பெங்களூரு: கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மிக உயர்ந்த விகிதத்தை அசாம் கொண்டிருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. பெண்களுக்கு எதிரான மூன்று வகை குற்றங்களில் - அதாவது வீட்டு வன்முறை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகியன - 2016 ஆம் ஆண்டு முதல் 2019 வரை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக, தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) தரவுகள் கூறுகின்றன.

கடந்த 2020 டிசம்பரில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 (NFHS) 2019-20 இல் இணைக்கப்பட்ட பாலின அடிப்படையிலான வன்முறை தரவுகளிலும் அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்கும் போக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அசாமில் 30% க்கும் மேற்பட்ட பெண்கள் கொடூரமான வன்முறைக்கு ஆளானதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -5 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 இல் (2015-16) 24.5% ஆக இருந்தது, மற்றும் 8% இளம் பெண்கள் பாலியல் வன்முறைகளைப் பதிவு செய்துள்ளனர், இது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு -4 இல் 5.8% ஆக இருந்தது.

அசாமில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் இந்திய சராசரியை விட அதிகமாக உள்ளது - 2019 ஆம் ஆண்டில், அசாமின் குற்ற விகிதம் (100,000 பெண் மக்களுக்கு) இந்திய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. அதிகரித்த குற்றங்களின் எண்ணிக்கைப்பதிவில் அதிகரிப்பு அல்லது குற்றங்களை பதிவு செய்வது பரிந்துரைக்கிறதா? இரண்டுமே தான் , பெண் குழுக்களைச் சேர்ந்த ஆர்வலர்கள் கூறுகின்றனர், இவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்து 2021 மகளிர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். தேர்தல் நடக்கும் அசாமில், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மற்றும் தணிப்பது, பிற பாலின அடிப்படையிலான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரம் என்பது அதிகரித்ததன் காரணமாக, குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அசாம் காவல்துறை கூறுகிறது. கிராமப்புற அசாமில், பெண்களுக்கு குறைவான குற்றங்களே பதிவானதாக அவர்கள் தெரிவிக்கின்றனர், அச்சம் மற்றும் நிதிக்கு வாழ்க்கைத் துணைவரை சார்ந்திருத்தல் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தியாவின் மூன்றாவது மிக அதிக கிராமப்புறங்களை கொண்ட ஒரு மாநிலத்தில், நகர்ப்புற பெண்களை விட அதிகமாக கிராமப்புறங்கள் மோசமான வன்முறைகளை சந்தித்ததாக, என்.எஃப்.எச்.எஸ் -5 ஆய்வு தெரிவித்தது. நாங்கள் பேசிய பல மகளிர் உரிமை ஆர்வலர்கள், கிராமப்புறங்களில் குறைவான பதிவானதிற்கான இந்த காரணங்கள், நகர்ப்புற அசாமில் உள்ள பெண்களுக்கும் பொருந்தும் என்பதே உண்மை என்று கூறினார். என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்கள் அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் "பனிப்பாறையின் முனை" மட்டுமே என்றும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களில் சில அதிகரிப்புகள் பின்னடைவின் விளைவாக ஏற்படக்கூடும் என்றும், ஏனெனில் மாநிலத்தில் ஆணாதிக்க விழுமியங்களை பெண்கள் அதிகளவில் சவால் செய்கிறார்கள்.

நார்த் ஈஸ்ட் நெட்வொர்க் (NEN - என்இஎன்), பூர்வ பாரதி கல்வி அறக்கட்டளை / நிர்வாகத்தில் பெண்கள், பெண்கள் தலைமைத்துவ பயிற்சி மையம் மற்றும் சோப்டோ குறிப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்கள் மற்றும் அவர்கள் மீதான பாலியல் வன்முறை, சூனிய வேட்டை, வீட்டு வன்முறை, நெருக்கமான கூட்டாளர் துஷ்பிரயோகம், ஆசிட் வீச்சு தாக்குதல்கள், கடத்தல், சைபர் கிரைம்கள் மற்றும் சிறுமியர் திருமணம் ஆகியன மாநிலத்தில் அதிகரித்து வருகின்றன. பெண்கள் தங்கள் வீடுகள் மற்றும் பணியிடங்கள் உட்பட தனியார் இடங்களிலும், பொது போக்குவரத்து, சாலைகள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் பாதுகாப்பற்ற இருப்பதாக அறிக்கை கோருகிறது: பஞ்சாயத்து, மாவட்ட மற்றும் மாநில அளவில் பெண்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைத்தல்; அனைத்து அசாம் மாவட்டங்களின் தொலைதூர மூலைகளிலும் 181 மகளிர் ஹெல்ப்லைனை அணுகுவது; மற்றும் வீட்டு வன்றைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005, அசாம் சூனிய வேட்டை (தடை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்- 2018 மற்றும் பணியிடத்தில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறைத்தல்) சட்டம் -2013, மற்றும் திருத்தப்பட்ட மாநில பாதிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் ஆகியன.

"பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமாளிக்க அர்ப்பணிப்புள்ள பணிக்குழுவைக் கொண்ட ஒரு மாநிலக் கொள்கை காலத்தின் அவசரத் தேவையாகும்" என்று அசாமில் எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் என்.இ.இ.அசாம் மாநில ஒருங்கிணைப்பாளர் அனுரிதா ஹசாரிகா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

வீட்டுக் கொடுமை, கடத்தல் மற்றும் துன்புறுத்தல் அதிகரிப்பு

அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2005 முதல் 2019 வரை அதிகரித்து வந்துள்ளதாக மாநிலத்தின் குற்ற மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகளின் (சி.சி.டி.என்.எஸ்) தகவல்கள் தெரிவிக்கின்றன.


கணவர் மற்றும் / அல்லது அவரது உறவினர்களால் கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்குகள், கடத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியன 2005 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் படிப்படியாக அதிகரித்துள்ளன; மூன்று குற்றங்களிலுமே அதிகமான பதிவுகள், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498-ஏ இன் கீழ் கணவர் மற்றும் / அல்லது அவரது உறவினர்களால் கொடுமை என வகைப்படுத்தப்பட்ட வழக்குகளில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது.


சி.சி.டி.என்.எஸ் (CCTNS) தரவுகளில் காணப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து ருவது, இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு சுகாதார கணக்கெடுப்பான என்.எஃப்.எச்.எஸ் இல் தெரிகிறது. இது உடல்நலம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த தேசிய அளவில் பிரதிநிதித்துவ தரவை அவ்வப்போது சேகரிக்கிறது. என்.எஃப்.எச்.எஸ். -4 (2015-16) மற்றும் என்.எஃப்.எச்.எஸ். -5 (2019-20) ஆகியவற்றுக்கு இடையிலான நான்கு ஆண்டுகளில், கணவரால் வன்முறை எதிர்கொண்டதாக புகாரளித்த மனைவியரின் விகிதம் அசாமில் 24.5% முதல் 32% வரை அதிகரித்துள்ளது. பாலியல் வன்முறைகளைப் புகாரளித்த 18 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களின் எண்ணிக்கை 8% ஆக அதிகரித்துள்ளது, இது என்.எஃப்.எச்.எஸ்.-4 இல் 5.8% ஆக இருந்தது. அசாமில் அதிகமான கிராமப்புற பெண்கள் நகர்ப்புற பெண்களை விட (32.9%) என்.எஃப்.எச்.எஸ்.-5 இல் (26.6%), மற்றும் கிராமப்புற பெண்கள் (8.1%) நகர்ப்புறத்தை விட (7.4%) பாலியல் வன்முறைகளை பதிவு செய்துள்ளனர்.

அசாமில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட வேகமாக வளர்ந்து வருகின்றன, மேலும் குற்ற விகிதங்கள் அகில இந்திய சராசரியை விட அதிகமாக உள்ளன என்று என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டில், அசாமின் குற்ற விகிதம் (100,000 பெண் மக்களுக்கு) தேசிய சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இது டெல்லியை விட உயர்ந்தது, இது 2012 நிர்பயா கும்பல் வழக்கின் பின்னர் அதன் புகார் அளிக்கும் உள்கட்டமைப்பை உறுதிப்படுத்தியது.


கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் பெண் மக்கள்தொகையில் 3% க்கும் குறைவாகவே அசாம் இருந்தது, ஆனால் 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பங்கு 7.4% ஆக இருந்தது, இது 2005 ஆம் ஆண்டில் இருந்து அதன் மிக உயர்ந்த கட்டத்தில் இருந்தது. இதற்கு மாறாக, பெண் மக்கள்தொகையில் 1.5% உள்ள டெல்லி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதன் பங்கு 2015 முதல் படிப்படியாக குறைந்து வருகிறது.



கிராமப்புற மற்றும் நகர்ப்புற அசாமில் அதிக விகிதங்கள்

அசாமில் 100,000 பெண் மக்கள்தொகைக்கு பெண்களுக்கு எதிரான குற்ற விகிதத்தில் பெரிய அளவிலான மாநில வேறுபாடுகள் உள்ளன என்று 2019 முதல் என்.சி.ஆர்.பி தரவு தெரிவிக்கிறது. வடக்கு அசாமில் உள்ள தர்ராங் மாவட்டத்தில் குற்ற விகிதம் 338 ஆகும், இது மாநில சராசரியான 177.8 ஐ விட இரு மடங்கு, மத்திய அசாமில் கர்பி அங்லாங் குற்ற விகிதம் 35 ஆகும்.

ஏழு மாவட்டங்கள் - அதாவது ஜோர்ஹாட், சிப்சாகர், ஹைலாகண்டி, துப்ரி, பார்பேட்டா, போங்கைகான் மற்றும் ஹோஜாய் - மாநில சராசரியை விட குற்ற விகிதங்கள் அதிகம். 2016 ஆம் ஆண்டில், கம்ரூப் மாவட்டம் கம்ரூப் கிழக்கு மற்றும் கம்ரூப் பெருநகர மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது; பிந்தையது பெண்களுக்கு எதிரான சராசரி குற்றங்களை விட அதிகமாக உள்ளது. இருப்பினும், என்.சி.ஆர்.பி அறிக்கைகள் மாவட்டங்களில் பிளவுகளை இன்னும் பிரதிபலிக்கவில்லை, எனவே அவை எங்கள் மாவட்ட வாரியான பகுப்பாய்வில் இருந்து விலக்கப்பட்டுள்ளன (கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்). மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 இன் படி, பெண்களுக்கு எதிரான அதிக குற்ற விகிதத்தை அறிக்கையிடும் மாவட்டங்கள், மற்றும் அங்கு குடியிருப்பவர்களின் இனம் மற்றும் மத தொடர்பை பொறுத்து வேறுபடுகின்றன.

அதிகரித்து வரும் மக்கள் தொகை, குற்ற விகிதங்களை உயர்த்த வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அசாமிற்கான என்.சி.ஆர்.பி 2019 தரவு, மாவட்டங்களின் மக்கள்தொகை அளவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற விகிதங்களுக்கு இடையில் அதிகரிப்பு அல்லது குறைவு பற்றி குறிக்கவில்லை.


அசாமிய சமுதாயத்தில் பெண்கள் மீதான சமூக பாகுபாட்டின் சான்றுகளை சுட்டிக்காட்டி மகளிர் தேர்தல் அறிக்கை- 2021, "கிராமங்களிலும் நகரங்களிலும் அவர்களுக்குரிய ஆதரவு சேவைகள் மறுக்கப்படுகின்றன", பஞ்சாயத்து முதல் மாவட்ட மற்றும் மாநில அளவில் வரை அனைத்து நிலைகளிலும் மகளிர் பாதுகாப்புக் குழுக்களை நிறுவ வேண்டும் என்று கோரியுள்ளது. .

அதிகரித்த புகாரளித்தல்

என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்களானது, சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு புகார் அளிக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன மற்றும் "வழக்குகள் தொடர்பான அனைத்து நிலைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்று புள்ளிவிவர அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

