மாலேகான்: கடந்த மூன்று மாதங்களாக முஷ்டாக் ஷேக் தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை செய்துள்ளார், அது இந்தியாவில் பலரால் செய்ய முடியாத ஒன்றாகும்: அவர் வேலைக்குச் சென்று வருகிறார். மும்பையில் இருந்து 250 கி.மீ வடகிழக்கில் உள்ள மாலேகான் நகரில் ஒரு விசைத்தறி தொழிலாளி - 44 வயதான ஷேக், தற்போது படிப்படியாக சொந்தகாலில் நிற்கத் தொடங்கி இருக்கிறார்.

"எங்கள் முதலாளிகள், [தொற்றுநோயின்] முதல் மூன்று அல்லது நான்கு மாதங்கள், எங்களை கவனித்துக் கொண்டனர்," என்று, மங்கலான ஒளி கொண்ட, இரைச்சலுடன் செயல்படும் விசைக்கூடத்தில் நின்றவாறு, அவர் செப்டம்பரில் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "மூன்று மாதங்களுக்கு முன் விசைத்தறிகள் திறக்கப்பட்டன [சில யூனிட்டுகள், ஜூன் முதல் வாரத்திலும் மேலும் சில, ஜூன் மூன்றாவது வாரத்திலும் திறக்கப்பட்டன]. நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம்" என்றார் அவர்.

மாலேகான் நகரில் உள்ள 2,50,000 விசைத்தறி கூடங்களில் சுமார் 1,50,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், ஒவ்வொருவரும் மூன்று நான்கு விசைத்தறிகளில் வேலை செய்கின்றனர் என்று நகரத்தின் விசைத்தறி சங்கத்தின் தலைவரான 52 வயது இலியாஸ் யூசுப் கூறினார். “அவர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்படவில்லை," என்ற அவர், “சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம். தொழிலாளர்கள் தவறாமல் கைகளை கழுவுகிறார்கள். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் உள்ளனர்” என்றார்.

கொரோனா வைரஸ் நாவலின் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்ததில் இருந்து அமைப்புசாரா துறை மற்றும் சம்பளத்தொழிலாளர் வர்க்கம் என இரண்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. மார்ச் நடுப்பகுதியில் 7.6% ஆக இருந்த வேலையின்மை விகிதம், மாத இறுதிக்குள் 23.8% ஆக உயர்ந்துள்ளது என்று மும்பையை சுதந்திர சிந்தனைக்குழுவான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் மகேஷ் வியாஸ் எழுதினார். "ஏப்ரல் 2020 இல் வேலையின்மை விகிதம் 23.5% ஆக மாறியது," என்ற அவர், "தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மார்ச் 2020ல் 41.9 சதவீதத்தில் இருந்து 2020 ஏப்ரலில் 35.6 சதவீதமாகக் குறைந்தது" என்றார்.

ஒயிட் காலர் பணியாளர்களை எடுத்துக் கொண்டால், 2020 மே-ஆகஸ்ட் மாதங்களில் 1.22 கோடி பேர் பணியாற்றினர், இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 1.88 கோடி என்பதில் இருந்து பெரும் சரிவு என்று செப்டம்பர் மாதம் மற்றொரு ஆய்வில் வியாஸ் கூறினார். (வியாஸுடனான எங்கள் நேர்காணல்களை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்). ஆனால், மாலேகான் நகரம் இதில் ஒரு வெற்றிகரமான திறனை வெளிப்படுத்தி நிற்கிறது.

தொழிலாளர்கள் திறன் உள்ளூரிலும், அப்பாலும்

"12 மணி நேரம் விசைத்தறியில் வேலை செய்வதற்கு எனக்கு ரூ.400 கிடைக்கிறது" என்று ஷேக் கூறினார். “எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் விசைத்தறிகளில் வேலை செய்கிறார்கள்" என்றார். ஊரடங்கு அமலில் இருந்தபோது, குடும்பத்தில் வருவாய் ஈட்டிய மூன்ரு நபர்களுக்கு திடீரென்று வேலை இல்லை. “அது ஒரு பயங்கரமான காலம். நாங்கள் எப்படி உயிர்வாழ்வோம் என்பதற்கான எந்தவொரு துருப்பும் எங்களுக்கு இல்லை,” என்று அவர் கூறினார்.

தனது முதலாளிகள் அவரை கைவிடவில்லை என்பதற்கு நன்றி தெரிவிப்பதாக ஷேக் கூறினார். "அவர்கள் எங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார்கள். எங்களுக்கு உணவு கிடைத்ததை உறுதி செய்தனர்," என்று அவர் கூறினார். "ஊரடங்கிற்கு பிந்தைய காலம் நாங்கள் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை". எவ்வாறாயினும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும் என்றார்.

