94% பிஹாரி பெண்கள் கருத்தடையை அறிந்துள்ளனர்; ஆனால் பயன்படுத்துவது 5-ல் ஒருவர் தான்: எங்கள் ஆய்வு
![94% பிஹாரி பெண்கள் கருத்தடையை அறிந்துள்ளனர்; ஆனால் பயன்படுத்துவது 5-ல் ஒருவர் தான்: எங்கள் ஆய்வு 94% பிஹாரி பெண்கள் கருத்தடையை அறிந்துள்ளனர்; ஆனால் பயன்படுத்துவது 5-ல் ஒருவர் தான்: எங்கள் ஆய்வு](https://tamil.indiaspend.com/h-upload/old_images/1500x900_345838-bihar-women1440.webp)
கயா (பீகார்): இளம் வயதிலேயே திருமணமான பிரேம்லதா தேவிக்கு தற்போது 24 வயது. அவருக்கு - ஒரு பையன், மூன்று பெண்கள் என நான்கு குழந்தைகள் உள்ளனர். தெற்கு பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள திகாரி தொகுதியை சேர்ந்த ஒரு இல்லத்தரசியான அவர், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, கருத்தடைக்காக ஒரு செப்பு கருத்தடை சாதனம் -ஐ.யு.டி (IUD - மிகவும் பொதுவாக அறியப்பட்ட பெயர் காப்பர்-டி) வைத்திருந்தார்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, வயிற்று வலி மற்றும் கருப்பை இரத்தப்போக்கு அதிகரித்ததால், அதை நீக்கிவிட்டார்; இது, இந்த சாதனத்தின் பக்க விளைவு ஆகும். "நான் இனி காப்பர்-டி பயன்படுத்த விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
ஐ.யு.டி அகற்றப்பட்ட பிறகு, பிரேம்லதா தேவி இன்னும் இரண்டு குழந்தைகளை பெற்றார்; அவர் இதற்கு திட்டமிடவில்லை. கருத்தடை செய்வதற்கான மாற்று முறைகள் பற்றி தமக்கோ அல்லது தமது கணவருக்கோ தெரியாது என்று அவர் கூறினார். தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், இதுபோன்ற பெண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய சுகாதார ஊழியர்களும், ஒருபோதும் அப்படி செய்து காட்டவில்லை.
இந்தியாவின் ஐந்தாவது மோசமான மாநிலம் மற்றும் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட பீகாரில் இது போன்ற கதைகள் பொதுவானவை; இந்தியாவின் அதிகபட்ச மொத்த கருவுறுதல் வீதம் -டி.எப்.ஆர் (TFR) - ஒரு பெண்ணுக்கு 3.4 குழந்தைகள், சமீபத்தியதான 2015-16 அரசு தரவுகள் கூறுகின்றன. இந்த டி.எப்.ஆர் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களை விட அதிகமாக உள்ளது: உத்தரபிரதேசம் (2.74) மற்றும் மகாராஷ்டிரா (1.87). தேசிய சராசரி 2.18. (2015-16இல் சிக்கிம் மற்றும் கேரளாவில் மிகக்குறைந்த டி.எப்.ஆர்: 1.17).
ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில், அல்லது 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக 2017 ஐக்கிய நாடுகள் சபை- ஐ.நா. (UN.) மதிப்பீடு கூறுகிறது. 2029 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 144 கோடியாக உயரும்; இது, பின்னர் குறையத் தொடங்கும்.
மக்கள்தொகை அதிக விகித வேகம் - இனப்பெருக்க வயதினரில் அதிகமான மக்கள் - என்று அழைக்கப்படுவதோடு, அதிக ஆயுட்காலமும் இருப்பதால், இந்தியாவின் மக்கள் தொகை 2060களில் உச்சத்தில் இருக்கும்; இது குறையத் தொடங்கும் முன்பாக நடக்கும் என தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்திய கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருகின்றன, மேலும் இந்த மதிப்பீடுகளில் சில தொடர்ந்து திருத்தப்படுகின்றன. உதாரணமாக, முந்தைய ஐ.நா. மதிப்பீடுகளின்படி, இந்தியா 2022 இல் சீனாவை முந்தும் என்று கூறப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் டி.எப்.ஆர் 2.68 என்று இருந்தது; இன்று, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 (NFHS 2015-16) இன் படி, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (UTs) நான்கில் மட்டுமே - உத்தரபிரதேசம் (உ.பி.), பீகார், மேகாலயா மற்றும் நாகாலாந்து - டி.எப்.ஆர் 2.68 ஐ விட அதிகமாகவோ அல்லது சமமாகவோ உள்ளது.
