புவனேஸ்வர்: மயூர்பஞ்ச், ஒடிசாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமாகும், இது ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த மாவட்டம், ஒடிசாவின் அதிக பழங்குடி மக்களைக் கொண்டுள்ளது; 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 58% க்கும் அதிகமான மக்கள், பட்டியல் பழங்குடியினரை (STs) சேர்ந்தவர்கள். 2015-16 ஆம் ஆண்டில், நான்காவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS-4) படி, மயூர்பஞ்சில் 43.5% குழந்தைகள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் வயதுக்கு (அல்லது வளர்ச்சி குன்றிய) மற்றும் 43.8% எடை குறைவாக இருந்தனர். இது மாநில சராசரியான 34.1% வளர்ச்சி குன்றிய மற்றும் 34.4% எடை குறைவான ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை விட அதிகமாகும்.

"இந்த குழந்தைகள் வளர்ச்சி குன்றிய மற்றும் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் நோய் மற்றும் மோசமான வளர்ச்சியின் அபாயத்தையும் எதிர்கொள்கின்றனர்,"என்று ஒடிசாவுக்கான ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) கள அலுவலகத்தின் தலைவர் மோனிகா ஓ. நீல்சன் கூறினார். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு -4 அறிக்கையில், மாவட்டத்தில் 15-49 வயதுக்குட்பட்ட 45.6% கர்ப்பிணிப் பெண்கள், இரத்த சோகைக்கு ஆளாகியுள்ளனர், இதில் மாநில விகிதம் 47.6% ஆகும்.

இதற்கு மேல், பெருந்தொற்று மற்றும் ஊரடங்கின் போது பழங்குடி குடும்பங்களின் வேலை மற்றும் காட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்புகளை இழந்தபோது, ​​அவர்களில் பலர் பசியையும் வறுமையையும் எதிர்கொண்டனர். மே 2020 இல், இங்குள்ள பெண் விவசாயிகள், சத்துள்ள பயிர் சாகுபடி முயற்சியைத் தொடங்கினர் --அவர்களின் வீட்டு முன் முற்றத்திலும் கொல்லைப்புறத்திலும், சத்துள்ள காய்கறிகளின் தோட்டத்தை உருவாக்கினர்-- மயூர்பஞ்ச் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்), ஒடிசா வாழ்வாதார மிஷன் (ஓஎல்எம்) ஆகியன, இதற்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. ஜூன் 2019 மற்றும் மே 2020-க்கு இடையில் ஒடிசாவின் 13 மாவட்டங்களில் 1,00,000 சத்துள்ள தோட்டங்களை நிறுவிய இதே போன்ற முந்தைய திட்டத்தின் வெற்றியால் ஊக்கமடைந்து, விவசாயிகள் தங்கள் வருமானத்தையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்தி, பெருந்தொறின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கும், பசுமை மீட்புக்கும் உறுதுணையாக இருந்தனர்.

மேலும், 40,000 க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் தங்கள் சத்துள்ள தோட்டங்களில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்து, தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை அளித்து, கோவிட் -19 பெருந்தொற்ற்றால் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியை போக்கி, தங்கள் குடும்பங்களின் வருமானத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


தொற்றுநோயின் தாக்கம்

ஒடிசாவில், பழங்குடியினர் குடும்பங்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக, சிறு வனப் பொருட்களை (MFP) சேகரிப்பதை நம்பியுள்ளனர். இருப்பினும், பெருந்தொறால் ஏற்பட்ட ஊரடங்கின் போது, ​​பழங்குடி பெண்கள் தங்கள் விளைபொருட்களை விற்க முடியவில்லை, ஏனெனில் அவர்களுக்கு உள்ளூர் சந்தைகளுக்கான அணுகல் இல்லை அல்லது வியாபாரிகள் தங்கள் கிராமங்களில் இருந்து கொள்முதல் செய்ய முடியாமல் துயர நிலைக்கு ஆளாகிறார்கள் என்று அறிக்கை குறிப்பிட்டது.

