மும்பை: 2019 பொதுத்தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில், நாட்டின் பின்தங்கிய சமூக-பொருளாதார குழுக்களின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் சமூகநல நிகழ்வுகள், திட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

நரேந்திர மோடி அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அதில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (பிரதமரின் விவசாயி நிதி) திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இரண்டு ஹெக்டேர் விவசாய நிலம் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6,000 நேரடியாக வரவு வைக்கப்படும்.

2019ல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தை அளிப்பதாக, காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது உலகளாவிய திட்டம் அல்ல, மாறாக ஒரு "முற்போக்கான" ஒன்று (ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச வருவாய் வரம்புடைய குடும்பங்களுக்கு அதிக வருவாய்க்கு உத்தரவாதம் கிடைக்கும்) என்று அது கூறியது. உலகளாவிய அடிப்படை வருமானம் - யுபிஐ (UBI) போன்ற யோசனை, பொருளாதார ஆய்வு 2016-17இல் விவாதிக்கப்பட்டது.

இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதும், விநியோகிப்பதும் ஜன் தன், ஆதார், மொபைல் வாயிலாக கட்டணம் செலுத்தும் முறைகள் ஒட்டுமொத்தமாக ஜாம் (JAM) என அழைக்கப்படும் நேரடி பலன் பரிமாற்ற (DBT) வழிமுறையை சார்ந்தது.

ஆதார் மற்றும் அதன் பயன்பாடு, பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படும் விமர்சனங்களால் ஒரு விவாத பொருளாகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் 164 ஆதார் தொடர்பான மோசடிகள் நடந்துள்ளன; இதில் பெரும்பாலும் 2018இல் நடந்தவை என, 2018 மே 23ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது. ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காததால் உணவு பொருட்கள் மறுக்கப்பட்டு 2018 அக்டோபர் 23இல் நிகழ்ந்தது குறித்த உட்பட பட்டினிச்சாவுக்கு காரணம் என்ற தகவலை, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

"நேரடி பண பரிமாற்றங்களுக்கு ஆதார் போன்ற பயோமெட்ரிக் / டிஜிட்டல் அடையாள அட்டை தேவை என்ற நம்பிக்கை நம்மிடையே பரப்பப்படுகிறது" என்று, வளர்ச்சி பொருளாதார நிபுணரான ரீதிகா கெரா, இந்தியா ஸ்பெண்ட் நேர்காணலில் தெரிவித்தார். " நேரடி பலன் பரிமாற்றம் சிறப்பான நிறைவேற்ற நம் வங்கிகள் பின்தங்கிய பகுதிகளை அடைய வேண்டும்; துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரிவாக்கப்பட வேண்டும்" என்கிறார் அவர். போலி பயனாளிகள் -- இதை ஆதார் அகற்றி அதன் மூலம் நிதி சேமிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - பிரச்சனை அதிகமாகிவிட்டது; எனினும் போலி அல்லது பொய்யான பயனாளிகளின் எண்ணிக்கையை மதிப்பிட எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் அவர்.

கெரா, அஹமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) துணைப் பேராசிரியர். டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ஆராய்ச்சி படிப்பு முடித்தவர். சக்செக்ஸ் பல்கலைக்கழக மேம்பாட்டு நிறுவனத்தில் அபிவிருத்தி படிப்புகளில் எம்.பில். முடித்தார். அத்துடன், The Battle for Employment Guarantee (2011) மற்றும் Dissent on Aadhaar: Big Data meets Big Brother (2019) ஆகிய நூல்களை திருத்தியுள்ளார்; மேலும் பல கல்வி இதழ்களுக்கு பங்களிப்பு செய்துள்ளார்.

இந்தியா ஸ்பெண்டிற்கு மின்னஞ்சல் வாயிலாக அவர் அளித்த நேர்காணலின் பகுதிகள்:

2019 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம், ஆதாருடன் இணைக்கப்பட அவர்களின் வங்கி கணக்கில் மட்டுமே நேரடியாக பயனாளர்களுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் செயல்பாட்டில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் என்று நீங்கள் கணிக்கிறீர்களா?