ஆயினும்கூட, 12 மாநிலங்களில் 2.1 க்கு மேல் ஒரு டி.எஃப்.ஆர் உள்ளது, இது மாற்று நிலை வீதம் என்று அழைக்கப்படுகிறது. இதில் மக்கள் தொகை மாறாமல் உள்ளது.
கடந்த 2011இல் பீகாரின் மக்கள் தொகை பிலிப்பைன்ஸுடன் - இன்று உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 13வது நாடு - நெருக்கமாக இருந்தது. பீகாரின் 38 மாவட்டங்களில், கயா உட்பட 36 இல் அதிக கருவுறுதல் விகிதங்கள் உள்ளன.
இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் 1952 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல நாடுகளுக்கு முன்பாக, பீகார் மாநிலத்தில் ஏன் தோல்வியுற்றது என்பதை அறிந்து கொள்ள, இந்தியா ஸ்பெண்ட் டிசம்பர் 2017 முதல், ஏப்ரல் 2018 வரை கயா மற்றும் பாட்னா மாவட்டங்களில், 900 பெண்கள் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.
தொடரின் இந்த முதல் பகுதியில், பீகாரில் பெண்கள் மத்தியில் கருத்தடை பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு முறைகளைப் பார்க்கிறோம். இரண்டாவது பகுதியில், மாநிலத்தின் குடும்பக் கட்டுப்பாடு முயற்சிகளை முடக்கும் சமூக காரணிகளை ஆராய உள்ளோம். இந்த தொடர் திருமணமாகாத பெண்கள் மற்றும் இளம் பருவத்தினர் மீது கவனம் செலுத்துகிறது; அவை பொதுவாக கருத்தடைக்கான தேவையற்ற தன்மையை கையாளும் ஆய்வுகளில் கருதப்படுவதில்லை.
15-49 வயதுடைய பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான பெண்களில் 94% பேர், பயன்பாட்டில் உள்ள எட்டு கருத்தடை முறைகளில் குறைந்தபட்சம் ஒன்றை அறிந்திருப்பதை கண்டறிந்தோம்; ஐந்தில் ஒருவர் (20.1%), தற்போது எதையும் பயன்படுத்துகிறார்கள். திருமணமாகாத, பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான பெண்கள் திருமணமானவர்களை விட (27%) கருத்தடை மருந்துகளை (42%) பயன்படுத்துகின்றனர், மேலும் கருத்தடை குறித்த பெண்களின் விழிப்புணர்வை கல்வி அதிகரித்துள்ளது.
பக்க விளைவுகளால் அச்சம்
பீகாரில் கருத்தடை குறித்த பரவலான விழிப்புணர்வை இருந்தும் கருத்தடை பயன்பாடு ஏன் குறைவாக உள்ளது?
பக்க விளைவுகள் குறித்த அச்சம் (15%) என்பது எங்கள் கணக்கெடுப்பு பரிந்துரைத்த மிகப்பெரிய காரணம் ஆகும். அடுத்த இடங்களில், கருத்தரிக்க ஆசை (11.7%), கருத்தடைகளை பயன்படுத்துவதற்கான பொதுவான விருப்பமின்மை (8%) மற்றும் கூட்டாளியின் எதிர்ப்பு (7.8%) ஆகியன உள்ளன. (மற்ற காரணங்கள் அணுகல் இல்லாமை, அறியாமை மற்றும் மதரீதியான ஆட்சேபனைகள் ஆகியன அடங்கும்).
கருத்தடை ஏற்கவேண்டிய சுமை, கிட்டத்தட்ட முற்றிலும் பெண்கள் மீது தான் உள்ளது.
![](https://tamil.indiaspend.com/wp-content/uploads/2019/07/Contraception.png)
Source: IndiaSpend survey.
சொட்டு மருந்து கருத்தடை பயன்பாடு
பீகாரில், 2015-16 ஆண்டுடனான 10 ஆண்டுகளில், திருமணமான பெண்கள் மத்தியில் எந்தவொரு கருத்தடை முறையையும் பயன்படுத்துவது 10%புள்ளிகள் குறைந்து 24% ஆக உள்ளது; இது அனைத்து இந்திய மாநிலங்களிலும் மிகக் குறைவானது என்று என்.எச்.எப்.எஸ்.- 4தெரிவித்துள்ளது. இதில் தேசிய சராசரி 54%; சிறந்ததாக உள்ள பஞ்சாப் (76%), அடுத்தடுத்து மேற்கு வங்கம் (71%), சண்டிகர் (74%) உள்ளன.
