புதுடெல்லி: இந்தியா ஆண்டு தோறும் காசநோய்க்காக (TB) செலவிடும் 32 பில்லியன் டாலர் (ரூ. 2.2 லட்சம் கோடி) என்பது, அதன் 2019 சுகாதார பட்ஜெட்டைவிட 3.5 மடங்கு அதிகம். உலக அளவில் இந்தியா அதிக காச நோயாளர்கள் மற்றும் இறப்புகளை கொண்டுள்ளது. மேலும் இதை தடுக்கக்கூடிய, குணப்படுத்தக்கூடிய நோய் எதிர்த்து மருந்துகளை கொண்டிருக்கவில்லை என்று புதிய உலகளாவிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

காற்று வழியே பரவும் ஒருவகை தொற்று பாக்டீரியா, பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கிறது; தடுக்கக்கூடியது மற்றும் குணப்படுத்தக்கூடியது என்ற போதும் காச நோயால் ஆண்டுதோறும் 4,21,000 இந்தியர்கள் உயிரிழக்கின்றர். இது, போயிங் 737 மேக்ஸ் (200 இருக்கைகள்) கொண்ட 2,100 விமான விபத்துகளில் இறக்கும் பயணிகள் சமமானதாகும்; அல்லது ஒருநாளை அத்தகைய ஐந்துக்கும் மேற்பட்ட விபத்துகளுக்கு சமமானது.

இந்திய காசநோய் இறப்பு எண்ணிக்கை, உலகின் காசநோய் இறப்பு விகிதத்தில் 32% கொண்டுள்ளது; தற்போதைய போக்குகளை பார்க்கும் போது, 2025இல் நாட்டில் இருந்து காசநோயை முற்றிலுமாக ஒழித்தல் என்ற இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பு இல்லை என, தி லான்செட் மருத்துவ இதழின் 2019 மார்ச் 21பதிப்பில் வெளியான Building a tuberculosis-free world: The Lancet commission on tuberculosis என்ற அறிக்கை தெரிவிக்கிறது. காசநோயை முற்றிலுமாக அகற்றுவதற்கான உலகளாவிய இலக்கு 2030 ஆகும்.

காச நோய்க்கு எதிரான போராட்டத்தில் 12 குறிகாட்டிகளில், இந்தியாவின் இரண்டு இலக்குகள் (புகையிலை வரி மற்றும் அரசியல் சித்தரிப்பு), மூன்று இலக்கை (காச நோய் குழந்தை, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு சேவை எண்ணிக்கை மற்றும் ஊட்டச்சத்து பாதிப்பு) முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனால் மற்ற ஏழு, அதாவது காச நோய் மற்றும் மருந்துக்கு கட்டுப்படாத காச நோய், தேசிய பொது சுகாதார நிதி, சமூக பாதுகாப்பு அமைப்பு, பெரிய சுகாதார செலவினம், எச் ஐ வி நோயாளிகளுக்கு ரெட்ரோ வைரல் நோய் எதிர்ப்பு சிகிச்சை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றில் பின்தங்கியுள்ளது.

இந்தியாவில், சிறந்த கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிக்கும் சேவைகளை வழங்க வேண்டும்; இதில் தனியார் பங்களிப்பு செய்வோரின் ஈடுபாட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், நோயறிதல் நேரத்தில் மருந்து வழங்கும் சோதனைக்கான உலகளாவிய அணுகலை வழங்குதல் மற்றும் அதன் காச நோய் சுமையைக் குறைப்பதற்கு செயலை கண்டுபிடிக்கும் உத்திகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆணையம், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் தொற்று நோய் நிபுணரும், பேராசிரியருமான எரிக் கோஸ்பி தலைமையிலானது.

லான்செட் காசநோய் ஆணையத்தின் பணிகளில் 13 நாடுகளில் இருந்து 37 காசநோய் ஆணையர்கள் ஈடுபட்டுள்ளனர். 2030 ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்கு கொண்டு வருதல், நோயறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் ஆலோசனை முயற்சிகளுக்கு முன்னுரிமைகளை அளித்துள்ளனர்.

தற்போது, ​​இந்தியாவின் காசநோயாளிகளில் 10% இறப்புக்கு, அவர்கள் மருத்துவரிடம் தாமதமாக செல்வது ஒரு காரணமாக இருக்கிறது. காச நோய்க்கு ஒரு மருத்துவரை அணுக நோயாளிக்கு சராசரி 4.1 மாதங்கள் ஆகிறது மற்றும் 57% நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது; ஆனால் "உயர்தர சிகிச்சை கிடைப்பதில்லை" என்று தி லான்செட் அறிக்கை தெரிவிக்கிறது.