"அறிக்கையிடல் மேம்பட்டுள்ளது. பெண்கள் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் இனி வன்முறையை பொறுத்துக்கொள்வதில்லை. அவர்கள் காவல் நிலையத்திற்கு வர முடியாவிட்டால், அவர்கள் ஒரு எஃப்.ஐ.ஆர் [முதல் தகவல் அறிக்கை] எழுதி மின்னஞ்சல் செய்யலாம். மின்னஞ்சலில் இருந்தாலும் வழக்கை பதிவு செய்ய காவல்துறை தேவை," என்று, அசாம் காவல்துறை முதலமைச்சரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) ரோஸி கலிதா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பிரிவு 498 (ஏ) இன் கீழ் குடும்ப வன்முறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, ​​2005-2013 க்கு இடையில், உள்ளூர் காவல்துறையினர் தங்கள் விசாரணையின் நகலை அசாம் காவல்துறை குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக, கலிதா கூறினார். 2010 ஆம் ஆண்டில், சில சூழ்நிலைகளில் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் அளித்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41 (ஏ) திருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டு வன்முறை வழக்கில், சந்தேக நபர் (கள்) தங்களை காவல்துறைக்கு முன்வைத்தால், அது போதுமானது மற்றும் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முடியாது. இது வரதட்சணை மற்றும் வீட்டு வன்முறைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளை திறம்பட எதிர்கொண்டது, என்று கலிதா கூறினார்: "சில வழக்குகளில், சட்டங்கள் பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பாலும், சித்தரவதைக் குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்பதை விசாரணைகள் நிரூபிக்கின்றன" என்றார்.

இருப்பினும், கிராமப்புற அசாமில், குறைவான மதிப்பீடு உள்ளதாக கலிதா கூறினார். கிராமப்புற பெண்கள் காவல் நிலையத்திற்கு வர தயங்குகிறார்கள் - ஏனெனில் அவர்கள் வீடுகளை விட்டு நீக்கி வெளியேற்றப்படலாம் என்று பயப்படுகிறார்கள், அவர்கள் தங்களது கணவரை சார்ந்து இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அசாமின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 86% கிராமப்புறமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மூன்றாவது மிக கிராமப்புற மாநிலமாக திகழ்கிறது.

போடோலாந்து பிராந்திய பகுதி மாவட்டமான சிராங்கில் வீட்டு வன்முறை குற்றங்களில் ஐந்து குற்றங்களில் ஒன்று மட்டுமே போலீசில் பதிவாகியுள்ளதாக சிராங்கில் இருக்கும் ஆக்‌ஷன் ஃபார் நார்த் ஈஸ்ட் டிரஸ்டின் (ஏஎன்டி) மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளரான லக்ஷ்மி சேத்ரி தெரிவித்தார். இந்த கிராமப்புற மாவட்டத்தில் குடும்ப வன்முறை தலையீட்டு திட்டத்தை சேத்ரி முன்னெடுத்து வருகிறார். திட்டம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் ஏ.என்.டி.யின் சட்ட உதவி மையத்திற்கு கொண்டு வரப்பட்ட கிட்டத்தட்ட 500 குடும்ப வன்முறை வழக்குகளில், 20% க்கும் குறைவானவை காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்படுகிறது என்று சேத்ரி இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பெண்கள் விரும்புவது வன்முறையைக் குறைப்பதற்கும், தங்கள் கணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், திருமணங்கள் அப்படியே இருப்பதற்கும் ஆகும்" என்று சேத்ரி கூறினார். "போலீஸ் விசாரிக்கும் சந்தர்ப்பங்களில் ஒரு பெண் புகார் அளிக்கலாம், எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், ஆனால் நீதிமன்றத்திற்குச் சென்றபின் பெண்க்கள் தங்களது புகாரை திரும்பப் பெறுகிறார்கள். காவல்துறையினருக்கு இது தெரியும், எனவே அவர்கள் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வதற்கு பதிலாக கணவரை ஸ்டேஷனுக்கு அழைத்து, அவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். கடுமையான காயங்கள் இருந்தால் மட்டுமே 498 (ஏ) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன" என்றார்.

