சென்னை: இந்தியாவில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பதை காணலாம், இது பல தசாப்த காலமாக பெற்ற பலன்களை மாற்றியமைக்கிறது என்பதை, சமீபத்தில் வெளியான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS) முதல் கட்டத்தின் ஆரம்ப தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அடுத்தடுத்த கட்டங்கள் இதேபோன்ற போக்குகளைக் காண்பித்தால், இது 20 ஆண்டுகளில் குழந்தை வளர்ச்சி குறைபாடு - வயதுக்கேற்ற உயரமின்மை - அதிகரிப்பைக் குறிக்கும். அதிக குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் கிடைப்பதாக, டிசம்பர் 12 அன்று வெளியான தரவு காட்டுகிறது.

அதேநேரம், நேர்மறையான தகவலாக, 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs), 15 மாநிலங்களின் பெண்கள், 2015-16-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது திருமணத்திற்கு பிந்தைய வன்முறையை குறைவாக அனுபவித்ததாக,கணக்கெடுப்பின் கடைசி சுற்று தெரிவித்தது. இருப்பினும், ஒன்பது மாநிலங்களில் அதிகமான இளம் பெண்கள் - 2015-16 உடன் ஒப்பிடும்போது - தாங்கள் குழந்தையாக இருந்தபோது பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக கூறியதை, தரவு காட்டுகிறது.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு என்பது 4,00,000-க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய ஒரு தேசிய பிரதிநிதித்துவம் கொண்ட, வீட்டு கணக்கெடுப்பாகும்; திருமணம், கருவுறுதல், தடுப்பூசிகள் மற்றும் சுகாதார நிலையைப் பற்றிய கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த கணக்கெடுப்பு, இந்தியாவின் சுகாதாரத் தரவுகளின் முக்கியமான ஆதாரமாகும், மேலும் சுகாதாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் ஆரோக்கியத்தில் - குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான மேம்பாடுகளை மதிப்பீடு செய்யவும் பயன்படுகிறது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு பல மாநிலங்களில் மேலும் மோசம்

உலகளவில், குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவிட மூன்று முக்கிய குறிகாட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன: வளர்ச்சி குறைபாடு (வயதுக்குரியதைவிட குறைவான உயரம்), மெலிந்து காணப்படுதல் (உயரத்திற்கேற்றதைவிட மெலிந்த உடல் எடை), மற்றும் எடை குறைபாடு (வயதுக்குரிய எடை குறைவாக இருத்தல்) ஆகியன. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வளர்ச்சி குறைபாடுல்ள குழந்தைகளை இந்தியா கொண்டுள்ளது, மேலும் சஹாரா ஆப்பிரிக்காவிற்கு வெளியே எந்த நாட்டில் இருந்தும் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளில் அதிக பங்கு உள்ளது. இருப்பினும், 2005-06 மற்றும் 2015-16ம் ஆண்டுக்கு இடையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிற்கு முந்தைய இரண்டு சுற்றுகளில் இந்தியா கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தது; வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் பங்கை, கிட்டத்தட்ட 10 சதவீத புள்ளிகளால் குறைத்தது.


இருப்பினும், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் சமீபத்திய ஐந்தாவது சுற்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்தகைய பல ஆதாயங்களை மாற்றியமைத்திருக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. தரவு கிடைக்கப்பெற்ற பெரும்பான்மையான மாநிலங்களில், எடை குறைபாடு, மெலிந்த உடல், வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற செல்வந்த மாநிலங்களில் வளர்ச்சி குறைபாடு விகிதங்கள் உயர்ந்துள்ளன, இவை அனைத்தும் முந்தைய தசாப்தத்தில், வளர்ச்சி குறைப்பாடு விகிதத்தை குறைவாக கொண்டிருந்தவை.


