ராஜமுந்திரி (கிழக்கு கோதாவரி மாவட்டம்), ஆந்திரா: உஷாஸ்ரீயின் இரண்டு மகன்களுக்கு - ஏழு ஆண்டுகள் இடைவெளியில் பிறந்தவர்கள் - இடையேயான மிக முக்கியமான வேறுபாடு அவர்களின் எடை.

முதல் குழந்தை பிறந்த போது, 2.5 கிலோ எடையே இருந்தது. இது, குறைந்த பிறப்பு எடை வகைக்கு சற்று மேலே உள்ளது. இது, நீண்டகால சுகாதார அபாயங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் இதில் இந்திய குழந்தைகளில் ஐந்தில் ஒரு பங்கு ஆந்திரா (AP) உள்ளது, அதாவது 17.6% ஆகும். விஜயவாடாவில் இருந்து 150 கி.மீ வடக்கே உள்ள இடத்தில், மூன்று மாதங்களுக்கு முன் பிறந்த உஷாஸ்ரீயின் இரண்டாவது குழந்தை, ஆரோக்கியமான 3 கிலோ எடை கொண்டிருந்தது.

அவரது இரண்டு கர்ப்ப காலத்திலும் என்ன மாற்றம் நிகழ்ந்தது. மொத்தமுள்ள 676 ஒன்றியங்களில் “அதிக ஆபத்து” என்று கருதப்பட்ட 102 இல் 2013 ஆம் ஆண்டில் ஆந்திர அரசால் திட்டம் வரையப்பட்டது. ஏறக்குறைய 6,00,000 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, 2017 ஆம் ஆண்டில் இருந்து அரிசி, சாம்பார், பால் மற்றும் முட்டை என சமைத்த சூடான உணவு, உள்ளூர் அங்கன்வாடிகள் அல்லது அரசு பகல்நேர பராமரிப்பு மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு முன்பு, ஒய்.எஸ்.ஆர் அம்ருத ஹஸ்தம் - முன்பு அன்ன அம்ருத ஹஸ்தம் மற்றும் இந்திரம்மா அம்ருதா ஹஸ்தம் என்று அழைக்கப்பட்டது - திட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி எண்ணெய் மற்றும் நான்கு முட்டைகளை அரசு வழங்கியது.

"இப்போது, நான் அங்கன்வாடியில் (சமைத்த உணவு) சாப்பிடுகிறேன்," என்று கூறும் உஷஸ்ரீ, இளஞ்சிவப்பு நிற குர்தா மற்றும் சல்வார் அணிந்திருந்தார். அவரது ஈரமான கூந்தல், ஒரு துணியால் சுற்றப்பட்டிருந்தது. ராஜமுந்திரியின் புறநகரான ஆரியபுரத்தில் உள்ள அவரது வீட்டில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் நான்கு பார்வையாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

"[உணவு கொடுப்பதற்கான] இரண்டு வழிகளும் நன்றாக உள்ளன - ஆனால் அதில் இதுதான் சிறந்தது" என்று, பட்டதாரியும், வீட்டில் டியூஷன் வகுப்புகளை எடுத்து வரும் உஷாஸ்ரீ கூறினார். அவரது கணவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர்களின் மாத வருமானம் ரூ. 6,000 ஆகும். இது முந்தைய பிரிக்கப்படாத ஆந்திராவின் நகர்ப்புற வறுமைக்கோடு அளவு ரூ.1,009 மேலே உள்ளது. அவருக்குள்ள ஒரே குறை: சைவ உணவு மட்டுமே உண்பவர் என்பதால் முட்டை சாப்பிட சங்கடமாக உள்ளது. அங்கன்வாடியில், சுகாதார பணியாளர்கள் முட்டை தமக்கு நல்லது என்று கூறியுள்ளனர்.

"என்னிடம் அரிசி மற்றும் பால் உள்ளது, ஆனால் முட்டை சாப்பிடுவது கொஞ்சம் கடினம்" என்று உஷாஸ்ரீ கூறினார்.