"ஒடிசா அரசு, வனப்பகுதிகளுக்குள் நடமாட்டத்தை தடை செய்துள்ளது. இது பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான ஒரே ஆதாரத்தை அணுகுவதை இழக்கிறது" என்று, புவனேஸ்வரத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் நில உரிமை ஆர்வலரும், வன உரிமைகள் சட்டம்-2006 என்ற சட்டத்தில் முக்கிய பங்கு வகித்த தேசிய மன்றமான Campaign for Survival and Dignity ஒருங்கிணைப்பாளருமான கோபிநாத் மாஜி கூறினார். இந்தியாவில் சுமார் 100 மில்லியன் பழங்குடியினர் மற்றும் காடுகளில் வாழும் மக்கள், உணவு, தங்குமிடம், மருந்துகள் மற்றும் வருமானத்திற்காக சிறு வனப்பொருட்கள் சேகரிப்பையே நம்பி இருப்பதாக, பழங்குடியினர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மார்ச் 2020 இல் தேசிய ஊரடங்கிற்கு பிறகு, வனப்பொருட்களை அறுவடை செய்வதற்கும் பதப்படுத்துவதற்கும் மத்திய அரசு, ஏப்ரல் 2020 இல் தளர்வு அறிவித்திருந்தாலும், அது பழங்குடிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு மட்டுமே, வெளியில் இருந்து வந்த ஒப்பந்தக்காரர்களுக்கும் வணிகர்களுக்கும் அல்ல, இது வனப் பொருளாதாரத்தை பாதித்தது.

"சார்ஸ்-கோவ்-2 பெருந்தொற்று, மயூர்பஞ்சில் உள்ள பழங்குடி சமூகங்களுக்கு இடையே ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து குறிகாட்டிகளை மோசமாக்கி உள்ளது," என்று, மாவட்டத்தின் ஜாஷிப்பூர் தொகுதி முன்னாள் ஜில்லா பரிஷத் உறுப்பினர் சக்ரதர் ​​ஹெம்ப்ராம் கூறினார். வன அடிப்படையிலான வாழ்வாதார இழப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவு பற்றாக்குறை ஆகியவை பழங்குடியின மக்களின் நல்வாழ்வை சீர்குலைத்துள்ளன.

ஏறக்குறைய, பதிலளித்த 4,000 பேரில் சுமார் 73% பேர், காய்கறிகளின் நுகர்வு குறைந்துள்ளதாகவும், 64% பேர் பருப்பு வகைகளின் நுகர்வு குறைந்துள்ளதாகவும் கூறியது, டிசம்பர் 2020 இல் இலாப நோக்கற்ற உணவுப் பிரச்சாரத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. பதில் அளித்தவர்களில் நான்கு சதவீதம் பேர், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களைச் சேர்ந்தவர்கள், அவர்களில் 77% பேர் ஊரடங்கிற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, தங்களின் உணவைக் குறைத்துள்ளனர் என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. தொற்றுநோயின் தொடக்கத்தில், பழங்குடி குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து சேவைகள், ஏப்ரல் 2020 இல் 68% ஆக குறைந்துவிட்டதாக யுனிசெஃப் அறிக்கை தெரிவிக்கிறது.

ஊட்டச்சத்து தோட்டங்கள்

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பழங்குடி கிராமங்கள் நிலப்பரப்பு, துண்டு துண்டாக நிலம் வைத்திருத்தல், சீரற்ற மழை, மண் அரிப்பு மற்றும் குறைந்த பயிர் உற்பத்தி ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. உள்ளூர் உணவில் உள்ள பன்முகத்தன்மையும், நெற்பயிரின் ஏகப்பயிர் சாகுபடியின் தீவிரமான ஊக்குவிப்பால் சுருங்கிவிட்டது. இந்த முரண்பாடுகள் இருந்தபோதிலும், பழங்குடி பெண் விவசாயிகள் சத்துணவு தோட்டங்கள் வழியாக ஊட்டச்சத்து நிறைந்த பல்வகைப்பட்ட உணவுக்கான அணுகலை அதிகரித்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்து தோட்டங்களுக்கு, ஒரு வட்ட வடிவத்தைப் பயன்படுத்துகின்றன, இதில் ஏழு வளையங்கள் உள்ளன, இதில் பல வகையான இயற்கை பசுமை கீரைகள் மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள், கிழங்குகள் மற்றும் மஞ்சள் நிற பழங்கள் ஆகியன, 'நான்கு வண்ண' உணவை முடிக்கின்றன. பயிர் நடவு காலெண்டர்கள் பயிரிடப்படும் பயிர்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.

