டுமே கூற முடியாது என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், தொழில் மற்றும் மக்கள் பங்களிப்புடன் ஒரு பெரிய கூட்டாண்மை இது கோருகிறது.

கூட்டாண்மை போன்ற ஒரு கட்டமைப்பை நிர்வகிப்பது மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள அரசுகளுக்கு இது ஒரு சவாலாக உள்ளது. ஆனால் இத்தகைய நீர்ப்பாசனம் இல்லாமல், இந்தியாவின் நீர் பிரச்சினையை தீர்ப்போம் என்பதை நம்ப முடியாது.

வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகை "நகர்ப்புற இந்தியாவில் நீர் மேலாண்மைக்கு முன்னோடியில்லாத சவால்களை" ஏற்படுத்தும் என்று 2016 குழு அறிக்கை எச்சரித்திருந்தது. சென்னை போன்ற நகரங்கள் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன; கடந்த ஆண்டு சிம்லாவும் சந்தித்தது. "விரைவான தொழில்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ள நகர்ப்புற மற்றும் தொழில்துறை கழிவு நீரை மறுசுழற்சி செய்தல் மற்றும் மறுபயன்பாடு செய்தல்" ஆகியவற்றை அறிக்கை பரிந்துரைத்தது. நகர்ப்புறங்களில் இந்த நெருக்கடியை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? மழைநீர் சேகரிப்பு போதுமானதா மற்றும் நிலைமை மோசமடைவதைத் தடுக்க சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய பிற அம்சங்கள் உள்ளதா?

பல முக்கியமான விஷயங்களில் நகர்ப்புற நீர் நெருக்கடி கிராமப்புறங்களை விட தீவிரமானது என்று நான் நம்புகிறேன். மழைநீர் சேகரிப்பு மற்றும் சட்ட நிபந்தனைகள் மட்டுமே மேற்பரப்பை கிளறுகின்றன. எங்களுக்குத் தேவையானது குறைந்தது ஆறு முக்கிய கூறுகளைக் கொண்ட பல பரிமாண பதிலை வழங்குவதாகும்.

Elements Of A Multi-Dimensional Response

  1. Groundwater remains a major blind spot in urban India. While the exact data are not available, we have estimates that indicate that on average for 71 cities and towns, groundwater constitutes 48% of urban water supply. Fifty six percent of metropolitan, class-I and class-II cities are dependent on groundwater either fully or partially. Unaccounted water in urban areas exceeds 50%, according to the CGWB’s [2011]
    report
    on the groundwater scenario in 28 Indian cities. Privately driven, individualistic pumping of groundwater in large parts of urban India has provided benefits for filling out the gaps in public water-supply schemes. However, it has also led to problems of depletion and contamination of aquifers. The following key steps could form the building blocks of an urban aquifer management programme in India:
    1. Identifying status of existing groundwater resources in cities through participatory mechanisms, involving citizens, educational institutions and urban utilities.
    2. Assessment of groundwater resources through participatory aquifer mapping coupled with systematic studies by institutions with appropriate capacities to identify natural recharge areas, groundwater discharging zones and quantification of aquifer characteristics, namely transmissivities, storativities and groundwater quality.
    3. Profiling stakeholders, including users, tanker operators, drilling agencies and developing mechanisms for registering water sources.
    4. Building hydrogeology into waste-disposal, sewage and sullage management and design of sewerage and sewage-treatment.
    5. Developing a framework of regulatory norms around urban groundwater use and protection of urban aquifers by preserving natural recharge areas.
    6. Understanding changes in river flows and quality and the precise relationship between aquifers, aquifer systems and the river flowing through a town or city.
    7. Finally, developing an institutional structure required for mapping the aquifers, and initiating groundwater management as an integral part of urban governance.
  2. Focus on recycling and reuse of wastewater: No Indian city is in a position to boast of a complete sewerage system. According to the Central Pollution Control Board, the country has installed capacity to treat roughly 30% of the excreta it generates. Just two cities, Delhi and Mumbai, which generate around 17% of the country’s sewage, have nearly 40% of the country’s installed capacity. Large parts of cities remain unconnected to the sewage system as they live in unauthorised or illegal areas or slums. Decentralised wastewater management systems can overcome many of these problems by catering to the un-served areas, reducing the cost of treatment and operation and maintenance, adopting site-specific treatment technologies based on the land use and minimising land requirement for treatment.
  3. Reduce the industrial water footprint: Indian industry is currently excessively dependent on fresh water and tends to dump its untreated waste into our rivers and groundwater. Overall, the water footprint of Indian industry is too high, which is bringing industry into conflict with other parts of the economy and society. There is huge scope for reducing the industrial water footprint and this can be done through technologies and investments that have a very short payback period of less than three years. We must make comprehensive water audits a recurring feature of industrial activity so that we know what is being used by the industrial sector at present and so that changes can be monitored and the most cost-effective basket of water efficiency technologies and processes designed and implemented to reduce water demand while increasing industrial value-added per unit of water consumed.
  4. Protect and prioritise local water bodies: The first priority for cities when planning water supply should be the protection, restoration and recharge of their traditional water bodies. Cities must get funds for water projects only when they have accounted for the water supply from local water bodies. This would reduce costs of supply from a distance and also preserve the ecology of the city. Today, cities have grown over their water bodies and their functional parts--drains and catchments. This has also aggravated the problem of urban flooding because we have blocked the passage of excess water to the river or the sea.
  5. Shift focus to management and distribution: The much more acute problem in urban India is not the quantum of water to be supplied but its management and equitable supply to all. In the current water supply system, there are enormous inefficiencies--losses in the distribution system because of leakages and bad management, not to mention the quality of water supplied within and across towns and cities. Water is divided very unequally within cities. As per the National Sample Survey
    65th round
    , only 47% of urban households have individual water connections. As a result, the poor often have to spend a great deal of time and money to obtain water since they do not have piped water connections in their homes.
    Thus, we must shift the exclusive focus on augmentation of water supply to managing the supply for all and managing to supply clean water. This means that we will have to revive local water bodies and recharge groundwater, so that we can source water from as close as possible. We must also cut the costs and transportation of sewage--use decentralised networks and use a variety of technologies to treat sewage as locally as possible.
  6. Eco-restorative, low-cost technologies: The 2011 High Powered Expert Committee Report on Indian Urban Infrastructure and Services estimated that water supply and sewerage treatment will cost the nation around Rs 5,60,000 crore [$82 billion] over the next 20 years. Conventional technologies, normally employed to treat the pollution from point sources, are also not that effective against non-point sources of pollution. They also have heavy power requirements.
    Thus, there is an urgent need to consider alternative technology options, which have now been tested on the ground. Vertical eco-filtration techniques were developed in the 1990s to treat domestic and industrial wastewaters. These innovations helped industry to reduce operational costs substantially by reducing electricity, chemical and human resources requirements. Over time, the vertical eco-filtration technique was converted into horizontal eco-filtration technique or the
    green bridge system
    . This has now been successfully tested out at several locations across the country.