விவசாயிகளுக்கான வருமானத்தை வங்கி கணக்கில் மாற்றுவதற்கு அரசே சில சிக்கல்களை கண்டுள்ளது. அதனால் தான் முதல் தவணைக்கு, ஆதார் இணைப்பு என்பதை ஒரு விருப்ப வாய்ப்பாகத்தான் உள்ளது. இதுவே ஆதார் திட்டத்தின் தோல்விக்கான ஒப்புதல் தான் என்பதை, அரசிடம் இருந்து நாம் விரைவில் பெறப்போகிறோம். இந்த தோல்விகள் வகைகள், 'நிராகரிக்கப்பட்ட பணம்' (உதாரணமாக, தவறாக குறிக்கப்பட்ட ஆதான் எண்களின் காரணமாக) ; 'திருப்பி கொடுக்கப்பட்ட பணம்' (கடைசியாக ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விதிகள் [பயனாளிக்கு ஆதார் இணைக்கப்பட்ட பல வங்கி கணக்குகள் இருந்தாலும், கம்ப்யூட்டரானது கடைசியாக இணைக்கப்பட்ட கணக்கிற்கு தானாகவே பணத்தை மாற்றுகிறது]); ”முடக்கப்பட்ட கணக்குகள்” மற்றும் சில. வங்கி கணக்குடன் வாடிக்கையாளர் சுயவிவரம் தாக்கல் (EKYC) / ஆதார் இணைப்பு மற்றும் தேசிய நிதி வழங்கல் கழகத்துடன் இணைப்பு ஆகியவற்றால் வங்கியியல் அமைப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதில் நடைமுறைக்கேற்றபடி, கவலைப்பட வேண்டிய வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன. மற்ற பண இடமாற்றங்கள் - வயோதிக காலத்திற்கான ஓய்வூதியங்கள் அல்லது இளநிலை ஆராய்ச்சி கழகம் போன்ற கல்வி உதவித்தொகை, சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்கள் - வழக்கமானவை அல்ல என்று நமக்குத் தெரியும்; இதில் ஏற்படும் இடைவெளிகள் மாணவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிரமத்தை தரும். விவசாயிகளுக்கான நிதி ஆதரவு திட்ட செயல்பாட்டில் இந்த சிக்கல்களும் அதிகரிக்கும்.

காங்கிரஸ் கட்சியும் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்தை அளித்திருக்கிறது. ஜன்தன், ஆதார் மற்றும் மொபைல் பரிமாற்றங்கள் மூலம் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் எவை?

அட்டவணையில் எந்தவொரு திட்டமும் இதுவரை உலகளாவிய அடிப்படை வருமானம் என்ற தகுதி இல்லாதவை - அவை உலகளாவியவையாகவோ அல்லது 'அடிப்படை வருமானம்' உத்தரவாதம் அளிப்பவையாகவோ இல்லை. பண பரிமாற்றங்களில் உள்ள பெரிய கவலை தரக்கூடிய அம்சம், அது பணவீக்கத்தால், அதன் மதிப்பு காலப்போக்கில் மாறிவிடும், இந்த பரிமாற்றங்கள் குறியீட்டுக்கு எந்த அரசும் எந்த விருப்பத்தை காட்டவில்லை. 2006ல் இருந்து, வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மாதத்திற்கு ஒருவருக்கு ரூ. 200 என மத்திய அரசின் பங்களிப்பு செய்தது.

அத்துடன், காங்கிரஸ் அளிக்கும் வாக்குறுதிக்கும் அல்லது தற்போதைய அரசு அறிவித்த விவசாயிகளுக்கான நிதி ஆதரவு என்பது போன்ற புதிய நிதி பரிமாற்றங்களை அறிமுகப்படுத்துவதில் கிடைக்கக்கூடிய நிதி இடத்தின் சிறந்த பயன்பாடு குறித்து தெளிவாக இல்லை. விருப்பமாக, மற்ற துறைகளில் -என் மனதில் ஆரம்ப சுகாதாரம் - முன்னுரிமை தர வேண்டும்.

பண பரிமாற்றங்கள் 'தொந்தரவு இல்லாதவை' என்று கணிக்கப்படுகின்றன; ஆனால் ஏழைகளுக்கு இவை எதுவும் இல்லை: தொலைதூர மற்றும் நெரிசல் நிரம்பிய வங்கிகளிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறுவது என்பது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. அவர்கள், லஞ்சம் கேட்கும் வங்கி தரகர்களை சமாளிக்க வேண்டும்அல்லது இணைப்பதில் சிக்கல், பயோமெட்ரிக் அங்கீகாரம் போன்ற தொழில் நுட்பரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதார் இணைப்பால் அவர்களின் பிரச்சனைகள் பெருகுகின்றன. இப்போது ஆதார் தரவுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்கள், மக்கள்தொகை தரவுடன் வங்கியுடன் பொருத்தி பார்க்க வேண்டும்; அத்துடன், அவர்களது கணக்குடன் வேறு நபரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