12.5% ​​பழங்குடியினராக இருக்கும் அசாம் மாநிலத்தின் மிகப்பெரிய பழங்குடி குழுவான போடோஸ் போன்ற பழங்குடி சமூகங்கள், காவல்துறையினரை இதில் ஈடுபடுத்த தயங்குகின்றன, ஏனெனில் போடோக்கள் வீட்டு வன்முறை அல்லது கூட்டாளி துஷ்பிரயோகத்தை ஒரு குற்றமாகவே அங்கீகரிக்கவில்லை என்று சேத்ரி கூறினார். கலாச்சார ரீதியாக, குடும்ப வன்முறை என்பது இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது, போடோக்கள் மத்தியில் மட்டுமல்ல. போடோஸில் மிகவும் வலுவான பாரம்பரிய முறையீடு உள்ளது; எனவே இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் புகார் அளிக்கப்படுவதில்லை மற்றும் நீதிமன்றங்கள் சம்மந்தப்படுவது அரிது. வீட்டு வன்முறையின் பெரும்பாலான நிகழ்வுகளில், வாழ்க்கைத் துணைவர்கள் மத்தியஸ்தம் மற்றும் நல்லிணக்கத்தின் நோக்கத்துடன் ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்பட்டால், முறையான நீதித்துறைக்கு வெளியே நிதி இழப்பீடு வழங்கப்படுகிறது.

கிராமப்புற அசாமில் உள்ள பல பெண்களுக்கு, முறையாக நீதிமன்றங்களை அணுகுவது கடினம், நீதிமன்ற நடைமுறைகள் நீண்ட காலம் எடுக்கும் என்று சேத்ரி கூறினார். புகார்களைச் செய்யும் பெண்கள் தங்கள் பிறந்த குடும்பங்கள், மாமியார் மற்றும் சமூகத்தினரால், புகாரை பின்வாங்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள், என்று அவர் மேலும் கூறினார்.

நாங்கள் பேசிய பல சமூக ஆர்வலர்களும், கிராமப்புறங்களில் பெண்கள் குறித்த குறைவான புகாரளித்ததற்கு காரணங்கள் இது என்று கூறினார், நகர்புறத்திலும் அதுபோலத்தான். அசாமில், இந்தியாவின் பெரும்பாலான வடகிழக்கு பிராந்தியங்களைப் போலவே, சந்தைகள் போன்ற பொது இடங்களில் பெண்களின் அதிகத் தெரிவுநிலை, இது பெண்களுக்கு சிறந்த மாநிலம் என்ற தோற்றத்தை அளிக்கக்கூடும், ஆனால் உண்மையில் இது அப்படி இல்லை என்று, அசாமின் எட்டு மாவட்டங்களில் பணிபுரியும் பெண்கள் உரிமை அமைப்பான நார்த் ஈஸ்ட் நெட்வொர்க்கின் மாநில ஒருங்கிணைப்பாளர் அனுரிதா ஹசாரிகா கூறினார். "என்.சி.ஆர்.பி புள்ளிவிவரங்கள் பனிப்பாறையின் முனை" என்று ஹசாரிகா கூறினார். "உண்மையில், பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் அறிக்கையிடப்படாமல் போகின்றன, ஏனெனில் சேவைகளுக்கான அணுகல், மோசமான வளர்ச்சி குறிகாட்டிகள் மற்றும் வீட்டு வன்முறை போன்ற குற்றங்களை இயல்பாக்குவது" என்றார்.

வன்கொடுமை அல்லது கூட்டு வன்கொடுமை மூலம் அதிக கொலை விகிதம்

கடந்த 2005 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அசாமில் 100,000 பெண் மக்களுக்கு கற்பழிப்பு குற்ற விகிதம் 33% அதிகரித்துள்ளது, ஆனால் வீட்டு வன்முறை (409%), துன்புறுத்தல் (309%) மற்றும் கடத்தல் (267%) ஆகியவற்றைக் காட்டிலும் குறைந்த விகிதத்தில், பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களிலும் பலாத்காரத்தின் பங்கு 2008 முதல் குறைந்து வருகிறது.


பலாத்கார வழக்குகளின் அதிகரிப்பு ஒரு "... உண்மையான பலாத்கார வழக்குகளின் அதிகரிப்புக்கு சான்று அல்ல. அதற்கு பதிலாக, பெற்றோர்கள், குறிப்பாக சிறுமியர் தரப்பில் பலாத்காரம் செய்தல் வழக்கு மற்றும் சிறுவர் கடத்தல் போன்ற பொய்யான வழக்குகளைத் தாக்கல் செய்யும் வழக்குகள் இவை. திருமணமான பிறகு அவர்கள் பெற்றோரிடம் திரும்பியதும், குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன. ஆனால் நம் அமைப்புகளில், இது ஒரு பலாத்கார வழக்காக இன்னும் குறைகிறது, "என்று கலிதா கூறினார்.

