மும்பை: அசாமில் 2019 ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 81 பேர் உயிரிழந்தனர், 50,470 பேர் இடம் பெயர்ந்தனர்.

மாநிலத்தின் பரந்த நதிகளின் வலைப்பின்னல் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் அதன் பள்ளத்தாக்குகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஆண்டுக்கு சராசரியாக ரூ. 200 கோடி இழப்பை ஏற்படுத்துகிறது. வெள்ளம் வடிந்த பிறகும் கூட, அரசு தொடர்ந்து ஆறுகளிடம் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து விடும். எப்படி என்பதை நாங்கள் விளக்குகிறோம்.

அசாமின் நிலப்பகுதி கிட்டத்தட்ட நதி பள்ளத்தாக்குகளால் ஆனது. அசாமின் புவியியல் பரப்பளவு 78,438 சதுர கி.மீ ஆகும், இதில் 56,194 சதுர கி.மீ பிரம்மபுத்ரா நதி பள்ளத்தாக்கால் சூழப்பட்டுள்ளது. பராக் நதி பள்ளத்தாக்கு, இரண்டு மலை மாவட்டங்களுடன், மீதமுள்ள 22,244 சதுர கி.மீ. ஆக்கிரமித்துள்ளது.

இரண்டு ஆறுகள், 48 பெரிய துணை நதிகள் மற்றும் ஏராளமான துணை நதிகள் அதன் பள்ளத்தாக்குகளில் பாயும் நிலையில், அசாமின் நதி வலைபின்னல் அமைப்பு மாநிலத்தில் 40% வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது.

இருப்பினும், அசாமின் மிக நீளமான நதி, பிரம்மபுத்ரா, அதன் கரைகளை அரித்து வருவதன் மூலம் அதிக நிலத்தை கரைக்கிறது. 1912-28 ஆண்டுகளில் இது முதன்முதலில் கணக்கெடுக்கப்பட்டபோது, இந்த நதி 3,870 சதுர கி.மீ பரப்பளவில் இருந்தது. 2006 ஆம் ஆண்டளவில் இந்த பகுதி 57% அதிகரித்து 6,080 சதுர கி.மீ. ஆக உள்ளது. இந்த நதி சராசரியாக 5.46 கி.மீ அகலம் கொண்டது, ஆனால் சில இடங்களில் அரிப்பு மூலம் 15 கி.மீ. ஆக உள்ளது.

நிலம் மற்றும் வாழ்வாதாரங்கள் இழப்பு

சொந்த கரையோரங்களையே கபளீகரம் செய்வதால், பிரம்மபுத்திராவும் அதன் துணை நதிகளும் முழு கிராமங்களையும் அழித்தன. 2010 மற்றும் 2015 க்கு இடையில், 880 கிராமங்கள் முற்றிலுமாக அரிக்கப்பட்டன; 67 கிராமங்கள் ஓரளவு அரிக்கப்பட்டுள்ளன; இந்த ஐந்தாண்டு காலத்தில் 36,981 குடும்பங்கள் நதி அரிப்பால் வீடுகளை இழந்துள்ளன.

வீடுகளோடு மட்டுமின்ற, அசாமின் குடும்பங்களும் விவசாய நிலங்களை இழந்து வருகின்றன: 3,800 சதுர கி.மீ விவசாய நிலங்கள் - இது, கோவாவை விட பெரிய பகுதி - 1954 முதல் அரிப்புகளால் இழந்துள்ளது. அசாமின் மக்கள்தொகையில் 75%-க்கும் மேலான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அல்லது தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை சார்ந்துள்ளது என்பதால், மாநிலத்தில் நிலம் என்பது ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. நில இழப்பு என்பது பொதுவாக அவர்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாகும்.

அசாமில் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களில் 85% க்கும் மேலான சிறு அல்லது குறு விவசாயிகளாக - சராசரியாக வெறும் 0.63 ஹெக்டேர், சிறிய கால்பந்து மைதானத்தின் அளவு - வகைப்படுத்தப்பட்டுள்ளனர்; பலர் தங்களது நிலங்களை அரித்து இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.

படிவதை விட அரிப்பு அதிகம்

பிரம்மபுத்ரா வாரியத்தின் ஆண்டு அறிக்கையில், 1988 மற்றும் 2015 க்கு இடையில், நதியானது அதன் கரையில் நிலம் படிமானத்தை செய்ததாகக் கூறியது.

இருப்பினும், 208 சதுர கி.மீ (20,800 ஹெக்டேர்) நிலம் பிரம்மபுத்ராவின் கரைகளில் படிமானம் ஆகி இருந்தாலும், மூன்று மடங்கிற்கும் மேலாக அரிக்கப்பட்டது.

ஒரு நதியால் சேகரமாகி படிந்த நிலத்தின் மேல் மண் உருவான பின்னரே சாகுபடிக்கு பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது; பொதுவாக இது பல ஆண்டு செயல்முறை. இதன் பொருள் ஒரு வருடத்தில் இழந்த விவசாய நிலத்தை திரும்பப் பெற பல ஆண்டுகள் ஆகும்.

எனினும், அசாம் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் 8,000 ஹெக்டேர் நிலத்தை ஆற்றில் இழந்து வருகிறது. 1950ஆம் ஆண்டு முதல், மொத்தம் 427,000 ஹெக்டேர் நிலம் பிரம்மபுத்ரா மற்றும் அதன் துணை நதிகளில் இழக்கப்பட்டு உள்ளதாக அசாமின் நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 7.4% ஆகும்.

நீண்ட கால தீர்வுகள் எதுவும் பயன்பாட்டில் இல்லை

இன்றுவரை, அசாமின் நீர்வளத் துறையானது மாநிலம் சந்தித்து வரும் மண் அரிப்பு பிரச்சினைகளை சமாளிக்க எந்தவொரு நீண்டகால நடவடிக்கைகளையும் செயல்படுத்தவில்லை.

வெள்ளத்தை நிர்வகித்தல், உடனடி மற்றும் குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்துதல், கட்டுகளை நிர்மாணித்தல் போன்றவற்றில் அதன் முயற்சிகளை அது கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சகம் இதுவரை 4,473 கி.மீ புதிய கட்டுகளை கட்டியுள்ளது மற்றும் இதுவரை 655 கி.மீ. வலுப்படுத்தி உள்ளது. இருப்பினும், கரையோர மண் அரிப்பு காரணமாக அரிப்பு மீறப்படுகின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகமானவர்களுக்கு ஆபத்து

பிரம்மபுத்ரா நதி பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரித்துள்ளது. 1940-41 ஆம் ஆண்டில், அசாமின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளத்தாக்கின் மக்கள் அடர்த்தி சதுர கி.மி./ 9 என்பது 29 நபர்கள் என்று அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மக்கள்தொகை அடர்த்தி 200 நபர்கள் / சதுர கி.மீ. என உயர்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் அதன் நதிகளின் தயவில் தான் உள்ளனர்.

(அகமது, கென்ட் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பட்டதாரி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.