"மயூர்பஞ்சில் உள்ள 42,000 க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள், தங்கள் ஊட்டச்சத்து தோட்டங்களில் இருந்து காய்கறிகளை அறுவடை செய்கின்றனர்" என்று, குந்தாவின் கூடுதல் ஒன்றிய மேம்பாட்டு அலுவலர் பசந்த் குமார் ப்ருஸ்டி கூறினார். பழங்குடிப் பகுதிகளில் பெண்கள் பாரம்பரியமாக தங்கள் வீடுகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று, குந்தாவின் நல விரிவாக்க அதிகாரி மனரஞ்சன் நாயக் கூறினார். "இந்த கடினமான நேரத்தில், ஊட்டச்சத்து தோட்டக்கலை மாதிரி, எந்த உணவை வளர்க்க வேண்டும், உட்கொள்ள வேண்டும், விற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய அவர்களுக்கு மேலும் அதிகாரம் அளித்துள்ளது" என்றார்.


ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கிரிபோசி ஒன்றியத்தில் உள்ள ஆதிவாசி பெண் விவசாயி ஒருவர், தனது சத்துணவு தோட்டத்தில் நிற்கிறார். அங்கு அவர் பூசணி, வெண்டைக்காய் மற்றும் பருப்பு வகைகளுடன் பப்பாளி மற்றும் எலுமிச்சை பயிரிட்டுள்ளார். புகைப்பட உதவி: அபிஜித் மொஹந்தி

சத்துணவு தோட்டங்கள் எவ்வாறு வளர்க்கப்படுகின்றன

"சத்துணவு தோட்டத் திட்டங்களை உருவாக்க, விவசாயிகள் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் 33 வேலை நாட்கள் பெற்றனர்" என்று குந்தாவில் உதவி எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் அதிகாரி தபஸ்வினி நாயக் கூறினார். ஒவ்வொரு விவசாயியும் 1,200 சதுர அடி பரப்பளவுள்ள சத்துணவு தோட்டத்தை உருவாக்க ரூ .10,000 ஊதியம் பெற்றார். "பயிர்கள் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, பயிர் பருவங்கள், உள்ளூர் காலநிலை, விளைச்சல் விகிதம் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுகின்றன" என்று, அபிவிருத்தி நடவடிக்கைக்கான தொழில்முறை உதவி (PRADAN) அமைப்புடன் பணிபுரியும் நிலையான விவசாயம் குறித்த முதன்மை பயிற்சியாளர் பிஜய் ராவுல் கூறினார். இந்த அமைப்பு, மயூர்பஞ்சில் உள்ள பழங்குடி விவசாயிகளுக்கு நிலையான விவசாயம் குறித்த தொழில்நுட்ப அறிவை வழங்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும்.


மயூன்பஞ்ச் மாவட்டத்தின் கரஞ்சியா ஒன்றியத்தில் உள்ள சத்துணவுத் தோட்டம் ஒன்றில் பெண் விவசாயி, ஊட்டச்சத்து தோட்டக்கலை திட்டத்தின் கீழ் ஒடிசா வாழ்வாதார மிஷன் வழங்கிய விதைத் தொகுப்பை காட்டுகிறர். புகைப்பட உதவி: அபிஜித் மொஹந்தி

"ஆண்டு முழுவதும் ஊட்டச்சத்து தோட்டத்தில் குறையாத உற்பத்தியை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது," என்று, ஓ.எல்.எம். ஊழியர்களுக்கும் பழங்குடிப் பெண்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மண் பாதுகாப்பு நுட்பங்கள், மண் செறிவூட்டல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பயிர் முறைகள் குறித்து பயிற்சி அளித்த ரவுல் கூறினார். தற்போதுள்ள தாவரங்கள், பழம்தரும் நிலைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, விவசாயிகள் விதைகளை விதைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பருவம், இடம், நேரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் உகந்த பயன்பாட்டிற்காக பல்வேறு பயிர்களின் பயிர்கள் இடைப்பயிர், கலப்பு பயிர் மற்றும் சுழற்சி- பயிர் முறைகள் மூலம் ஒன்றாக வளர்க்கப்படுகின்றன. பப்பாளி, மோரிங்கா மற்றும் எலுமிச்சை போன்ற மரங்களும் ஊட்டச்சத்து தோட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று, அவர் விளக்கினார். விவசாயிகள் பொதுவாக வீட்டு கழிவுகள், சமையலறை எஞ்சியவை மற்றும் கழுவுதல், சமைத்தல் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரை தங்கள் ஊட்டச்சத்து தோட்டத்தை வளப்படுத்த மற்றும் பாசனம் செய்ய பயன்படுத்துகின்றனர் என்று, பரிபாடா பகுதி ஓஎல்எம் ஒன்றிய தொகுதி வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் சுப்பிரதா பெஹெரா கூறினார்.