டிஜிட்டல் அடையாள அட்டை பயன்பாட்டின் மூலம், செயல்திறன் ஆதாயங்களை பெருகி, விரயத்தை தடுப்பதன் மூலம், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 11 பில்லியன் டாலர்களை (ரூ. 77,000 கோடி ) காக்க முடியும் என்று, 2016 உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. இது இந்தியாவின் வருடாந்திர மானியம் மசோதாவில் கிட்டத்தட்ட 30% க்கு சமமானது. நீங்கள் பிப்ரவரி 2018ல் இப்படத்தை போட்டியிட்டீர்கள். ஆனால் இது, அமைச்சர்கள் மற்றும் ஊடகங்கள் பரவலாக மேற்கோள் காட்டப்படுகிறது. இதற்கு உங்களின் பதில் என்ன?

இது, நாங்கள் எதிர்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஆராய்ச்சியில் மிக மோசமான உதாரணம். அனைத்து நலத்திட்டங்களுடனும் ஆதார் எண்ணை இணைத்தால் 1100 கோடி டாலர் சேமிக்கலாம் என்று, 2016 உலக வளர்ச்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த நலத்திட்ட செலவினம் 1100 கோடி டாலர் இதுவேயாகும். உலக வங்கியானது, மொத்த செலவினத்தை சாத்தியமான சேமிப்பு என்று கருதியது.

அவர்களுடைய பிழைகளை ஒப்புக்கொள்வதற்கு பதில் சுட்டிக்காட்டியபோது, அவர்கள் மேலும் குழப்பமான கூற்றுக்களை செய்தனர்; இது ஜீன் ட்ரெஸியும் நானும், 2018ன் ஆரம்பத்தில் தி எகனாமிக் டைம்ஸ் இதழில் எழுதியது.

மொத்த நலத்திட்ட செலவுகளில் 10% அடிப்படையில் 1100 கோடி டாலர் மதிப்பீடு செய்யப்பட்டது; அதன்படி அவர்கள் ஒட்டுமொத்த நலச்செலவுகளை 10 காரணி மூலம் என்று குறைத்து மதிப்பிட்டுள்ளனர் என்று அவர்கள் கூறினர். தோட்டக்கலை, பால், வனவாழ்வு, போன்றவை "நலன்சார்ந்து" அவர்கள் நலத்திட்ட செலவினங்களை வகுப்பதன் மூலம் அதிகப்படுத்தினர்.

போலி ஆதார் அட்டை பற்றிய தகவல்கள் வந்துள்ளன. ஆனால் நிச்சயம் ஆதாரால், பொது விநியோக அமைப்பு மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றில் உள்ள மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் ஊழலை குறைக்க முடிந்தது அல்லவா. ஆதார் எண் இணைப்பின் மூலம் சமையல் எரிவாயு (LPG) மானியம், பொது வினியோக முறை (உணவு) போன்ற பல்வேறு நலத்திட்டங்களில் இருந்த 6.6 கோடி போலி பயனாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட தகவலை நீங்கள் அளிப்பதில் நான் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலான நீக்குதல்கள், குறிப்பாக சமையல் எரிவாயு இணைப்புகளில், முன் தேதியிட்டு ஆதாரின் பயன்பாடு உள்ளது.

மிக முக்கியமாக, இந்த பதிலை நீங்கள் கவனமாக படித்தால், போலி கணக்கு ரத்து, தகுதியற்ற, போலி / இல்லாத, செயலற்ற "இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் உள்ளிட்டோரும் அடங்கும்”. இவற்றில், "போலி" பயனர்களை அடையாளம் காண மட்டுமே ஆதார் உதவ முடியும். இதன் பொருள் மற்ற நீக்குதல்களுக்கு ஆதாருடன் எந்த தொடர்பும் இல்லை. இத்தகைய முறிவு ஒருபோதும் வெளிப்படையாக்கப்படுவதில்லை.

சுருக்கமாக, ஆதாரை பொறுத்தவரை அனைத்து விதமான நீக்கங்களையும் அரசு கடந்து வருகிறது. தேசிய வேலை உறுதித்திட்ட பணி அட்டை நீக்கம் தொடர்பாக 2018 ஜூலை 19இல் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில் ஆதாருடன் நீக்குவதற்கு எதுவும் இல்லை என்று அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

Question: “(b) whether all these cancellations have been made as per Aadhaar based verification and if so, the details thereof; and (c) the details of savings expected due to such cancellations?”