ஒய்.எஸ்.ஆர் அம்ருத ஹஸ்தம் திட்டம் குறித்து பல சுயாதீன மதிப்பீடுகள் இல்லை, அத்தகைய உணவுத் திட்டங்களில் நன்மைகள் - நாங்கள் பின்னர் விளக்குகிறோம் - உள்ளன. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் - யுனிசெஃப் (UNICEF) வரையறுக்கப்பட்ட 2019 மதிப்பீடுகள் படி, இத்திட்டம் தாய்மார்களை திருப்திப்படுத்தியது, அவர்களின் உணவு பன்முகத்தன்மையை 57-59% ஆகவும், முட்டை மற்றும் பால் நுகர்வு 74-96% ஆகவும், கால்சியம் உட்கொள்வது மாத்திரைகள் மூலம் 87% ஆகவும் அதிகரித்தது என்பதை கண்டறிந்தது.

எங்கள் ஆய்வில், ஆந்திராவின் திட்டமானது சில நன்மைகளை உறுதிப்படுத்தியது மற்றும் அங்கன்வாடி கட்டிட வாடகை மற்றும் ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படாதது மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை, தளவாட குறைபாடுகளைக் கண்டறிந்தது. ஆனால் யுனிசெஃப் மதிப்பீட்டின் தரவு ஆந்திரா மற்றும் இந்தியாவின் எதிர்காலத்திற்கான தாக்கங்களைக் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள்: இந்தியா இழந்த வாய்ப்பு

4.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ஒவ்வொரு ஐந்து இந்திய குழந்தைகளில் இருவர் வளர்ச்சி குறைபாடு அல்லது வயதுக்கேற்ற உயரமின்மை கொண்டுள்ளது. உலகில் அதிக ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை இந்தியா கொண்டுள்ளது.

பெரும்பாலான குழந்தைகளுக்கு, அவர்கள் பிறப்பதற்கு முன்பே பிரச்சினை தொடங்குகிறது.

தங்கள் தாய்மார்களின் வயிற்றில் இருந்த காலம் முதல், மூன்று வயது வரை அரசு திட்டங்கள் மூலம் கூடுதல் ஊட்டச்சத்து பெறும் குழந்தைகள், மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட, ஊட்டம் பெறாதவர்களை விட பட்டதாரி பட்டம் பெறுவதற்கு 11% அதிக வாய்ப்பு என்று ஜனவரி 2018 ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் ஆய்வு தெரிவித்தது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோத்தலங்கா அங்கன்வாடி மையத்தில் சூடான உணவை சாப்பிடும் குழந்தைகள்.

பிறக்காத சிசுக்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து என்பது, அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பிற்கால வாழ்க்கையில் மேம்படுத்தும் நன்மைகளை உருவாக்குகிறது என்பதற்கு, இந்த ஆய்வு உறுதியான ஆதாரங்களை வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கையில் ஊட்டச்சத்தின் கல்வி நன்மை என்பது, இத்தகைய தினசரி வெளிப்பாடு இந்தியாவின் கல்லூரி பட்டதாரிகளை நாட்டின் 20 முதல் 24 வயதுடைய 7.38 கோடி இந்தியர்களில், 7.5% என்பது 11.8% வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். கல்லூரி பட்டதாரிகளின் வீதம் அதிகரிப்பானது, அதிக ஊதியங்களை பெற வைத்து, பொருளாதார லாபத்தை வழங்கும்.

ஐந்து வயதிற்குட்பட்ட உலகின் 15.6 கோடி வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் மூன்றில் ஒருவரைக் கொண்ட ஒரு நாட்டிற்கு, இது குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனையாக இருக்கும். 2016 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட இந்தியாவின் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான செலவு மதிப்பீடு 3790 கோடி ரூபாய் -- ரூ. 27,240 கோடி அல்லது தேசிய ஊரக சுகாதார திட்டத்திற்கான இந்தியாவின் 2019-20 பட்ஜெட்டை விட இது அதிகம் - இது, எதிர்காலத்தில், இழந்த பள்ளிப்படிப்பு மற்றும் பொருளாதார உற்பத்தித்திறன் மூலம் ஈடுகட்டப்படும் என்று மதிப்பிடப்பட்டது.