இயற்கை மண் செறிவூட்டல்

ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குப் பதிலாக, ஒரு பாரம்பரிய உயிரி உரம் மாட்டுச்சாணம், மாட்டு சிறுநீர், வெல்லம், பருப்பு மாவு, மண் மற்றும் நீர் ஆகியவற்றின் கலவையில் இருந்து தனித்துவமான நொதித்தல் முறையால் தயாரிக்கப்படுகிறது. 'ஜீவாம்ருட்' என்று அழைக்கப்படும் இது, ஒரு கரிம உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதை தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று, கரன்கியாவின் ஓஎல்எம் தொகுதி திட்ட மேலாளர் மினகேதன் நாயக் கூறினார்.

கரஞ்சியாவின் படாகானில் க்ருஷி மித்ராவாக (விவசாயியின் நண்பராக) பணிபுரியும் சம்பாபதி மொஹந்தா, ஜீவாம்ருட்டை வழக்கமாகப் பயன்படுத்திய பிறகு, "விவசாயிகள் மண்ணில் மண்புழுக்களின் எண்ணிக்கையை காணத் தொடங்கினர், இதன் விளைவாக பயிர் மகசூல் விகிதம் அதிகரித்துள்ளது மற்றும் விவசாயச் செலவைக் குறைக்கிறது" என்றார். மண் வளத்தை மீட்டெடுக்க மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்க விவசாயிகள் தழைக்கூளம் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டனர்.

மேலும், பயிர் எச்சங்கள் மற்றும் உலர்ந்த இலைகள், கிளைகள் மற்றும் மரப்பட்டைகளை தாவரங்களை சுற்றி தழைக்கூளம் செய்ய, விவசாயிகள் பயன்படுத்துகின்றனர் என்று, பரிபாடாவில் உள்ள சங்கபங்காவை சேர்ந்த க்ருஷி மித்ரா ரிங்கி மஹான்டோ கூறினார். இது, ஆவியாதலைத் தடுக்கவும் ஈரப்பதத்தை நீண்ட நேரம் வைத்திருக்கவும் உதவுகிறது. தழைக்கூளம் சிதைவடையும் போது, ​​அது உரமாக மாறி, செடிகளுக்கு ஊட்டச்சத்து அளித்து, மண் வளத்திற்குத் தேவையான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று, கரஞ்சியா மாவட்ட விவசாய அலுவலர் அசோக்குமார் நாயக் கூறினார்.

உணவு பல்வகைப்படுத்தல், வருமானம்

மயூர்பஞ்சில் உள்ள அதிக பழங்குடி விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்காக அதிக காய்கறிகளை வளர்க்கும்படி பன்முகப்படுத்தப்படுகிறார்கள் என்று, பாரிபடாவின் சந்த்பூரில் உள்ள நிலையான விவசாயம் குறித்த சமூக வள நபர் சாம்பரி மராண்டி கூறினார். முன்னதாக, விவசாயிகள் பெரும்பாலும் கடலை மற்றும் கடுகு பயிரிட்டனர். "ஆனால் இப்போது நாங்கள் கத்திரிக்காய், தக்காளி, பூசணி, மிளகாய், பாகற்காய், பீன்ஸ், கொண்டைக்கடலை, கீரைகள் பயிரிட்டுள்ளோம்" என்று மயூர்பஞ்ச் மாவட்டத்தின் குந்தா நகர் அருகேயுள்ள பந்தகடா கிராமத்தைச் சேர்ந்த சாந்தல் பெண் நிருபமாசோரன் கூறினார். "நாங்கள் முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மற்றும் வாழை பயிரிட்டுள்ளோம்" என்றார். அவர்கள் தற்போது சொல்வது என்னவென்றால், எண்ணெய், உப்பு மற்றும் மண்ணெண்ணையை மட்டுமே சந்தையில் இருந்து வீட்டுக்காக வாங்குவதாக கூறினர்.