பெண்கள் மத்தியில் அதிக கருவுறுதல் என்பது, கர்ப்பம் தொடர்பான மரணம் (தாய்வழி இறப்பு) மற்றும் நோய் (நோயுற்ற தன்மை) ஆகியவற்றின் அபாயங்களை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மக்கள்தொகை அதிகரிப்பதைத் தவிர, பல குழந்தைகளைக் கொண்ட பெண்கள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை குறைவாகக் காண்கிறார்கள், இதனால் அவர்கள் வறுமையிலிருந்து வெளியேறுவது கடினம். சராசரியாக, அதிக கருவுறுதல் கொண்ட சமூகங்கள் தங்கள் அரசிடம் இருந்து அதிக சேவைகளை எதிர்பார்க்கின்றனர்.
நாங்கள் நேர்காணல் செய்த பெண்களால் மிகவும் விரும்பப்பட்ட முறை காப்பர் ஐ.யு.டி. (IUD) முறிய ஆகும்; இது 4% பாலியல் ஈடுபாட்டு கொண்ட பெண்கள் பயன்படுத்தியது. 2017 ல் பீகாரில் நடத்தப்பட்ட அனைத்து கருத்தடைகளில் 98.9% பெண்களுக்கு தான் செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் 2017-18 தரவுகள் தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு கருத்தடை என்பது தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொதுவான கருத்தடை முறை என்று, தி லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு கருத்தடை முறைகள் கிடைக்கவில்லை என்றும் ஆய்வு கூறுகிறது.
திருமணமாகாத, பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான பெண்களிடையே அதிக கருத்தடை பயன்பாடு
பீகாரின் டி.எப்.ஆர் எப்போதுமே இந்தியாவின் சராசரியை விட அதிகரித்து, பல ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருகிறது; இது 2005-06இல் இது 4 ஆக இருந்து, 2011இல் 3.7 ஆக குறைந்து, 2015-16இல் 3.4 ஆக சரிந்தது.
நாம் முன்னர் குறிப்பிட்டபடி, பீகாரின் 38 மாவட்டங்களில், 36 அதிக வளமான மாவட்டங்களாக, மத்திய அரசின் மிஷன் பரிவார் விகாஸ் திட்டத்தின் கீழ் மதிப்பிடப்பட்டன. பாட்னா மற்றும் அர்வால் மாவட்டங்கள் இதற்கு விதிவிலக்கு.
மேலும், நவம்பர் 2016 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 135 மாவட்டங்களில் உள்ள டி.எப்.ஆரை, 2025 ஆம் ஆண்டுக்குள் 2.1 என்ற மாற்றுநிலைக்கு குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் நவம்பர் 2017 செய்தி கூறியுள்ளது. மாற்று நிலை கருவுறுதல் என்பது, ஒரு பெண் மக்கள் தொகையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது.
பிரேமலதா தேவியின் மாவட்டமான கயா, பீகாரில் திருமணமான பெண்களில் மூன்றாவது மிக உயர்ந்த சதவீதத்தை கொண்டிருக்கிறது. எந்தவொரு கருத்தடை முறையையும் - 2015-16 ஆம் ஆண்டில் 36% பயன்படுத்துவதாக, என்.எப்.எச்.எஸ் தரவுகள் கூறுகின்றன. ஆனால் இது 2015-16 ஆம் ஆண்டில் இந்தியாவின் சராசரியான 54% ஐ விட 18 சதவீதம் புள்ளிகள் குறைவாக இருந்தது.
அதிக விழிப்புணர்வு இருந்தபோதிலும், கருத்தடை பயன்பாடு குறைவாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்.
கயாவில் கணக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து பெண்களில் சுமார் 94% (மற்றும் திருமணமான பெண்களில் 97.8%) எட்டு கருத்தடை முறைகளில் குறைந்தது ஒன்றையாவது அறிந்திருக்கிறார்கள் என்பதை எங்கள் கணக்கெடுப்பு காட்டியது. இதில் பாரம்பரிய மற்றும் நவீன முறைகளும் அடங்கும்.