கணக்கெடுப்பின் 1வது சுற்று தரவு குறிப்பிடுவது போல், குழந்தைகளின் வளர்ச்சிக்குறைபாட்டின் அகில இந்திய விகிதங்கள் உயர்ந்திருக்குமானால், அது 1998-99ம் ஆண்டில் தொடங்கி, முதலாவது குழந்தை வளர்ச்சி குறைபாட்டின் அதிகரிப்பைக் குறிக்கும். (குழந்தை ஊட்டச்சத்து குறித்த முந்தைய தரவு, மூன்று வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகளுக்கானது. அதே நேரம், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றுகளுக்கான தரவு, இந்த புள்ளிவிவரங்களை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக தெரிவித்தது. இது அந்த ஆண்டோடு நேரடி ஒப்பீடு செய்வது கடினம்; இருப்பினும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு விகிதங்கள் 1998-99ம் ஆண்டு முதல் 2005-06ம் ஆண்டு வரை குறைந்துவிட்டன).

தாயின் ஊட்டச்சத்து, சுகாதாரம், பிறக்கும் போது குழந்தையின் எடை மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்து உள்ளிட்ட மாறுபாடுகள், வளர்ச்சி குறைபாட்டில் பங்கு வகிக்கின்றன; எனவே வளர்ச்சி குறைபாடு அதிகரிப்பு என்பது தற்போதைய அரசின் சுகாதாரம் அல்லது ஊட்டச்சத்து கொள்கைகள் குறித்த ஒரு வாக்கெடுப்பு அல்ல என்று, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனன் எச்சரித்தார். "ஆனால் இது ஒரு நல்ல செய்தியல்ல," என்ற அவர், 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு, கடந்த சில ஆண்டுகளின் பொருளாதார மந்தநிலையின் ஒரு பகுதியாக பிரதிபலிக்கிறது என்றார்.

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் பூர்ணிமா மேனனுடன் நாங்கள் பேசினோம். அவர், ஐ.எஃப்.பி.ஆர்.ஐ (IFPRI) இன் வறுமை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் தெற்காசியா ஊட்டச்சத்து திட்டங்களுக்கான கருத்துரு தலைவராகவும், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊட்டச்சத்து கொள்கையை ஆதரிக்கும் போஷன் (POSHAN - Partnerships and Opportunities to Strengthen and Harmonize Actions for Nutrition in India) அமைப்பின் இயக்குநராகவும் உள்ளார். மேனன், உலக குழந்தைகளின் நிலை மற்றும் உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கைக்கான ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றுகிறார், இதற்காக அவர் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள குழந்தை ஊட்டச்சத்து தரவுகளில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து வருகிறார்.

"கடந்த சில ஆண்டுகளின் பொருளாதார மந்தநிலையின் தாக்கமும், எதிர்கொண்ட சில பொருளாதார அதிர்வலைகளின் தாக்கங்களை தான் இப்போது நாம் காண்கிறோம்" என்று மேனன், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "இந்த கணக்கெடுப்பு 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது, மேலும் தரவு 0-5 வயதுடைய குழந்தைகளுக்கானது, எனவே நாம் பார்ப்பது 2015-19 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பமாக இருக்கும்போது அவர்களின் தாய்மார்களின் ஆரோக்கியம் குறித்தது. இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த குடும்பங்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நாம் இப்போது படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், இது குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு அடிப்படையில் இத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

குழந்தைகளின் ஊட்டச்சத்து, சிறந்த சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது முக்கியம், அதேநேரம், பொருளாதார வளர்ச்சியும் சம அளவில் இருப்பது முக்கியமானது என்று மேனன் கூறினார். "பொருளாதார வளர்ச்சி இல்லாமல் குழந்தை வளர்ச்சி குறைபாடு குறைந்துவிட்டதாக எந்தவொரு நாடும் உலகில் இல்லை என்று நினைக்கிறேன். இந்தியாவின் வெற்றிகரமான மாநிலங்களில் இதை நாம் கண்டிருக்கிறோம் - முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஐ.சி.டி.எஸ் செயல்படுத்தும் நல்ல சுகாதார அமைப்பையும் கொண்டுள்ளது; அதேநேரம் அங்கு பொருளாதார வளர்ச்சியையும் நாம் கண்டிருக்கிறோம்" என்றார்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவு, சுகாதாரத்தில் முன்னேற்றம் மற்றும் ஐசிடிஎஸ் போன்ற திட்டங்களின் விரிவாக்கப்பட்ட கவரேஜ் ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால் இது மூன்று கால் கொண்ட இருக்கையை போன்றது, மக்கள் நன்றாக வாழ போதுமான வருமானம் ஈட்டவில்லை என்றால், ஊட்டச்சத்தின் முன்னேற்றங்களை காண முடியாது என்று, மேனன் கூறினார்.