தற்போதைய ஊட்டச்சத்து போக்குகளை மாற்றியமைக்கும் நோக்கில் ஐந்து மாநில திட்டங்களில் ஒய்.எஸ்.ஆர் அம்ருதா ஹஸ்தம் ஒன்றாகும். ஆரோக்கியமான குழந்தைகள் இந்தியாவின் மக்கள்தொகை லாபப்பங்கை பயன்படுத்துவதற்கான ஒரு முன்நிபந்தனை; இது, உலகின் இரண்டாவது பெரிய உழைக்கும் மக்கள்தொகையைக் கொண்டிருப்பதன் பொருளாதார நன்மையானது இப்போது ஆபத்தில் உள்ளதாக, ஆகஸ்ட் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியிருந்தது.

குழந்தைக்கு எது சிறந்தது என்பதை அறிந்து கொள்வது

"என் மகனுக்கு பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் நான் தாய்ப்பால் கொடுத்தேன்" என்று உஷாஸ்ரீ கூறினார். “நான் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று அங்கன்வாடியில் எனக்கு விளக்கினர். எனவே, நான் குழந்தைக்கு - தண்ணீர் அல்லது பிற பால் போன்ற வேறு எதுவும் கொடுக்கவில்லை” என்றார்.

புதிய, சத்தான உணவின் விளைவாக, உஷாஸ்ரி தனது இரண்டாவது கர்ப்ப காலத்தில் 12 கிலோவைப் பெற்றார், மேலும் அவரது இரண்டாவது மகன் ஆரோக்கியமாக இருக்கிறார்.

பெரும்பாலான இந்திய தாய்மார்கள் மோசமான ஊட்டச்சத்து நிலையில் கர்ப்பம் அடைகிறார்கள்: இனப்பெருக்க வயதுடைய பெண்களில் 23% அவர்களின் உயரத்தைவிட மெல்லியவர்களாகவும், 58% கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகைக்கும் ஆளாகிறார்கள். இது அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, கர்ப்பிணிகளில் 8% - சுமார் 45 லட்சம் - இளம் பருவத்தினர் என்று தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2015-16) தெரிவித்துள்ளது.

இதனால்தான் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது மிக முக்கியமானது.

நாடெங்கிலும் 46% கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களில் 51% பேரும் மட்டுமே இந்தியாவின் முதன்மை 44 வயதுடைய தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான திட்டத்தின் கீழ் - இது உலகின் மிகப்பெரிய முயற்சியான ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ஐசிடிஎஸ்) - அங்கன்வாடி மையங்களில் இருந்து துணை ஊட்டச்சத்து சேவைகளை பெறுகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர் அம்ருத ஹஸ்தம் திட்டத்தில் தாய்மார்கள் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் சராசரி பிறப்பு எடை 2019 இல் 2.9 கிலோவாக இருந்தது - பொதுவாக, 2.5 கிலோவுக்கு மேல் உள்ள குழந்தைகள் சாதாரண எடை குழந்தைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். 2019-20 நிதியாண்டில் ஒவ்வொரு கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சுமார் 3,00,000 பேர் சேர்க்கப்பட்டனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திட்டம் ஐ.சி.டி.எஸ் மற்றும் துணை ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் இயங்குகிறது, ரூ .2,219 கோடி பட்ஜெட்டில், மாநில அரசு 17.75 ரூபாயை மத்திய அரசின் பங்காக ஒவ்வொரு உணவுக்கு ரூ.4.75 என்று தரப்படுகிறது.

இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் தாய்மார்களுக்கு தங்கள் அங்கன்வாடி மையங்களில் சில வகையான சூடான சமைத்த உணவை வழங்குகின்றன. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளன, மேலும் ஒடிசா இந்த திட்டத்தைத் தொடங்க உள்ளது.