அசாமில் 33% பெண்கள், 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக யுனிசெப் 2019 ஆம் ஆண்டின் அறிக்கையில் மதிப்பிட்டுள்ளது, இது வடகிழக்கில் மிக உயர்ந்தது மற்றும் இந்திய சராசரியை விட அதிகமாகும். கட்டாய குழந்தை திருமணத்தை விட, அசாமில் ஆரம்பகால திருமணங்கள் ஓடிப்போகின்றன என்று ஹசாரிகா மற்றும் சேத்ரி வலியுறுத்தினர். வயதுவந்த மணப்பெண்களுக்காக கடத்தல் வழக்கை பதிவு செய்ய காவல்துறை சட்டப்படி கட்டுப்பட்டுள்ளது, மாநிலம் முழுவதும் கடத்தல் புள்ளிவிவரங்களை எழுப்புகிறது.

ஆனால் பலாத்காரம் / கூட்டு சேர்ந்து கொலை வழக்குகள் வேறு கதையைச் சொல்கின்றன. பெரிய மாநிலங்களில் (10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட) இந்த குற்றங்களின் விகிதம் அசாமில் அதிகமாக உள்ளது. அசாமைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிராவில், 2019 ல் 47 பலாத்காரம் அல்லது படுகொலை சம்பவங்கள் கொலை செய்யப்பட்டன, இது அசாமில் 26 க்கு மாறாக இருந்தது. இந்தியாவின் மக்கள் தொகையில் 3% க்கும் குறைவாக உள்ள அசாம், 2019 ல் நாட்டில் நடந்த இந்த குற்றங்களில் கிட்டத்தட்ட 10% ஆகும்.

**

கடந்த 2013 ஆம் ஆண்டின் ஜஸ்டிஸ் வர்மா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தத் தொடங்கியதில் இருந்து - விரைவான சோதனை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களுக்கான மேம்பட்ட தண்டனை- பெண்களுக்கு எதிரான பல வகையான குற்றங்கள் இப்போது சிசிடிஎன்எஸ் தரவுகளில் சைபர் ஸ்டாக்கிங் உள்ளிட்ட துன்புறுத்தல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று கலிதா கூறினார். ஆகையால், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் அதிகரிப்பு உண்மையான அதிகரிப்பு இரண்டையும் பிரதிபலிக்கிறது (ஏனெனில் பெண்களுக்கு எதிரான பல வகையான குற்றங்கள் இந்த வகையின் கீழ் சேர்க்கப்படலாம்), மேலும் குற்றங்களை காவல்துறைக்கு புகார் அளிப்பது போன்ற அத்தையது அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அசாமின் அனைத்து மாவட்டங்களிலும் ஒன் ஸ்டாப் க்ரைஸிஸ் சென்டர்கள் (OSC - ஓ.எஸ்.சி) செயல்பட்டு வருகின்றன, மேலும் பெண்களுக்கான 181 என்ற ஹெல்ப்லைன் எண் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கிறது, இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாகப் புகாரளிக்க வழிவகுக்கிறது என்று என்.இ.என். ஆராய்ச்சியாளர்களும் ஆர்வலர்களுமான நிலன்ஜு தத்தா மற்றும் ரஷ்மி ரேகா போரா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர் . பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் அதிக விகிதங்களைக் கொண்ட உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது, ஆனால் ஓ.எஸ்.சி. மோசமாக செயல்படும்.

அசாமில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் சில அதிகரிப்பது ஆணாதிக்க பின்னடைவின் விளைவாக இருக்கலாம், ஏனெனில் பெண்கள் ஆணாதிக்க விழுமியங்களை அதிகளவில் சவால் தருவதாக தத்தா மற்றும் போரா இருவரும் கூறினர்.