சீராக இணைப்பதில் இந்த "பாதுகாப்பு அடுக்கை இடைவெளிகள்" - அல்லது ஒரு நோயாளி குணமாவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள இடைவெளிகள் - இந்தியாவின் காசநோய் நிகழ்வை, 2018 மற்றும் 2035 க்கு இடையில் மூன்றில் ஒரு பங்காக (38%)குறைக்கும். காசநோய் சுமை மற்றும் இறப்பு ஆகிய இரண்டிற்கும் மிக முக்கியமான காரணி, இந்தியாவில் தனியார் மருத்துவ பராமரிப்பு துறைக்கு வரும் தரும் நோயாளிகள் என்று அறிக்கை தெரிவித்தது.

இந்தியாவின் காச நோயாளிகளில் 80% பேர் சீக்கிரமே குணமடையும் தனியார் துறை மீதான ஈடுபாட்டை மாநிலங்கள் மேம்படுத்துதன் மூலம், 2045ஆம் ஆண்டுக்குள் 80 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

தனியார் துறையுடன் "ஈடுபடுவதற்கு" கூடுதலாக $ 290 மில்லியன் (ரூ 1,999 கோடி) இந்தியா மேலும் செலவிட வேண்டியிருக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இது தற்போதைய காச நோய் பட்டெட்டிற்கான நிதியில் பாதி அளவு என்ற போதும், இது இந்தியாவின் டி.பி. இறப்பு செலவினங்களான $ 32 பில்லியன் என்பதில் 0.9% ஆகும்.காசநோய் இலக்குகளை அடைவதற்காக செலவிடப்படும் ஒவ்வொரு டாலரும், 16 முதல் 82 டாலராக திரும்ப கிடைக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவின் காசநோய் பட்ஜெட்டில் கால் பங்கு, தனியார் துறையில் காச நோய் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்துவதற்கு என்று செலவிடப்பட்டது காச நோய் குறித்த ஆணையத்தின் அறிக்கையில் அமைச்சர் ஜே.பி. நட்டா எழுதி இருந்தார்.

இதில் விரைவான மூலக்கூறு சோதனை, தனியார் பங்களிப்பாளர்களுக்கு நிதி ஊக்கங்கள், இணையம் மற்றும் மொபைல் போனில் காச நோய் குறித்த தகவல், சிகிச்சை பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவை அடங்கும்.

தனியார் துறை பங்களிப்பு

நாம் முன்பே கூறியது போல், 80% காச நோயாளிகள் முதன்முதலில் தனியார் துறையில் சிகிச்சை பெற்று, அவர்களில் 46% பேர் அவர்களின் அனைத்து சிகிச்சையும் அங்கே தொடர்ந்தனர். எனினும், தனியார் துறையில் சிகிச்சை தரத்தை வேறுபடும்.

மும்பையில் மாதிரி சோதனைக்காக காசநோயாளிகளின் தனியார் மற்றும் பொது மருத்துவ சிகிச்சையை ஆய்வு செய்ததில், மருந்துக்கு கட்டுப்படாத காசநோயை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள 87 நாள்கள் ஆகின. சிகிச்சையை ஆரம்பிப்பதற்கான குறுகிய நேரம் ஒரு மாதம், அதிகபட்ச மாதம் எட்டு மாதங்கள் என்று நீடித்தது. மருந்து உணர்திறன் காச நோய்க்கு முதல் வரி காச நோய் மருந்துகள் பயனுள்ளவையாக இருந்தபோதும், நோயாளியின் முந்தைய நோய் வரலாறு மற்றும் சிகிச்சையைப் பொறுத்து, 28 முதல் 42 நாட்கள் வரையிலான காலம் பிடிக்கிறது என்று, 2019 பிப்ரவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