தாய்மார்களுக்கான சூடான சமைத்த உணவு திட்டம் வீட்டுக்கு எடுத்து செல்லுதல் எனப்படும் டேக்-ஹோம் ரேஷன்- டி.எச்.ஆர். (THR) - ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு துணை ஊட்டச்சத்து மற்றும் வீட்டுப் பயன்பாட்டிற்காக பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் -என மாற்றியமைத்து, பாரம்பரியமாக ஆந்திர அரசால் விநியோகிக்கப்படுகிறது. டி.எச்.ஆர். எதிராக சூடான-சமைத்த-உணவு திட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவது முக்கியம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 2019 தொடக்கத்தில் நாங்கள் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பழங்குடி பகுதிகளுக்குச் சென்றோம், சூடான-சமைத்த உணவு திட்டத்தை பரவலாக ஏற்றுக்கொள்வதையும் பயனாளிகளிடையே திருப்தியையும் பார்த்தோம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசின் கூடுதல் ஆதரவும் சிறந்த உள்கட்டமைப்பும் தேவை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். இந்த திட்டத்தை செயல்படுத்திய அங்கன்வாடி தொழிலாளர்களுக்கு அரசின் கூடுதல் ஆதரவும் சிறந்த உள்கட்டமைப்பும் தேவை என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

அதிக உணவு பன்முகத்தன்மை, குறைந்த எடை அதிகரிப்பு

துணை ஊட்டச்சத்து திட்டம் ஏற்கனவே தாய்மார்களுக்கு மூல உணவுப் பொருட்களை வழங்கியிருந்தாலும், அங்கன்வாடியில் ஒரு சூடான உணவின் பின்னணி என்னவென்றால், தாய் உணவை உட்கொள்வதை உறுதிசெய்வது (மற்றும் வீட்டில் பிறர் அல்ல), பிறப்புக்கு முந்தைய சேவைகள் மற்றும் இரும்பு, பிற ஊட்டச்சத்துக்கள், ஃபோலிக் சப்ளிமெண்ட்ஸ், கால்சியம் மாத்திரைகள், டைவர்மிங் மாத்திரைகள் மற்றும் சுகாதார தகவல்களை பெறுகிறது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோத்லாங்கா அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சூடான, சமைத்த உணவு வழங்கப்படுகிறது.

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர். அமிர்த ஹஸ்தம் திட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு,வாரத்தில் ஆறு நாட்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சூடான, சமைத்த உணவு வழங்கப்படுகிறது, இது அங்கன்வாடி ஊழியர்களால் தயாரிக்கப்படுகிறது, காலையில் அங்கு வரும் குழந்தைகளுக்கும் இதை தயார் செய்கிறது. அத்துடன், வீட்டில் வழங்கப்படும் துணை ஊட்டச்சத்து திட்டத்தோடு, ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை மற்றும் 200 மில்லி பால்அரசால் சேர்த்து வழங்கப்படுகிறது.

மேலும், அங்கன்வாடி ஊழியர்கள் ஒரு மொபைல் செயலி மூலம், இத்திட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட பெண்கள், அவர்கள் பெற்ற சேவைகள், கர்ப்ப கால எடை மற்றும் குழந்தைகளின் பிறப்பு எடை ஆகியவற்றின் பதிவை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்கள் குறிப்பிட்டுள்ள, 2019 யுனிசெப் மதிப்பீடு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 360 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுடனான நேர்காணல்கள் மற்றும் மாநில அரசின் மேலாண்மை தகவல் அமைப்பிலிருந்து தரவை மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் கண்டுபிடிப்புகளாவன:

  • இரும்பு ஃபோலிக் அமில மாத்திரைகள், இருந்த இடத்திலேயே நுகர்வு என்பது “மோசமாக” இருந்தது (22.6%); பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டில் மாத்திரைகள் (77%) எடுத்துக் கொண்டனர்; 87% தாய்மார்கள் கால்சியம்; 56% நீரிழிவு மாத்திரைகளை எடுத்துக் கொண்டனர்.
  • பெரும்பாலான பயனாளிகள் ஒரு மாதத்தில் 25 நாட்களில் 21 நாட்களில் உணவை உட்கொண்டனர்.
  • கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் ஒன்பதாம் மாதங்களுக்கு இடையில் மதிப்பிடப்பட்ட சராசரி எடை அதிகரிப்பு 8.3 முதல் 9.7 கிலோ வரை இருந்தது.