நீண்டகாலம் எடுக்கும் போலீஸ் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள்

கடந்த 2019 ஆம் ஆண்டில், பெரிய மாநிலங்களில் அசாம் மற்றும் பஞ்சாபில் காவல் விசாரணை முழுமையடையாத வழக்குகளில் முறையே 52.4% மற்றும் 52.5% என நிலுவையில் உள்ளது என்று என்.சி.ஆர்.பி தரவு காட்டுகிறது. இரண்டு அண்டை வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் (62.1%) மற்றும் மணிப்பூர் (81.6%) ஆகியனவும், சிறிய மாநிலங்களில் இந்தியாவில் அதிக நிலுவையில் உள்ள விகிதங்களை அறிவித்துள்ளன.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் குற்ற வகைகளின் அடிப்படையில் நிலுவையில் அல்லது குற்றப்பத்திரிகை புள்ளிவிவரங்களை செயல்படுத்த என்.சி.ஆர்.பி குற்ற வகைகளால் மாநில-பிரிக்கப்படாத நிலுவை விகிதங்களை வெளியிடாது. 2019 ஆம் ஆண்டில், பெரிய மாநிலங்களில் இரண்டாவது மிகக் குறைந்த குற்றப்பத்திரிக்கை வீதமா 43.9% ஐ அசாம் பதிவு செய்ததோடு, மிகக் குறைந்த தண்டனை விகிதத்தை 6.7% ஆகவும் கொண்டிருந்தது. இந்திய சராசரி குற்றச்சாட்டுக்கு 67.2% மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு 50.4% ஆகும்.

91% இல், அசாமில் நீதிமன்றங்களில் ஆறாவது மிக உயர்ந்த நிலுவையில் உள்ளது, அதாவது வழக்குகள் நடைபெற்று வரும் வழக்குகள். மேலும், 39% வழக்குகள் அசாமில் தீர்க்க மூன்று ஆண்டுகளுக்கு மேலாகும், இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு 24% ஆகும்.


நீதிமன்றங்களில் அதிக விகிதத்தில் உள்ள நிலுவைகள் "... நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால், தடயவியல் சான்றுகள் ஒன்றிணைக்க நீண்ட நேரம் எடுக்கும், மேலும் அசாமில் உள்ள நீதித்துறையில் இந்தியாவில் மற்ற இடங்களைப் போல நிரப்பப்படாத பதவிகள் உள்ளன, இது விசாரணைக் காலத்தை நீட்டிக்கின்றன" என்று, கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை மத்தியஸ்தரும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞருமான பஹருன் சைக்கியா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். 2008 ஆம் ஆண்டு முதல், நிலுவையில் உள்ள விகிதங்களைக் குறைக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து, அசாம் பல சிவில் மற்றும் உள்நாட்டு வன்முறை தொடர்பான சில குற்ற வழக்குகளை மத்தியஸ்தத்திற்காக மாற்றியுள்ளது என்று சைக்கியா கூறினார். இது விரைவான தீர்மானத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடயவியல் பகுப்பாய்வின் தாமதங்கள் காரணமாக சோதனைகள் பொதுவாக அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் சில நேரங்களில் அடிப்படை இரசாயனங்கள் கிடைக்கவில்லை, மேலும் காவல்துறையினர் ஆதாரங்களுக்காக மாநிலத்திற்கு வெளியே ஆதாரங்களை அனுப்ப வேண்டும் என்று கலிதா கூறினார். அத்துடன், அசாம் காவல்துறையும் நீதித்துறையும் இந்தியாவில் எல்லா இடங்களிலும் தங்கள் சகாக்களைப் போலவே அதிக சுமைகளை சுமக்கின்றன - இந்தியா முழுவதும் 30 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன, பெரும்பான்மையான கீழ் நீதிமன்றங்களில். இதன் விளைவாக, பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட சட்ட செயல்முறைகளால் சோர்வடைந்து பங்கேற்பதை நிறுத்துவதாக தத்தா மற்றும் போரா கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதுடன், குறைந்த குற்றச்சாட்டு மற்றும் தண்டனை புள்ளிவிவரங்கள் மற்றும் உயர் நிலுவையில் உள்ள விசாரணை மற்றும் நீதிமன்ற வழக்குகள் மோசமான நிர்வாகத்தை அடையாளப்படுத்துவதாக, மகளிர் குழுக்கள் - 2021 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அசாமின் பெண்களுக்கு நீதிக்கான அணுகலை மேம்படுத்த விரைவு நீதிமன்றங்களை நிறுவ வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.