திருமணமானவர்களை விட (27%) திருமணமாகாத மற்றும் பாலியல் செயல்பாடு கொண்ட பெண்கள் (42%) மத்தியில் கருத்தடை பயன்பாடு மிகவும் பரவலாக இருப்பதைக் கண்டோம். கருத்தடை மருந்துகளின் அடிப்படையில், திருமணமாகாத பெண்கள் கருத்தடை மாத்திரைக்கு (11.2%) விருப்பம் காட்டினர், திருமணமான பெண்கள் காப்பர் ஐ.யு.டி. (8.6%) ஐ விரும்பினர்.
அதிக கல்வி = கருத்தடை பற்றிய அதிக விழிப்புணர்வு
கணக்கெடுப்புக் குழு இரண்டாகப் பிரிக்கப்பட்டது: 15-49 வயதுக்கு இடைப்பட்ட எந்தவொரு பாலியல் உறவிலும் உள்ள பெண்கள், பொதுவாக பாலியல் ரீதியாக செயல்படும் பெண்கள்.
நவீன முறைகளை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தது - கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 94.2% பேர் நவீன முறைகள் (ஆணுறைகள், ஐ.யு.டி. போன்றவை) அறிந்திருந்தனர்; மேலும் 46.2% பேர் மட்டுமே பாரம்பரிய முறைகள் (திரும்பப்பெறுதல், தாய்ப்பால்) அறிந்திருந்தனர்.
கயாவில் கணக்கெடுக்கப்பட்ட பெண்களில், 20% பேர் சில வகையான கருத்தடைகளைப் பயன்படுத்துகின்றனர்; அவர்களில் 15% பேர் நவீன முறைகளைப் பயன்படுத்துகின்றனர். குறைந்த பயன்பாட்டிற்கான காரணங்கள் பக்க விளைவுகளின் பயம் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான விருப்பம் ஆகியவை அடங்கும்.
Methods Of Contraception | |
---|---|
Traditional Methods of Contraception | Include breastfeeding, withdrawal by men |
Modern Methods of Contraception | Include female and male sterilisation, the contraceptive pill, intrauterine device (IUD), post-partum IUD (PPIUD, injectables, male and female condoms, and emergency contraception |
Source: IndiaSpend primary research
கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்பட்ட தகவல்கள், பொதுவாக நகரங்களில் வசிக்கும் பெண்கள், மேல்நிலை கல்வி படித்தவர்கள் மற்றும் பாலியல் கூட்டாளி அல்லது கணவருடன் ஒருவித “கூட்டில்” இருந்தார்கள்; எட்டு கருத்தடை முறைகளில் ஏதேனும் ஒன்றை பற்றி அதிகம் அறிந்திருந்தனர்.
திருமணமான பெண்களில், 27.1% பேர் கணக்கெடுப்பு காலத்தில் கருத்தடை பயன்படுத்தி இருந்தனர். 2015-16 ஆம் ஆண்டிற்கான என்.எப்.எச்.எஸ். தரவுகளுடன் ஒப்பிடும்போது, இது இரண்டு ஆண்டுகளில் எட்டு சதவீத புள்ளிகளின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.
கல்வியானது குடும்பக்கட்டுப்பாட்டு சாதனம் அதிகம் பயன்படுத்துவதையும் குறிக்கிறது
நாங்கள் முன்பு கூறியது போல், திருமணமான பெண்கள், திருமணமாகாத பாலியல் ஆர்வமுள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது கருத்தடை சாதனம் குறைவாக பயன்படுத்துவதை ஆய்வு காட்டியது. மேலும், ஆரம்பக் கல்வியை முடித்து, மேல்நிலைப் பள்ளியில் படித்த பெண்களிடையே கருத்தடை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் நவீன சாதனங்களை விரும்பினர்.
விருப்பமான முறைகள் கிடைக்காதது மற்றும் ஆண்களின் தயக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்களிடையே கருத்தடை பயன்பாடு, குறிப்பாக நவீன முறைகள் 2005-06 மற்றும் 2015-16க்கு இடையில் குறைந்துவிட்டதாக இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2016 கட்டுரை தெரிவித்துள்ளது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், 2016 உடனான எட்டு ஆண்டுகளில், இந்தியாவில் கருத்தடை பயன்பாடு 35% குறைந்துவிட்டதாக, இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 2017 கட்டுரை தெரிவித்தது. ஆண் கருத்தடை விகிதங்களும் 2015-16 வரையிலான 10 ஆண்டுகளில் 1% இல் இருந்து 0.3% ஆகக் குறைந்துவிட்டது.