மதிப்பீட்டின்படி, கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது பழங்குடிப் பகுதிகளில் பெண்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருந்தது: கிராமப்புறங்களில் 12% உடன் ஒப்பிடும்போது 19% வீணடிக்கப்பட்டது, மற்றும் 79% பழங்குடி பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தும் குறைந்தபட்ச ஊட்டச்சத்து பன்முகத்தன்மையைக் கொண்டிருந்தனர், மற்ற கிராமப்புறங்களில் இதை ஒப்பிடும் போது 89% ஆக இருந்தது.

பதிலளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் உணவு சுவையாகவும், மதிப்பீடு போதுமான அளவை கொண்டிருப்பதாக கூறினாலும், பதிவுசெய்யப்பட்ட பெரும்பாலான தாய்மார்கள் 6 கிலோவிற்கும் குறைவாகவே பெற்றனர், அதே நேரத்தில் 6.8% மட்டுமே 9 கிலோவுக்கு மேல் பெற்றுள்ளனர் என்று மாநில அரசு வழங்கிய சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தியாவின் சராசரி தாய்வழி எடை - 5.1 கிலோ முதல் 8.3 கிலோ வரை என்ற அதிகரிப்புக்குள் உள்ளது. ஆனால் உலக சராசரிக்கு - 8.3 கிலோ முதல் 15.3 கிலோ- கீழே உள்ளது.

அரசு தரவுகளின்படி, பதிவுசெய்யப்பட்ட (2019 ஜனவரி முதல் ஜூலை வரை) பெண்களுக்கு பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.9 கிலோவாக இருந்தது, இது இந்தியாவில் சராசரி பிறப்பு எடைக்குள் (2.8 முதல் 3 கிலோ) இருக்கும்.

தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பகுதிகளில், மிகுந்த உற்சாகம்

பழமையான மலைகள் மற்றும் நெல் வயல்களால் சூழப்பட்ட தேவரப்பல்லே கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் மரேடுமில்லி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய பழங்குடி கிராமமாகும். தேவராபல்லே அங்கன்வாடி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒரு சமூகக்கூடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் கழிப்பறை அல்லது சமையலறை இல்லை.

அங்கு, உதவியாளர் பணியிடம் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை, அங்கன்வாடி ஊழியர் கங்கா பவாரி, 29 தான், சமையலையும் செய்கிறார். "அங்கன்வாடி கட்டிடம் இல்லை; சுற்றுச்சுவர், மின்சாரம், தண்ணீர் வினியோக வசதி இல்லை" என்று அவர் கூறினார். கற்பித்து வரும் ஒரு உதவியாளர், இலாப நோக்கற்ற அமைப்பால் நியமிக்கப்பட்டவர்; அவர் குழந்தைகளுடன் பணிபுரிகிறார், பவாரிக்கு உதவுகிறார்.

21 வயதான லோஷ்வாரி - மூன்று வயது மற்றும் ஏழு மாத வயதுள்ள இரு குழந்தைகளின் தாய். அங்கன்வாடியில் தான் சாப்பிட்ட முட்டை, பால், சாம்பார் மற்றும் சாதம் போன்றவை விலைமதிப்பற்றது என்று லோஷ்வரி கூறுகிறார். "ஏனெனில் எங்களால் தினமும் முட்டையை சாப்பிடுவது என்பது இயலாதது," என்றார் அவர்.

தேவராபல்லே அங்கன்வாடியில், 21 வயதான லோஷ்வரியை நாங்கள் சந்தித்தோம் - மூன்று வயது மற்றும் ஏழு மாத வயதுடைய இரு குழந்தைகளின் தாய் - அவர் மெலிந்த தேகத்துடன் இருந்ததால் மிகவும் சிறியவர் போல் இருந்தார். அவர் சுமார் 42 கிலோ எடையுள்ளவர், கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு நாளும் அங்கன்வாடிக்கு வந்தார், அவரது இரண்டாவது குழந்தைக்கு ஆறு மாத வயது எட்டும் வரை தொடர்ந்தார்.

அங்கன்வாடியில் தாம் சாப்பிட்ட உணவு விலைமதிப்பற்றது என்று லோஷ்வரி கூறினார். எங்களால் தினமும் முட்டையை சாப்பிடுவது என்பது இயலாதது," என்றார் அவர். பழங்குடி சமூகங்களில் மாடுகளுக்கு பால் கொடுப்பதில்லை, எனவே தாய்மார்களுக்கு புரதச்சத்து குறைவாகவே இருந்தது.