Answer: (b): No Madam (c): Does not arise.

Source: Lok Sabha

நகல் அல்லது போலி பயனாளிகளை நீக்குகின்ற அதே வேளையில், நேரடியான நன்மைகள் இடமாற்றக்கூடிய பிற தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளனவா? முட்டாள்தனம் இல்லாத அமைப்பை எது ஏற்படுத்தும்?

ஆதார் திட்டத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை, 'கருத்தியல் அடிப்படையிலான' கொள்கையானது, 'ஆதாரம் சார்ந்த கொள்கை' மாற்றியமைக்கப்படுவது தான். போலி பயனாளிகளின் பிரச்சனை பாருங்கள். இந்த பிரச்சனையின் அளவை நாங்கள் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கடைபிடிக்கிறோம். இதில் எந்தவொரு அரசும் ஆர்வம் காட்டவில்லை.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில், அமெரிக்காவில் நலத்திட்டங்களுக்கு பயோமெட்ரிக் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், ​இத்தகைய விவாதமானது அங்கு நடந்தது: எந்த ஆதாரமும் இல்லாமல் போலிகளால் பிரச்சனை அதிகமாக இருந்தது, மற்றும் சான்றுகள் இல்லாலே இருப்பானது நிரூபிக்கப்பட்டது. இதன் தோல்வியின் போது, பயோமெட்ரிக் தொழிற்துறை லாபி இந்த ஏமாற்றத்திற்கு பின்னால் இருந்தது என்று, ஷோஸனா அமில்லே மேக்னடிகின் வென் எ பயோமெட்ரிக் பெயில் என்ற நூல் குறிப்பிடுகிறது.

நேரடி பண பரிமாற்றங்களுக்கு ஆதார் போன்ற பயோமெட்ரிக் / டிஜிட்டல் அடையாளங்கள் தேவை என்ற எண்ணத்திய தொடர் பிரச்சாரத்தின் மூலம் நம்மீது சுமத்தப்படுகிறது. நான் விளக்குகிறேன். நேரடி பலன் பரிமாற்றத்திற்கு, மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் நிகழ் நேர பரிவர்த்தனை (CORE) வங்கி, தேசிய மின்னணு நிதி பரிமாற்றங்கள் (NEFT) போன்ற நவீன வங்கியியல் அமைப்புடன் கூடிய வங்கிக் கணக்குதேவை. ஆதார் வரும் முன், நம்மில் பலருக்கு நவீன வங்கி முறைக்கு அணுகல் இருந்தது; வங்கிக் கணக்குகளை திறக்க கடினம் என்பவர்களை பொறுத்தவரை, தேசிய வேலை உறுதி திட்டம் பணி அட்டை வைத்து, கணக்கு தொடங்க, கணக்கு தொடங்குவர் விவர ஆவணம் போன்ற நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டன. ஆனாலும், வங்கியல்லாதவற்றை அடைய ஆதார் அவசியம் என்பதை நாங்கள் நம்புவதற்கு தயாராக இருந்தோம்.

நேரடி பலன் பரிமாற்ற நிறைவேற்றத்திற்கு தேவை, நமது வங்கிகள் பின்தங்கிய பகுதிகளை சென்றடைய வேண்டும். இதை எளிய வழிமுறைகளில் அடைய முடியும்: தற்போதுள்ள வங்கி கிளைகளில் கூடுதல் மையங்களை திறப்பது, அவர்களது நூறு நாள் வேலை உறுதித்திட்ட ஊதியங்கள், ஓய்வூதியங்கள், பிற திட்டங்களுக்கான பண பரிமாற்றங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம்.

உங்களது Dissent on Aadhaar:Big Data Meets Big Brother என்ற புத்தகத்தில் ஆதாரின் தவறான பயன்பாட்டை பற்றி பேசுகிறீர்கள். பெரிய தரவு பெரிய கூட்டத்தை சந்திக்கிறது. இந்த விவகாரங்களை நீங்கள் விளக்க முடியுமா?

ஒன்று, உங்கள் பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற உங்கள் அடிப்படை புள்ளி விவரங்கள் கூட, அடையாள மோசடிக்கு வழிவகுக்கும். வலைதள தாக்குதலுக்கு குறைந்த தகவல்களுக்கு தேவைப்படும். எனவே, உங்களது ஆதார் தரவை இன்னும் அதிகமான இடங்களில் சேமித்து வைத்து மோசடி மற்றும் வலைதள தாக்குதல்களின் வடிவில் தனிப்பட்ட தீங்கிற்கு அது வழிவகுக்கிறது. இது தனியுரிமை ஒரு அம்சம், பொதுவாக 'தகவல் தனியுரிமை' என்று இலக்கியத்தில் அழைக்கப்படுகிறது.