அறுவடை செய்த பாகற்காய், பச்சை பீன்ஸ் கையில் வைத்தபடி நிருபமா சோரன், தனது மகள்களுடன் நிற்கிறார். புகைப்பட உதவி: அபிஜித் மொஹந்தி

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, காய்கறி விலை உயர்ந்துள்ளது என்று கரன்ஜியா நகரத்தில் உள்ள கரடியா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சீதா நாயக் கூறினார். "எங்கள் ஊட்டச்சத்து தோட்டத்திற்கு நன்றி, நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு போதுமான உணவை இங்கேயே பயிரிட முடிகிறது, காய்கறிகளை வாங்கத் தேவையில்லை," என்று அவர் கூறினார், மேலும், "ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் ரூ. 200-300 வரை சேமிக்க முடியும். கடந்த மூன்று மாதங்களில், உபரி காய்கறிகளை விற்று சுமார் ரூ .9,500 சம்பாதித்துள்ளோம்" என்றார் அவர்.

நுகர்வு நடத்தையை மாற்றுதல்

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஊட்டச்சத்து தோட்டக்கலை திட்டத்தின் அவ்வப்போது மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வின் கீழ், வீட்டு அளவில் உணவு பன்முகத்தன்மை மற்றும் சுகாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை, ஓ.எல்.எம் அளவிடுகிறது.

உள்ளூர் பொதுமதிப்பீட்டின் அடிப்படையிலானது பொதுகளத்தில் இன்னும் கிடைக்கவில்லை என்று, குந்தாவின் தொகுதி மேம்பாட்டு அலுவலர் மானஸ் ரஞ்சன் சமல் கூறினார். அவர் மேலும் கூறும்போது, ஊட்டச்சத்து தோட்டங்கள் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இளம்பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் பல்வகைப்பட்ட உணவுகளுக்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம், பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டினை இது குறைத்துள்ளது என்றார்.

குந்தா பகுதி துக்குராவில் உள்ள சமூக சுகாதார மையத்தில் பணிபுரியும் மருத்துவர் சங்கல்ப் பரிடா கூறுகையில், "ஊட்டச்சத்து தோட்டங்கள் உள்ள வீடுகளில் நுகர்வு நடத்தை மாற்றத்தை நாங்கள் கண்டோம். பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே விழிப்புணர்வு இல்லாததால், அவர்களின் உணவு பழக்கம் மாற வேண்டும். நல்ல ஊட்டச்சத்து நடைமுறைகளுக்கான நடத்தை மாற்றத்தை ஊக்குவிப்பதில், உள்ளூர் துணை நர்ஸ் மற்றும் க்ருஷி மித்ரா ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர், குறிப்பாக 15 முதல் 49 வயது வரையிலான பெண்கள் மற்றும் ஆறு மாதங்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தினர் என்று, அவர் கூறினார்.

"காய்கறிகளை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது என்று, ஓ.எல்.எம். ஊழியர்கள் எங்களிடம் தெரிவித்தனர். மேலும், காய்கறிகளை நேரடி சூரிய ஒளியில் உலர்த்தாமல் இருப்பதும் முக்கியம் (பருவகாலத்திற்கு). முன்பு நாங்கள் காய்கறிகளை வெட்டிய அல்லது உரித்த பிறகு கழுவிக்கொண்டிருந்தோம், ஆனால் இப்போது அவற்றை வெட்டுவதற்கு முன்பு கழுவுகிறோம் என்று, குந்தாவில் உள்ள ஜுராதிஹி கிராமத்தில் இருக்கும் சத்துணவு தோட்டத்தில் நின்றவாறு, சுனியா மஜ்ஜி கூறினார். "காலிஃபிளவர் இலைகள் சத்தானவை என்பதால், நான் அவற்றை நிராகரிப்பதில்லை" என்றார் அவர்.


எப்படி தொடங்கியது

முன்னதாக, அசிம் பிரேம்ஜி பிலாண்ட்ரோபிக் முன்முயற்சிகளுடன் இணைந்து ஒடிசாவின் 13 மாவட்டங்களில் 100,000 ஊட்டச்சத்து தோட்டங்களை ஜூன் 2019 மற்றும் மே 2020 க்கு இடையில், ஓஎல்எம் நிறுவியது. "சமூக அளவில் இந்த ஊட்டச்சத்து உணர்திறன் மாதிரியின் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் கண்டோம்" என்று, இந்திய நிர்வாக சேவைகள் அதிகாரி மற்றும் புவனேஷ்வர் ஓ.எல்.எம். இயக்குனர் ராஜேஷ் பிரபாகர் பாட்டீல் கூறினார். இதன் விளைவாக, 2020-21 ஆம் ஆண்டில், மாநில அரசு 314 தொகுதிகளில் ஊட்டச்சத்து தோட்ட மாதிரியை அளவிட முடிவு செய்தது மற்றும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ். உடன் ஒன்றிணைந்து 500,000 ஊட்டச்சத்து தோட்டங்களை உருவாக்க ரூ. 500 கோடியை முதலீடு செய்தது.