இங்குள்ள பெண்களின் வாழ்க்கை கடினமானது. அவர்களுக்கு மூன்று முதல் ஐந்து குழந்தைகள் உள்ளனர். கர்ப்ப காலத்திலும் வேலைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. அவர்கள் பிரசவத்திற்காக தங்கள் தாய் வீட்டுக்கு - இந்தியாவில் பலர் செய்வது போல - செல்வதில்லை. எனவே பிரசவத்துக்கு பிறகு உடனேயே வீட்டு வேலைகளை அவர்கள் தொடர வேண்டியிருக்கிறது.

பழங்குடிப் பகுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இரண்டு கூடுதல் திட்டங்கள் உள்ளன: அங்கன்வாடி மையங்கள் மாநிலம் தழுவிய அளவில் மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு உணவளிக்கின்றன, பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில், ஆறு மாதங்கள் முதல் குழந்தைகளுக்கு உணவளிக்கப்படுகிறது. பாலூட்டும் தாய்மார்கள் கூடுதல் பாக்கெட் பேரிச்சம்பழம், வெல்லம் மற்றும் வேர்க்கடலை பர்பி - ஒரு வகை மிட்டாய் - மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்த ராகி மால்ட் ஆகியவற்றை பெறுகிறார்கள்.

"என் குழந்தைகள் இருவர்ம் மையத்திற்கு வருகிறார்கள், உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள்" என்று கடவால சுகனாவதி, 26, கூறினார். "என் குழந்தைகள் இந்த உணவைத் தொடங்கியதில் இருந்து எப்போதாவது தான் நோய்வாய்ப்படுகிறார்கள்" என்றார்.

ஐந்து கர்ப்பிணி பெண்கள், மூன்று பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏழு மாதங்கள் முதல் ஏழு வயது வரையுள்ள 33 குழந்தைகள், தேவரப்பள்ளே அங்கன்வாடியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் அன்றாட உணவுக்காக வருகிறார்கள்.

"சில பெண்கள் காலையிலேயே வருகிறார்கள், அவர்கள் வேலைக்குச் செல்லும்போது, முட்டை மற்றும் பால் சாப்பிடுவதற்காக. எஞ்சியவர்கள், மதியம் சாதம் மற்றும் சாம்பர் சாப்பிட வருகிறார்கள்" என்று அங்கன்வாடி ஊழியர் கங்கா பவாரி கூறினார்.

இந்த உற்சாகம் நாங்கள் பார்வையிட்ட பிற கிராமப்புற மையங்களில் தெளிவாகத் தெரிந்தது; ஆனால் நகர்ப்புற அங்கன்வாடிகளில் அவ்வாறு இல்லை.

நகர்ப்புறங்களில் அதிக பிடிப்புகள்

ஆரியபுரத்தில் உள்ள லிஷ்பர்பேட்டா நகராட்சி தொடக்கப்பள்ளியுடன், இரண்டு அங்கன்வாடி மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆறு வயதுக்குக் குறைவான 30க்கும் மேற்பட்ட குழந்தைகள், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்தனர், மேலும் இரண்டு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் இரண்டு உதவியாளர்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், இங்கு பதிவுசெய்யப்பட்ட ஆறு கர்ப்பிணி மற்றும் நான்கு பாலூட்டும் தாய்மார்களில், தினமும் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே மையத்திற்கு வருகிறார்கள்.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜமுந்திரியின் லிஷ்பர்பேட்டா நகராட்சி பள்ளி மையத்தில், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, குழந்தை மேம்பாட்டு திட்ட அதிகாரி சி எச் வி நர்சம்மா ஆலோசனை வழங்குகிறார்.