கடந்த 2009 க்கு முன்பு வரை, இந்தியாவில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் பங்களிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கு காச நோய் திட்ட செலவில் 1.5% மட்டுமே ஒதுக்கப்பட்டது. காசநோய் நீக்குவதற்கான தேசிய செயல் திட்டம் (NSP 2017-25) நிதி அதிகரிப்புக்கு உறுதியளித்தது; "அறிவிப்பை" - காச நோயாளிகள் என்று குறிப்பிடுவதை -- ஆறு மடங்கு அதிகரித்து, 2020 ஆம் ஆண்டு அளவில் 20 லட்சம் நோயாளிகளுக்கு தனியார் துறையில் சிகிச்சை வழங்கப்படும் என்றது. இது மொத்த மதிப்பிடப்பட்ட காச நோயாளிகளில் 75% ஆகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டில், 1.8 மில்லியன் காச நோயாளிகள் - அதில் 21% தனியார் துறையிலிருந்து- Nikshay என்று அழைக்கப்படும் தேசிய மின்னணு முறையில் அறிவிக்கப்பட்டனர். 2018 இல், 2.1 மில்லியன் காச நோயாளிகள் அறிவிப்பு செய்யப்பட்டனர். இது, 17% மொத்த அதிகரிப்பு; இதில் 24% பேர் தனியார் சிகிச்சைக்கு பின் வந்தவர்கள்.

எனினும், நவம்பர் 2014 மற்றும் ஆகஸ்ட் 2015 க்கு இடையில், மும்பை மற்றும் பாட்னாவில் உள்ள தனியார் சுகாதாரத்துறையால் 35% காச நோயாளிகள் மட்டுமே சரியாகக் கையாளப்பட்டனர் என்று, 2018 அக்டோபரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

நடைமுறை சிக்கல்கள்

அரசின் கடமைகள் மற்றும் கூற்றுக்கள் இருந்த போதிலும், சீரற்ற அமலாக்கம் அதன் முன்னேற்ற வேகத்தை குறைந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, தனியார் துறையில் 2.2 மில்லியன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாலும், தி லான்செட் ஆய்வின்படி, 2016 ஆம் ஆண்டில் 5,41,000 பேர் மட்டுமே அறிவிக்கப்பட்டதாக, நிக்ஸெவின் 2019 பதிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது தனியார் துறையில் இருந்து காச நோயாளிகளில் 76% பேர் குறித்த விவரம் அரசுக்கு அறிவிக்கப்படவில்லை.

அனைத்து காச நோய் மாதிரிகள் மீது போதை மருந்து எதிர்ப்பை கண்டுபிடிக்கும் ஒரு உலகளாவிய மருந்து-ஏற்புத்திறன் சோதனை (டி.டி.டி) செயல்படுத்துவதில் இந்தியா இன்னும் செயல்பட்டு வருகிறது, ஏனெனில் இது என்.எஸ்.பி. 2017-2025 ன் கீழ் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா இன்னும், அனைத்து காச நோய் மாதிரிகள் மீது மருந்து எதிர்ப்பைக் கண்டறியும் ஓர் உலகளாவிய மருந்து ஏற்பு சோதனையை (DST) நடைமுறை படுத்தும் செயல்பாட்டில் உள்ளது. இது என்.எஸ்.பி. 2017-2025 ன் கீழ் உறுதி செய்துள்ளது. இந்தியாவின் 712 மாவட்டங்களில் 257இல் மட்டுமே யுனிவர்சல் டிஎஸ்டி பரிசோதனைகளை வழங்கி வருவதாக, இந்தியா காசநோய் அறிக்கை 2018 தெரிவிக்கிறது. அறிவிக்கப்பட்ட காச நோயாளிகளில் 32% மட்டுமே உலகளாவிய டிஎஸ்டி. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, 2019 ஜனவரியில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

இந்தியாவில் ஏன் 135,000 மதிப்பீட்டளவிலான மருந்துக்கு கட்டுப்படாத காச நோயாளிகளில் 28% க்கும் மேற்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை; 2017 ஆம் ஆண்டில் 26% பேர் மட்டுமே சிகிச்சை பெற்றனர் என்பதற்கு இச்சோதனைகள் அதன் தோல்விகளை விவரிக்கும் என்று, உலக காசநோய் அறிக்கை 2018 தெரிவிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் 2018 வழிகாட்டுதலின்படி, பெடாகுலைன் - அதாவது காச நோய்க்கான புதிய மருந்து - இந்தியாவில் மருந்துக்கு கட்டுப்படாத காச நோயாளிகள் 1,35,000 பேருக்கு தயாரிக்கலாம் என்ற போதும், ஜனவரி 2019 வரை 3,000 பேருக்கான மருந்துகள் மட்டுமே கிடைத்தன என்று, நாம் குறிப்பிட்டு இருந்தோம்.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.