குழந்தை வளர்ச்சி குறைபாடு அதிகரிப்பு "மிகவும் கவலை அளிக்கிறது", மேனன் கூறினார்: "உலகில் எந்தவொரு நாட்டையும் கண்டறிவதற்கு நீங்கள் கடுமையாக அழுத்தம் கொடுக்கப்படுவீர்கள் என்று நான் நினைக்கிறேன். இரண்டாம் உலகப் போரின் முடிவில் பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து 1944-45 ஆம் ஆண்டு டச்சு பஞ்சம் போன்ற காலங்கள் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தின, அது சுகாதார விளைவுகளை கடுமையாக பாதித்தது என்று அவர் கூறினார். "இந்தியாவின் சில பகுதிகள் உள்ளன, அங்கு மக்கள் எவ்வாறு வாழ்ந்து வருகிறார்கள், கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்கள் என்பது நமக்கு தெரியாது" என்றார்.

இப்போது வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவு, 2019 இல் சேகரிக்கப்பட்டது, மேலும் ஊரடங்கை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உணவுப் பாதுகாப்பின்மைக்கு இது காரணமல்ல என்று மேனன் சுட்டிக்காட்டினார். "உணவு பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு அரசால் நடத்தப்பட்ட பெரிய மாதிரி ஆய்வுகள் - ஒருவேளை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும், தொலைபேசியில் நடத்தினாலும் கூட - நமக்கு அவசரத் தேவையாக உள்ளது" என்றார் அவர்.

2000களின் முற்பகுதியில் தடுப்பூசி ஆதாயங்கள் சில இழப்புகளை மாற்றியுள்ளன

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 இன் முதல் கட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 18 மாநிலங்களில் குழந்தைகள் தடுப்பூசி விகிதத்தில் அதிகரிப்பை கண்டுள்ளன - குறைந்தது 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்போது இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 70% க்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடுவதாக தெரிவிக்கின்றன. இதன் பொருள், காசநோயில் இருந்து பாதுகாக்கும் பி.சி.ஜி தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸை அவர்கள் பெற்றுள்ளனர் என்பதாகும்; டிபிடி தடுப்பூசியின் மூன்று அளவுகள், இது தொண்டை அழற்சி, தொண்டை அடைப்பு ( இருமல்) மற்றும் இழுப்பு வாதம் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது; போலியோ தடுப்பூசியின் மூன்று அளவுகள் மற்றும் அம்மை தடுப்பூசியின் ஒரு டோஸ். கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை தடுப்பூசி விகிதத்தில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ள மாநிலங்களில் கோவா மற்றும் கேரளா ஆகியன அடங்கும்.

குழந்தை தடுப்பூசியின் ஒட்டுமொத்த பலன்கள், ஓரளவிற்கு 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்துள்ளன. 1998-99 மற்றும் 2005-06ம் ஆண்டுக்களுக்கு இடையில், இந்த 22 மாநிலங்களில் ஆறு - கோவா மற்றும் கேரளா உட்பட - குழந்தை தடுப்பூசி விகிதங்களில் சரிவை சந்தித்தன. அடுத்த 10 ஆண்டுகளில், பெரும்பாலான மாநிலங்கள் தங்களது தடுப்பூசி விகிதங்களில் பெரிய அதிகரிப்புகளை கண்டன, இரண்டு மட்டுமே சரிவை சந்தித்தன (கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்). கடந்த ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி விகிதங்கள் மேலும் உயர்ந்து, அந்த பலன்களை உருவாக்கியதாகத் தெரிகிறது.


கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கடந்த தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு சுற்றுகளில் இருந்து சில படிப்பினைகள் அறிவுறுத்தலாக இருக்கும். தடுப்பூசிகளைப் பெற அதிக வாய்ப்புள்ளவர்கள் - அதிக வருமானம் கொண்ட வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள், மற்றும் படித்த தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைப்பருவ தடுப்பூசிகளை சரியாக முடித்தவர்கள் மற்றும் சரியான நேரத்தில் முடிப்பவர்களுக்கு வாய்ப்புள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 கூறுகிறது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் அதிகமான குழந்தைகளைப் போலவே, சிறுவர்களும் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சிறுமிகளை விட சற்றே அதிக வாய்ப்பில் உள்ளனர், பின்னர் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடும்போது பெரிய குடும்பங்களின் முதல் குழந்தைகளுக்கு வாய்ப்பு என்று தரவு காட்டுகிறது.

சீக்கிய குழந்தைகள் மற்றும் உயர் சாதி குழந்தைகள் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதோடு முஸ்லீம் மற்றும் பவுத்த மத குழந்தைகள் இதில் மிகக் குறைவானவர்களாகவும் உள்ளனர். இருப்பினும், இருப்பிடம் இந்த குறைபாடுகளில் சிலவற்றை மீறுகிறது; உதாரணமாக, குஜராத்தில் இந்து குழந்தைகளை விட கேரளாவில் உள்ள முஸ்லீம் குழந்தைகள் தடுப்பூசிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

திருமண வன்முறை குறையலாம், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும்

கர்நாடகாவைத் தவிர - பல முக்கிய மாநிலங்கள், திருமணத்திற்குள் பெண்கள் அனுபவித்ததாகக் கூறும் உடல் ரீதியான மற்றும் / அல்லது பாலியல் வன்முறைகளில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக புதிய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவு காட்டுகிறது. கடந்தகால தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தரவு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் கணவரால் வன்முறை அதிகமாக இருந்தது, பின்தங்கிய மாநிலங்களில் கூடுதலாகவும், பின்தங்கிய மக்களிடையே மிக அதிகமாகவும் இருந்ததை காட்டுகிறது. 2015-16 ஆம் ஆண்டில், 18-49 வயதுடைய திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், தாங்கள் கணவரால் வன்முறையை அனுபவித்ததாகக் கூறினர், இது 2005-06 ஆம் ஆண்டில் இருந்ததைவிட மேலும் சரிவாகும்.


இருப்பினும், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களின் இளம்பெண்கள், 2015-16ம் ஆண்டைவிட குழந்தைகளாக பாலியல் வன்முறையை அதிகம் அனுபவித்ததாகக் கூறினர். 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 5% க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், குழந்தை பாலியல் வன்முறையை அனுபவித்ததாக தெரிவித்தனர். எண்ணிக்கையானது, பாலியல் வன்முறையை தெரிவிப்பதன் அளவைக் குறிக்கின்றன; 2019 ஆம் ஆண்டில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வெறும் 47,000 க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 10,000 குழந்தைகளில் ஒரு எஃப்.ஐ.ஆர் ஆகும்.


அரசு திட்டங்களில் சில முன்னேற்றம்

கணக்கெடுக்கப்பட்ட பெரும்பாலான மாநிலங்களில் கழிப்பறைகளை அணுகுவதற்கான விரிவாக்கம் தரவு காட்டுகிறது. இருப்பினும், பெரும்பாலான மாநிலங்கள் சுகாதார காப்பீட்டின் கீழ் வரும் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சுகாதார அதிகாரிகள், அறிக்கையை அறிமுகப்படுத்தியதில், எச்சரிக்கையாக இருக்கிறார்கள், 100 மில்லியன் ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை சுகாதார காப்பீட்டுத் தொகையை வழங்கும் செப்டம்பர் 2018 இல் நிறுவப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தாக்கத்தை இந்த கணக்கெடுப்பு கைப்பற்றியிருக்க வாய்ப்பில்லை.

(இந்தியாஸ்பெண்ட் மூத்த ஆசிரியர் கார்த்திக் மாதவபெட்டி, இக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.