"அவர்கள் நீண்ட தொலைவில் இருந்து மையத்திற்கு வர வேண்டி இருப்பதாக கூறுகின்றனர். மேலே மற்றும் கீழே ஏற படிக்கட்டுகள் உயரமாக இருப்பது, அவர்களுக்கு சிரமமாக இருக்கின்றன" என்று அங்கன்வாடி ஊழியர் விஜயா கூறினார். பல தாய்மார்கள் தங்கள் உணவை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அங்கு குடும்ப உறுப்பினர்களால் அது சாப்பிடப்படுகிறது.

அங்கன்வாடி ஊழியரின் வற்புறுத்தலால் மையத்திற்கு உணவு உட்கொள்ள வருகை தந்த ஒரு தாய், "உணவு சாப்பிடுவதற்காக இங்கு வர எனக்கு ஒரு மணிநேரம் ஆகும். எனக்கு வீட்டில் ஒரு இளம் குழந்தையும் இன்னொரு குழந்தையும் உள்ளது" என்று கூறினார்.

"இது இலவசமான உணவு என்று பயனாளிகள் கருதுகிறார்கள், ஏன் [அங்கன்வாடி] மையத்திற்கு சென்று சாப்பிட வேண்டும் நினைக்கலாம்" என்று கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஐ.சி.டி.எஸ் திட்ட இயக்குனர் டி சுகஜீவன் பாபு கூறினார். குறைந்தது 10-20% பெண்கள் உணவு பெற வருவதில்லை என்ரார் அவர்.

"தாய்மார்களுக்கு வீட்டுக்கு உணவுப் பொருள் மற்றும் சூடான உணவு எடுத்துச் செல்லதல் என்ற நெகிழ்வுத்தன்மை (வழங்கப்பட) வேண்டும்," என்று பாபு கூறினார்.

சூடான, சமைத்த உணவை சான்றுகள் ஆதரிக்கிறதா?

ஒய்.எஸ்.ஆர் அம்ருத ஹஸ்தம் போன்ற “நிகழ்விட - உணவூட்டும் திட்டங்களின்” நன்மைகள் குறித்து பலருக்கும் நம்பிக்கை கிடையாது.

தாய்வழி ஊட்டச்சத்து குறைபாடு - ஒரு தாயின் உயரம், உடல் நிறை குறியீட்டெண் மற்றும் இரத்த சோகை - ஏழை குழந்தை விளைவுகளுக்கு ஆபத்தான காரணியாக இருந்தாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஒரு சூடான சமைத்த தினசரி உணவின் தாக்கம் அல்லது தாய்வழி உணவுகளில் பிற துணை உணவுகளின் தாக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று, சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி சகவான பூர்ணிமா கூறினார் மேனன் கூறினார்.

"இத்திட்டங்களில் உணவு நேரத்தில் கூடுதல் உள்ளீடுகளும் - இரும்பு மாத்திரைகள் வழங்குதல் மற்றும் நடத்தை மாற்ற தகவல் தொடர்புகள் உள்ளன என்பதை நான் புரிந்து கொள்கிறேன்" என்று மேனன் கூறினார். "இது நல்லது, ஆனால் அதனுடன் வழங்கப்படும் மற்ற கூறுகளிலிருந்து உணவின் விளைவுகளைத் தவிர்ப்பது சவாலானது” என்றார்.மேனனுக்கு வேறு இரண்டு இட ஒதுக்கீடு இருந்தன:

  • ஒய்.எஸ்.ஆர் அம்ருதா ஹஸ்தம் போன்ற திட்டங்கள் கலந்துகொள்ளும் தாய்மார்களுக்கு பயனளிக்கும் என்றாலும், மைய அடிப்படையிலான உணவுத் திட்டங்கள் ஒவ்வொரு நாளும் கலந்து கொள்ள முடியாதவர்களை விலக்குகின்றன என்பதை சான்றுகள் காட்டுகின்றன.
  • ஏற்கனவே கலோரி போதுமானதாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவளிக்கும் திட்டங்கள் கர்ப்பத்திற்குப் பிறகு அதிக எடை அதிகரிப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் வழிவகுக்கும், இது தென் மாநிலங்களுக்கு ஒரு கவலையாக உள்ளது.