புதிய அரசு வரும் 2024 க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் பொருளானது, அளவு மற்றும் தரம் முன்னுரிமை தருகிறது. ஆனால் நமது தற்போதைய நீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நீரின் தரத்தை உறுதிப்படுத்த ஒருபுறம் போதுமான அளவு தண்ணீரை வழங்க முடியுமா? இந்த இலக்கை அடைய அரசு எவ்வாறு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

இத்திட்டம், காலத்தின் தேவைக்கான ஒரு பதில் என்று நான் நினைக்கிறேன். ஆனால், சில முன் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அது வெற்றிபெற முடியும். நீர் வழங்கலுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய நீர்வாழ்வை பற்றிய தெளிவான புரிதல், முதன்மை பங்குதாரர்களுக்கு இந்த தகவலை பயனர் நட்புடன் தொடர்பு கொள்வது மற்றும் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை ஒன்றாகத் திட்டமிடப்படுவதை உறுதி செய்கிறோம். இந்த நோக்கத்திற்காக குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட உள்ளூர் நிறுவனங்களால் ஒரு முழு நீர் வழங்கல் முறையை இயக்க வேண்டும் மற்றும் நிர்வகிக்க வேண்டும். இவற்றைச் செய்ய போதுமான அதிகாரம் உள்ள உள்ளூர் பெண்கள் இவற்றை வழிநடத்த வேண்டும்.

தேசிய நீர் கட்டமைப்பு மசோதாவானது, நதி மறுசீரமைப்பு மற்றும் சமூக பங்களிப்பை வலியுறுத்தியது; அவிரல் தாரா (தொடர்ந்து ஆற்றின் ஓட்டம்), நிர்மல் தாரா (கலக்காத நீர்) மற்றும் ஸ்வச் கினாரா (சுத்தமான கரைகள்) ஆகியவற்றை உறுதிசெய்கிறது. முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நதிகளை ஒன்றோடொன்று இணைப்பது பற்றியும் (வறட்சி பாதிப்பு மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் கிடைப்பதை சமநிலைப்படுத்துவது) பற்றி பேசியது; இது ஒரு பகுதியின் நிபுணர்களால் விமர்சனம் செய்யப்பட்டது. ஆறுகளைச் சார்ந்திருக்கும் சமூகங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் இவை ஒருவருக்கொருவர் முரண்படுவதாக தெரிகிறது. இதுபற்றி உங்கள் கருத்துகள்?

அவை, நிச்சயமாக. ஆறுகளை ஒன்றோடொன்று இணைத்து, “நதிநீர், கடலில் கடுமையாக கலப்பதை அனுமதிக்கக் கூடாது” என பொறியியல் கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் உண்மையில், இயற்கையில் கழிவுகள் இல்லை. பருவமழை சுழற்சியின் ஒருங்கிணைப்பை பராமரிக்க, நதிநீரை கடலுக்குள் விடுவது முற்றிலும் இன்றியமையாதது. இப்படித்தான் துணைக்கண்டமாகும். கடலில் புதிய நதி நீரின் தொடர்ச்சியான ஓட்டம் வங்காள விரிகுடாவின் மேல் அடுக்குகளில் குறைந்த அடர்த்தி கொண்ட குறைந்த உப்புத்தன்மை கொண்ட நீரை பராமரிக்க உதவுகிறது.

அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலையை (28 டிகிரி செல்சியஸுக்கு மேல்) பராமரிப்பதற்கு இது ஒரு காரணம், இது குறைந்த அழுத்த பகுதிகளை உருவாக்கி பருவமழை தீவிரப்படுத்துகிறது. துணைக் கண்டத்தின் பெரும்பகுதி மீது மழைப்பொழிவு குறைந்த உப்புத்தன்மை கொண்ட இந்த அடுக்கால் கட்டுப்படுத்தப்படுகிறது. நதி இணைக்கும் திட்டத்தின் கீழ் ஆறுகள் பெருமளவில் தடுக்கப்படுவதாலும், கடலில் நன்னீர் பாய்ச்சல் குறைப்பதாலும் இந்த அடுக்கில் ஏற்பட்ட இடையூறு, துணைக் கண்டத்தில் காலநிலை மற்றும் மழைப்பொழிவுக்கு தீவிரமான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், இது மக்களின் பரந்த வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும்.

(பல்லீயத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.