ஐந்து ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளராக பணியாற்றி வரும் 34 வயதான இம்ரான் அகமது, இதே போன்ற அனுபவத்தை விவரித்தார். "ஊரடங்கின் போது எங்களை கவனித்து கொண்டதற்காக எனது முதலாளி மற்றும் உறவினர்களுக்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்," என்று அவர் கூறினார். உதவியற்றவராகவும் மற்றவர்களின் தயவில் வாழ்வது அவமானமாகவும் இருக்கும், எனவே வேலை மீண்டும் தொடங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறினார். "இதனால், நீங்கள் உங்கள் குடும்பத்தை கவனிக்க முடியும்," என்றார்.

லேகானில் விசைத்தறிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் யாரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்ல என்று சங்கத்தின் தலைவர் யூசுப் கூறினார். "இந்த நகரம் உள்ளூர் தொழிலாளர்கலின் உழைப்பில் இயங்குகிறது," என்று அவர் கூறினார். "நகரில் வசிக்கும் 6,00,000 மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் விசைத்தறிகளில் வேலை செய்கிறார்கள். தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட உறவு உள்ளது” என்றார்.

அந்த உறவின் காரணமாக, இங்குள்ள தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்கொள்ளும் அக்கறையின்மை போக்கை அனுபவிக்க வேண்டியதில்லை. "தொழிலாளர்கள் உள்ளூர்வாசிகள், எனவே விசைத்தறிகளை மறுதொடக்கம் செய்வதும் எளிதாக இருந்தது" என்று யூசுப் கூறினார். ”ஊரடங்கிற்கு முன்பு இந்த நகரம் தினசரி 2 கோடி [20 மில்லியன்] மீட்டர் துணியை உற்பத்தி செய்தது. நாங்கள் முழு திறனுடன் செயல்படத் திரும்பியுள்ளோம்” என்றார்.

முகக்கவசங்களின் உற்பத்தி தறிகளை மும்முரமாக வைத்திருக்க உதவுகிறது என்று ஷேக் கூறினார். "அத்துடன், மருத்துவமனைகளுக்கு படுக்கை விரிப்புகளை உருவாக்கி வருகிறோம், இறுதிச் சடங்குகளுக்கான கவசங்களையும் கூட தயாரிக்கிறோம்," என்றார் அவர். "ஆடைகளுக்கான உள்ளூர் தேவை இதுவரை எங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது" என்றார்.

மாலேகான் நகரம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது - ஒன்று இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகிறது, மற்றொன்று முஸ்லிம்கள். அதன் பொருளாதாரம் அதன் விசைத்தறிகளைச் சுற்றி வருகிறது என்று யூசுப் கூறினார். "நகரில் முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில்தான் பெரும்பாலான விசைத்தறிகள் உள்ளன, அங்குதான் தொழிலாளர்கள் வாழ்கின்றனர்," என்று அவர் கூறினார். "இந்து ஆதிக்கம் செலுத்தும் பக்கம் சற்று அதிகம் செல்வந்தர்கள் உள்ளனர். இது அனைத்து ஆடைக் கடைகளையும் கொண்டுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் நிதி சார்ந்தவர்கள். நகரத்தின் பிழைப்புக்கு விசைத்தறிகளின் செயல்பாடு அவசியம்”.

போலித் தகவலை எதிர்த்து போராடுவது, வகுப்புவாத அச்சங்களைத் தீர்ப்பது

மாலேகானில் ஒப்பீட்டு நிலைத்தன்மை கடினமாக உள்ளது. தொற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் வீட்டுக்கு வீடு சோதனை செய்தபோது, முஸ்லிம் குடியிருப்பாளர்கள் தங்கள் விவரங்களை தேசிய குடிமக்கள் பதிவு (NRC - என்.ஆர்.சி) மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA - சி.ஏ.ஏ) ஆகியவற்றிற்காக பெற முயற்சிப்பதாக நினைத்தனர் - மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த இரண்டு சர்ச்சைக்குரிய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, விமர்சகர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அரசு பாகுபாடு காட்டுவதாகக் கூறினர். இதனால், நகரம் தீவிர ஆர்ப்பாட்டங்களை கண்டது, மேலும் குடியிருப்பாளர்கள் அந்த நேரத்தில் எந்த ஆவணங்களையும் காட்ட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.

எனவே நிறுவனத்தின் கணக்கெடுப்பிற்கு ஒத்துழையாத சூழல் ஏற்பட்டது. "குடியிருப்பாளர்கள் பயந்தனர்," என்று நிறுவனத்தின் துணை ஆணையர் நிதின் கபாட்னிஸ் கூறினார். "ஆனால் நாங்கள் எங்கள் வேலையைத் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டியிருந்தது” என்றார்.