ஒடிசா அரசு தனது 2021-22 பட்ஜெட்டில் ஊட்டச்சத்து சார்ந்த ஒதுக்கீட்டின் கீழ், மாநில அரசு தனது பட்ஜெட்டை 12% -- அதாவது 2019-20 காலத்தில் ரூ. 4,555 கோடியில் இருந்து ரூ. 5,121 கோடியாக 2021-22 வரை--அதிகரித்துள்ளது. இது 2021-22 இறுதிக்குள் ஒரு மில்லியன் கிராமப்புற வீடுகளுக்கு ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, பிராடனின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுர்ஜித் பெஹெரா கூறினார். ஒடிசா முழுவதும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து தோட்டங்கள் இருக்கும்.

கவனம் தேவைப்படும் பகுதிகள்

"மயூர்பஞ்சில் ஊட்டச்சத்து தோட்டக்கலை மாதிரி, பெருந்தொற்றுக்கு மத்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டின் தலைமுறை சுழற்சியை உடைக்கிறது, "என்று பரிபாடா தொகுதி மேம்பாட்டு அலுவலர் அகுல் சந்திர நாயக் கூறினார், இன்னும் கவனம் தேவைப்படும் பகுதிகள் உள்ளன. ஊட்டச்சத்து தோட்டத்தை கொல்லைப்புற கோழி, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்புடன் இணைக்கலாம்.இடம்பெயர்வு நெருக்கடியை குறைப்பதற்காக, நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இந்த நிலையான வருமானத்தை உருவாக்கும் திறன்களைக் கற்றுக்கொள்வதையும் மற்ற பகுதிகளில் ஊட்டச்சத்து தோட்டக்கலைத் திட்டத்தைப் பிரதிபலிப்பதையும் ஊக்குவிப்பது அவசியமாகும்.

பாரம்பரிய விதை வகைகளை புத்துயிர் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், இந்த திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்று, குந்தாவில் உள்ள போலகாடியா பஞ்சாயத்து சர்பாஞ்ச், சம்பாபதி சோரன் கூறினார். மேலும், "எங்கள் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய ரகங்களை பல ஆண்டுகளாக பாதுகாத்து வருகின்றனர். இந்த விதைகள் பொதுவான பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கும். அவை சுவையானவை மற்றும் அதிக சத்துள்ளவை" என்று, சோரனின் பரிந்துரை குறித்து கருத்து தெரிவித்த புவனேஸ்வர் ஒடிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குனர் தேபேஷ் பிரசாத் பத்தி கூறினார். "உள்நாட்டு விதைகள் வேளாண் பல்லுயிரியலைப் பராமரிக்கவும், பழங்குடி கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்கவும் மற்றும் உணவு இறையாண்மையை வலுப்படுத்தவும் உதவும்" என்றார். பழங்குடிப் பகுதிகளில் உள்ள நாட்டு விதைகளை வெற்றிகரமாக புத்துயிர் பெறுவது சாத்தியமாகும், அங்கு வாழ்வாதார வேளாண்மை அதிகமாக உள்ளது மற்றும் பாரம்பரிய உணவுப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன என்று, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் மாத கட்டுரை தெரிவித்தது.

"கோவிட் -19 தொற்று அபாயம் உள்ள காலகட்டத்தில், முழு உணவு உற்பத்தி முறையையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் புனேவைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான பாரதிய அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் ஃபவுண்டேஷனின் தலைமை திட்ட நிர்வாகி ராஜஸ்ரீ ஜோஷி கூறினார். ஜோஷி, பழங்குடி சமூகங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உட்கொண்ட வன காய்கறிகளை பரப்புவதை ஆதரித்தார். மாறுபட்ட பாரம்பரிய உணவுகளுக்கு சிறந்த அணுகலை உறுதி செய்வது, தொற்றுநோய்களின் போதும் அதற்குப் பின்னரும் சமூகத்தின் நெகிழ்ச்சித்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் உணவுப் பற்றாக்குறையை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.