பீகாரில் ஆண்களின் ஆணுறை பயன்பாடு ஒரு சதவீத புள்ளியை விட, 2.3% முதல் 1% வரை குறைந்தது; என்.எப்.எச்.எஸ்- 4 தரவு படி, ஆண் கருத்தடை செய்த ஆண்களின் சதவீதம் 2005-06ல் 0.6 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியம் என்று குறைந்தது.
சில ஆண்கள், ஆணுறைகள் பாலியல் இன்பத்தைகுறைக்கும் என்றும், வாஸெக்டோமி, வீரியத்தை இழக்க செய்வதாகவும் நம்புகிறார்கள் என்று, இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 2017 கட்டுரை தெரிவித்திருந்தது. வாஸெக்டோமி (ஆண் கருத்தடை) விரைவான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வாய்ப்பாக இருந்தாலும், அவை உலகம் முழுவதும் செல்வாக்கற்ற ஒன்றாகவே உள்ளது. பெண் கருத்தடை மூலம், உட்புற இரத்தப்போக்கு, தொற்று அல்லது ஒரு எக்டோபிக் கர்ப்பம் (கருப்பையின் வெளியே வளரும் கருவுற்ற முட்டை) கூட ஒரு சிறிய ஆபத்து உள்ளது என, இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.
காப்பர்-டி மிகவும் பிரபலமான முறை
மருத்துவ வல்லுநர்கள் ஆணுறைகள் மற்றும் வாஸெக்டோமிகளையும், பெண்களுக்கு, வாய்வழி மாத்திரைகள் மற்றும் ஐ.யு.டி.களையும் பரிந்துரைக்கின்றனர் என, பிப்ரவரி 2017 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
கயாவில் கருத்தடை பயன்படுத்தும் பெண்களில் 20% பேர், புகழ் பெற்ற எட்டு முறைகளும் செயல்பாட்டில் இருந்தது (அட்டவணையைப் பார்க்கவும்).
கயாவில் உள்ள அனைத்து பெண்களும் விரும்பும் கருத்தடை முறை காப்பர்-டி ஆகும், அவர்களில் 4% பேர் தற்போது அந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது அதிகம் பயன்படுத்தப்பட்ட முறை, பாரம்பரியமான ஆண்கள் திரும்பப் பெறுதல் 2.8% ஆகும். திருமணமான பெண்களில் விருப்பமான முறை காப்பர்-டி ஆகும்; அவர்களில் 8.6% பேர் அந்த முறையைத்தேர்வு செய்கிறார்கள்; அதை தொடர்ந்து கருத்தடை மாத்திரை 4.8% ஆகும்.
எங்கள் மாதிரி மாவட்டங்களில், திருமணமாகாத பெண்களின் விருப்பமான முறை மாத்திரை (11.2%), அதை தொடர்ந்து ஐ.யு.டி. (9.4%) என்பதை கண்டறிந்தோம். அவர்களின் கல்வி மற்றும் குடியிருப்பு நிலை மற்ற தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன - நகரங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் ஆரம்பக் கல்வி மற்றும் மேல்நிலைப்பள்ளி படித்தவர்கள் கருத்தடை பயன்பாட்டின் அதிக சதவீதத்தை கொண்டிருந்தனர்.
செல்வத்திற்கும் கருத்தடை பயன்பாட்டிற்கும் இடையிலான உறவு தெளிவாக இல்லை; ஆனால் அதிக செல்வ வகைக உள்ள பெண்கள் கருத்தடை பயன்பாட்டின் அதிக சதவீதத்தை கொண்டிருந்தனர்.
இரண்டு பகுதிகளை கொண்ட தொடரில் இது முதல் பகுதி.
அடுத்து: பெண்களால் தீர்மானிக்க முடிந்தால், மக்கள் தொகை சிக்கலை பீகார் கொண்டிருக்காது.
(தாஸ், இந்திய சர்வதேச வளர்ச்சி மையத்தில் திட்ட கொள்கை மேலாளர்; லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் சமூகக் கொள்கையில் முதுகலை ஆராய்ச்சி பட்டமும், சசக்ஸ் பல்கலைக்கழக மேம்பாட்டு ஆய்வுகள் கழகத்தில் மேம்பாட்டு ஆய்வுகளில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.