இரண்டாவது, உங்களது அடிப்படை ஆதார் தகவலில் கிடைக்கும் விவரங்களை இணைந்து மேலும் தரவுத்தளங்கள் கிடைக்கும்; என் வாழ்க்கையில் ஒரு 360 டிகிரி சுயவிவரத்தை உருவாக்க பல்வேறு ஆதாரங்களில் இருந்து தரவு இணைக்க மிகவும் எளிது: எனது ரயில் மற்றும் விமான பயணம், தொலைபேசி பயன்பாடு, ஆன்லைன் ஷாப்பிங், பே-டே கடன் - கடன் பெற்றவரின் அடுத்த சம்பளத்தில் திருப்பிச் செலுத்தும் வகையிலான ஒரு குறுகியகால பாதுகாப்பற்ற கடன் - போன்றவை என் சுய விவரங்களை கொண்டு தங்களது விளம்பரம் மற்றும் பிறவற்றுக்கு என்னை குறி வைப்பார்கள். புரூஸ் ஸ்னேயெர் [ நன்கு அறியப்பட்ட அமெரிக்க ரகசியகுறியீட்டு மற்றும் கணினி பாதுகாப்பு, தனியுரிமை நிபுணர்] இது, பெருநிறுவன கண்காணிப்பையே குறிக்கிறது என்கிறார்.

மூன்றாவது, எங்களை 'பதிய' வைப்பதன் மூலம் அல்லது எமது ஆதார் எண்ணை அனைத்து தரவுத்தளங்களுக்கும் இணைப்பதன் மூலம், இது ஒரு வித்தியாசமான தரவுக்குழியில் ஒரு பாலத்தை உருவாக்குகிறது. இதுதான் ஆதார் விவரக்குறிப்பு, மற்றும் கண்காணிப்பு. அரசு நமது தரவுகளை பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெற்று, நம்மை கண்காணிக்கும் அபாயமும் எப்போதும் உள்ளது. இது தனியுரிமை மீறல் மற்றும் சுதந்திரத்திற்கான நமது உரிமையை மீறுகிறது. இறுதியாக, டிஜிட்டல் சட்ட கல்வியறிவின் குறைந்தளவே தரப்பட்டது - இந்திய தகவல் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், தனது ஆதார் எண்ணை ட்வீட்செய்து, அதன் மூலம் ​​அவருடைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் கடவுச்சொற்களை சிலர் பெற அனுமதித்ததாக தெரிவித்தார் - எனவே தனிப்பட்ட தீங்கிற்கான நோக்கம், இதில் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆதார் என்ற கருத்தையே நீங்கள் எதிர்க்கிறீர்களா? அல்லது அது எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்?

நலத்திட்ட பணிகள் நிர்வாகத்தில் அடையாள அட்டை ஒரு பயனுள்ள பங்கை செய்வதாகத்தன நான் நினைக்கிறேன். ஆனால் நமக்கு தேவையானது திட்டம் சார்ந்த அடையாள அட்டைகள், ஏனெனில் பயனாளிகள் தரப்பில் தேவைகள் மிகவும் மாறுபட்டிருக்கும் - வீட்டுக்கடன் தேவைப்படுவோருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் தேவையிருக்காது. ஆதார் போன்ற மையப்படுத்தப்பட்ட ஒரு தேசிய அடையாள அட்டையை விட இதுபோன்ற பரவலாக்கப்பட்ட அடையாள அட்டைகள் (நிரல் வாரியானது மற்றும் மாநில வாரியானது) சிறந்தவை. வடிவமைப்பு மூலம் பரவலாக்கப்பட்ட அடையாளங்கள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் விவரக்குறிப்பு, கண்காணிப்புக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.

ஆதாருடன் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் அது கட்டாயமாக்கப்படும் போது மட்டுமே அர்த்தமாகும். ஆதார் கட்டாயம் என்பதால் எழும் பிரச்சினைகள் இப்போது, நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளன.

திட்டம் வாரியான மாநிலம் சார்ந்த அடையாள அட்டை என்பது, ஏழைகளுக்கு மேலும் சிரமங்களை தராதா?

ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய ஒற்றை அடையாள அட்டையில் உள்ள விவரக்குறிப்பு கண்காணிப்புக்கான கதவைத் திறக்கிறது; ஆனால் திட்டம் வாரியான மா