கடந்த 2001 கலவரத்தில் இருந்து, இந்நகரம் வகுப்புவாத பதற்றமுள்ள பகுதியானது. இதனால், ஏற்கனவே மேல்நோக்கிச் செல்லும் பணி மார்ச் மாத இறுதியில் மேலும் கடினமாகிவிட்டது, டெல்லியில் அதிகாரிகள் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகத்தில் 2,000 பேர் கொண்ட ஒரு சபையைக் கண்டறிந்தனர், இது ஒரு கோவிட் -19 ஹாட்ஸ்பாட்டாக மாறியது. கொரோனா வைரஸ் நாவலின் பரவலுக்காக முஸ்லிம்களை இழிவுபடுத்த முற்படும் பிரச்சாரத்தை இந்த நிகழ்வு தூண்டியது.

சமூக ஊடகங்களில் வதந்திகள் மற்றும் வகுப்புவாத பதற்றம் நிறைந்த தகவல்களால் மாலேகானில் பரபரப்பு உண்டானது என்று மாலேகான் மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அதிகாரி தத்தாத்ரே கதேபுரி கூறினார். "நாங்கள் 50,000 துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தோம், தினமும் 100,000-க்கும் மேற்பட்ட செய்திகளை மாலேகான் மக்களுக்கு அனுப்பினோம்," என்று அவர் கூறினார். "சமூக ஊடகங்களில் வதந்திகளை மறுப்பதற்கும் செய்திகளை பரப்பவும் நாங்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தினோம்" என்றார்.

தவிர, மாலேகானில் ஒரு மருத்துவமனை பற்றி மற்றொரு வதந்தி பரவியதாக கதேபுரி கூறினார். "அந்த மருத்துவமனையில் ஒரு ஊசி மூலம் நோயாளிகள் கொல்லப்படுகிறார்கள் என்று வதந்தி இருந்தது. அங்கு நோயாளியை அனுமதிக்க யாரும் தயாராக இல்லை ” என்றார்.

ஆகையால், திருப்புமுனையை விரைவாக ஏற்படுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் மாலேகான் -- சதுர கி.மீ.க்கு 19,000 மக்கள் அடர்த்தி கொண்டது-- ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸ் நாவலின் ஒரு மையமாக மாறியது, இரண்டு நாட்கள் இரட்டிப்பானது என்று கபாட்னிஸ் கூறினார்.

தவறான தகவலை எதிர்கொள்ள, நகராட்சி நிறுவனம் உள்ளூர் மதத் தலைவர்களுடன் இணைந்தது. "ஒரு நாளைக்கு மூன்று முறையாவது, மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தி, கொரோனா பற்றிய விழிப்புணர்வு செய்தியைக் கொண்டு செல்லும்" என்று கபாட்னிஸ் கூறினார்.

துண்டுப்பிரசுரங்களின் விநியோகம் மற்றும் உள்ளூர் மதத்தலைவர்களின் தலையீடு ஆகியவை மக்களின் நரம்புகளை அமைதிப்படுத்த உதவியது என்று யூசுப் கூறினார். "நான் தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தேன்," என்று அவர் கூறினார். "விழிப்புணர்வு அதிகரித்ததால், அவர்கள் வீட்டுக்கு சென்று அதிகாரிகள் கணக்கெடுப்புகளை நடத்தினர். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக படித்தவர்களும் [முஸ்லிம்களிடம் இருந்து] இணைந்தனர்” என்றார்.

எவ்வாறாயினும் அதுவரை அதிகாரிகள், தனியார் பயிற்சியாளர்கள் மற்றும் ஆஷா தொழிலாளர்கள் (அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) குழு, வீட்டுக்குவீடு சென்று கணக்கெடுப்புகளை நடத்துவதன் மூலம், ஒருசில குடிமகன்களின் கோபத்தை எதிர்கொண்டதாக ஆஷா தொழிலாளி ரத்னா மஸ்டே விவரித்தார். "மக்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்தனர், அவர்களில் சிலர் நாங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட வேண்டும் என்று சாபமிட்டனர்," என்று அவர் கூறினார். "நமது மக்களில் சிலர், பணியில் இருந்தபோது தாக்கப்பட்டனர். பீதி மற்றும் வதந்தி பரப்புதல் தான் இதற்கு காரணம்" என்றார்.

ஒரு மாதத்திற்கு ரூ.2,000 மட்டுமே பெறும் ஆஷா தொழிலாளர்கள், வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும், மாலேகானில் வசிப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்றும் மஷ்தே கூறினார். "அவர்களின் பயண வரலாறு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் கேள்விகளைக் கேட்க வேண்டியிருந்தது. மக்கள் அந்த கேள்விகளை ஊடுருவல் என்று நினைப்பார்கள், ” என்று அவர் கூறினார்,“ ஒரு குடியிருப்பில் அவரது பெயர் கேட்கப்பட்டதும், ஒருவர் ‘நரேந்திர மோடி’ என்று கிண்டலடித்தார். ஆனால் நாங்கள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டியிருந்தது”.

எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதல்ல

விடாமுயற்சி பலனளித்ததாக, கபாட்னிஸ் கூறினார். "இரண்டு நாட்களின் இரட்டிப்பு விகிதம் என்பது, மே மாத இறுதியில் 110 நாட்களை எட்டியது," என்று அவர் கூறினார். "வழக்குகள் எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகின்றன. ஆனால் செப்டம்பர் நடுப்பகுதியில் எங்களது தற்போதைய இரட்டிப்பு விகிதம் 60 ஐ இன்னும் நிர்வகிக்கக்கூடியது” என்றார்.

செப்டம்பர் 15ம் தேதிக்குள் மாலேகானில் மொத்த கோவிட்19 நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 3,200 க்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 118 ஆகவும் இருந்ததாக, துணை ஆணையர் எங்களுக்குக் காட்டிய அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். மாலேகானில் உள்ள இரு முக்கிய மயானத்தில் ஏப்ரல் 2020 இல் 592 பேர் இறந்தனர் (இந்தியா ஸ்பெண்ட் இரு மயானங்களில் பராமரிக்கப்பட்ட பதிவேடுகளை சரிபார்த்தது). ஏப்ரல் 2019இல், அந்த எண்ணிக்கை 197 ஆக இருந்தது, இந்த ஆண்டு 200% அதிகரிப்பு சுட்டிக்காட்டுகிறது. மே 2020 இல், இரண்டு கல்லறைகளிலும் 386 பேர் இறந்தனர், அதே நேரத்தில் 2019 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 252 ஆக இருந்தது - இந்த ஆண்டு 53% உயர்வு.

தற்போதுள்ள சுகாதார நிலைமைகள், உரியவர்களுக்கு சரியான நேரத்தில் கவனம் கிடைக்காததால் இறப்புகள் பல நிகழ்ந்தன என்று, மாலேகானை சேர்ந்த பத்திரிகையாளர் பிரமோத் சாவந்த் கூறினார். "எல்லோரும் கொரோனா வைரஸ் சிகிச்சையில் தான் கவனம் உள்ளது," என்று அவர் கூறினார். “ஆனால் அவர்களில் பெரும்பாலோர் இறந்தபின் கொரோனா வைரஸ் இருந்ததா என பரிசோதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் கோவிட் அல்லாத இறப்புகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்களில் பலர் கோவிட்19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எங்களுக்குத் தெரியாது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலைமை பயங்கரமாக இருந்தது. இன்று அது சிறப்பாக உள்ளது" என்றார்.

மாலேகானின் விசைத்தறிகளுக்கு அடுத்தது என்ன?

கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இயங்கி வந்தாலும், இந்தியாவில் உள்ள மற்ற ஜவுளி மையங்கள் விரைவில் திறக்கப்படாவிட்டால், மாலேகானின் விசைத்தறிகள் சிக்கலை எதிர்கொள்ளக்கூடும். "நாங்கள் எப்போதும் உள்ளூர் தேவையை சார்ந்து இருக்க முடியாது," என்று யூசுப் கூறினார். “நாங்கள் இங்கு துணியை பதப்படுத்தியதும் அதை மும்பை, ராஜஸ்தான், மேற்கு வங்கம், குஜராத் மற்றும் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இது எங்கள் வணிகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். ஆனால் அந்த இடங்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நம்பி இயங்குவதால், எங்களைப் போல் அல்லாமல் அவர்கள் இப்போதும் போராடி கொண்டு இருக்கிறார்கள். சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்ற தொழிலாளர்கள் இன்னும் திரும்பவில்லை. எனவே, எந்த ஆர்டருக்கான தேவையும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.

மாலேகானின் விசைத்தறிகளுக்கு, நவம்பர் மாதத்திற்குப் பிந்தைய காலம் மிக முக்கியமானது என்று யூசுப் கூறினார். "திருவிழாக்கள், திருமணங்களைக் கொண்டிருக்கும்போதுதான் தேவை இருக்கும்," என்று அவர் கூறினார். "நாட்டின் பிற பகுதிகளில் விஷயங்கள் சிறப்பாக வராவிட்டால் அது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஆனால் நாங்கள் அதை வாரத்திற்கு ஒரு நேரத்தில் எடுத்துக்கொள்கிறோம். குறைந்தபட்சம் இப்போது இந்தியாவின் பிற பகுதிகளை விட இது சற்றே சிறந்தது” என்றார்.

(பார்த், இந்தியா ஸ்பெண்ட் முதன்மை நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.