மற்ற நிபுணர்கள் நிகழ்விட உணவூட்டும் திட்டங்களை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பல ஆய்வுகளின் 2015 மதிப்பாய்வின் படி, சீரான ஆற்றல் மற்றும் புரதச் சத்து கொடுக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கான ஆபத்து கணிசமாகக் குறைக்கப்பட்டது. பிற மதிப்புரைகள் மற்றும் ஆய்வுகள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே) புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சராசரி பிறப்பு எடையில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டது, அவற்றின் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன என்று, பொது சுகாதார ஆராய்ச்சியாளர் மற்றும் ஆர்வலர், ஒடிசாவின் கியோன்ஹாரில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான எக்ஜுட் இணை இயக்குனர் பிரசாந்தா திரிபாதி, மின் அஞ்சல் பதிலில் தெரிவித்தார்.

பிறந்தது முதல், குழந்தையின் முதல் 1,000 நாட்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் இடைநிலை சுழற்சியை நிவர்த்தி செய்ய அரசுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று திரிபாதி கூறினார். மாநிலங்கள் "உணவு பாதுகாப்பற்ற பகுதிகளை" வரைபடமாக்கி, அவற்றை துணை ஊட்டச்சத்து மட்டுமல்லாமல், குடிநீர் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாட்டின் பிற தீர்மானிப்பவர்களையும் குறிவைக்க வேண்டும் என்றார்.

பிறந்த போது 3 கிலோ என்று ஆரோக்கியமாக இருந்த தனது ஏழு மாத மகனுடன், 28 வயதான வெங்கட் லக்ஷ்மி. இவர் ஆந்திர அரசின் சூடான, சமைத்த உணவு திட்டத்தின் பயனாளி ஆவர். இத்திட்டம், உணவை மாதத்திற்கு 25 நாட்களுக்கு வழங்குகிறது.

போதுமான மனித வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாவிட்டால், எந்தவொரு சிறந்த திட்டமும் கூட அவற்றின் முழுத்திறனை கொண்டு வெற்றிபெற முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர் அம்ருத ஹஸ்தத்தை நடத்துவதற்கு ஆந்திர அரசு உறுதியளித்துள்ள நிலையில், வழங்கப்படாத சம்பளம், வாடகை மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறை போன்ற சில வெளிப்படையான இடைவெளிகள் அதில் உள்ளன.

நாங்கள் பேசிய ஒவ்வொரு அங்கன்வாடி ஊழியரும், இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை தாமதமாகவே சம்பளத்தை பெறுவதாக கூறினர். அங்கன்வாடி மையங்கள் பலவற்றில் அரசு கட்டிடங்கள் இல்லாத நிலையில், சில மையங்களுக்கான வாடகை, ஆறு மாதங்களாக செலுத்தப்படவில்லை. பல அங்கன்வாடி ஊழியர்கள், தங்கள் சொந்த காசி இருந்து மையத்தை நடத்துவதற்கான செலவை செலுத்தினர். ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள காலியிடங்கள் திட்டத்தின் செயல்திறனை பாதிக்கின்றன: தேவரப்பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் அங்கன்வாடி உதவியாளர் இல்லை; அங்கன்வாடி உதவியாளர்களில் 8% காலியிடங்கள் உள்ளன, மாவட்டத்தில் மேற்பார்வையாளர்களில் 23% காலியிடங்கள் உள்ளன என்று அரசு பதிவுகள் காட்டுகின்றன.

மேற்பார்வையாளர் காலியிடங்கள், இதன் சேவைகளுக்கான திறமையான கண்காணிப்பை பாதிக்கிறது. நாங்கள் சென்ற பல மையங்களில் வேலை செய்யாத எடைக்கருவிகள் இருந்தன.

பெரிய அளவில், திட்டத்தில் உணவு பாதுகாப்பற்ற பயனாளிகளின் சதவீதம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்ததால், மிகவும் பாதிக்கப்படக்கூடிய தாய்மார்கள் இந்த திட்டத்திலிருந்து வெளியேறப்பட்டிருக்கலாம் என்ற கவலைகள் இருப்பதாக, யுனிசெஃ பெவல்யூஷன் தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரை, ரோஷ்னி-பெண்கள் கூட்டு மையம் சமூக நடவடிக்கை ஆதரவின் மூலம் எழுதப்பட்டது.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.