#தரவுக்காட்சி: அதிக பெண்கள் சுகாதார மையங்களில் பிரசவித்தனர், ஆனால் அதிகம் பேர் இரத்த சோகையுடன் இருந்தனர்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரசவ தாய்மார்களின் சுகாதாரம் தொடர்பான முக்கியமான குறிகாட்டிகள் மேம்பட்டிருந்தாலும், பெண்கள் இடையே இரத்த சோகை மற்றும் வாழ்க்கை முறை சீர்குலைவுகள் அதிகரித்து வருகின்றன.

By :  Amrita De
Update: 2022-01-01 05:30 GMT

மும்பை மற்றும் கொல்கத்தா: கடந்த 2019-21 ஆம் ஆண்டில், அதிகமான குழந்தைகள் சுகாதார மையங்களில் பிறந்தனர் மற்றும் அதிகமான தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொண்டனர், ஆனால் 2015-16 உடன் ஒப்பிடும் போது, அதிகமான பெண்கள் இரத்த சோகை மற்றும், உயர் இரத்த அழுத்தத்துடன் இருந்ததாக, சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் தரவு காட்டுகிறது.

Full View


Full View

ஜூன் 1, 2019 முதல், ஜனவரி 30, 2020 வரை சேகரிக்கப்பட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான (UTs) தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு -5 தரவு, டிசம்பர் 2020 இல் வெளியிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2, 2020 முதல், ஏப்ரல் 30, 2021 வரை நடத்தப்பட்டது, அதன் தரவு நவம்பர் 24, 2021 அன்று வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்தின் நிலையைப் பற்றிய ஒரு பார்வையை உங்களுக்கு வழங்குகிறது.

பிரசவ தாய்மார்கள் சுகாதாரம்

மருத்துவமனை பிரசவம், அதாவது, சுகாதார மையங்களில் பிறந்த குழந்தைகள், பெரும்பாலான மாநிலங்களில் அதிகரித்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் (52.2% முதல் 79.2%), மேற்கு வங்கம் (75.2% முதல் 91.7%) மற்றும் உத்தரப் பிரதேசம் (67.8% முதல் 83.4%) ஆகியவற்றில் அதிகபட்ச அதிகரிப்பு உள்ளது. அதே நேரத்தில், ஒரு பொது சுகாதார மையத்தில், பிரசவத்திற்கான தேசிய சராசரி 8.8% குறைந்துள்ளது, 2015-16 இல் ரூ.3,197 இல் இருந்து 2019-21 இல் ரூ.2,916 ஆக இருந்தது. டெல்லியில் (ரூ.8,518லிருந்து ரூ.2,548க்கு 70% சரிவு) மற்றும் மேற்கு வங்கத்தில் (ரூ.7,919லிருந்து ரூ.2,683க்கு 66% சரிவு) குறைந்துள்ளது.

Full View


Full View


Full View
Full View

பிரசவ தாய்மார்களின் சுகாதாரத்திற்கான மற்ற குறிகாட்டிகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. கர்ப்பமாக இருந்த 100 நாட்கள் அல்லது அதற்கு மேல், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை உட்கொண்ட தாய்மார்களின் சதவீதம் இந்தியா முழுவதும் 30.3% இல் இருந்து 44.1% ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் ஃபோலிக் அமிலம் உட்கொள்ளும் பெண்களின் விகிதம் அதிகமாக அதிகரித்துள்ளது, ஜம்மு மற்றும் காஷ்மீர் (J & K) மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்கள், இந்த குறிகாட்டியில் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

Full View


Full View

ஊட்டச்சத்து

இந்திய அரசின் இரத்த சோகை முக்த் பாரத் திட்டமானது, பிரதம மந்திரியின் முழுமையான ஊட்டச்சத்துக்கான (POSHAN- போஷன்) அபியான் திட்டத்தின் கீழ் வருகிறது மற்றும் இரத்த சோகையை வருடத்திற்கு 3% குறைக்கும் அதன் இலக்கு இருந்தபோதிலும், பெரும்பாலான மாநிலங்களில் பெண்களிடையே இரத்த சோகை அதிகரித்துள்ளது. மொத்தத்தில், இரத்த சோகையின் பாதிப்பு - ஒரு டெசிலிட்டர் இரத்தத்திற்கு 11.0 கிராமுக்கும் குறைவான ஹீமோகுளோபின் உள்ள பெண்களின் விகிதமாக அளவிடப்படுகிறது - 2015-16 இல் 53.1% ஆக இருந்து, 2019-21 இல் 57% ஆக 4 சதவீத புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் இரத்த சோகையின் பாதிப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தேங்கி நிற்கிறது மற்றும் இரத்த சோகை முக்த் பாரத்- 2018 இல் தொடங்கப்பட்டது, ஆனால் செயல்படுத்துவது கடந்த ஓராண்டில் மட்டுமே தொடங்கியது என்று, புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS)-இல் உள்ள இரத்த சோகை கட்டுப்பாடு (NCEAR-A) தொடர்பான தேசிய சிறப்பு மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சிக்கான நோடல் அதிகாரி கபில் யாதவ் கூறினார். இந்த திட்டத்திற்காக இந்திய அரசு பெரும் நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். "பொதுவாக பொது சுகாதாரத் திட்டங்கள் சுமார் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை எடுக்கும். இரத்த சோகைக்கான தலையீடு மிகவும் நீண்டது மற்றும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இந்தியாவின் மொத்த மக்கள்தொகை இந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்," என்று யாதவ் மேலும் விளக்கினார்.

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 25 இல், 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் 71% அதிகமாகவும், திரிபுரா (67.2%), ஜம்மு& காஷ்மீர் (65.9%), அஸ்ஸாம் (65.9%), ஜார்கண்ட் (65.3%) மற்றும் குஜராத்தில் (65%) 71% அதிகமாகவும் பரவியுள்ளது. அஸ்ஸாம் (19.9 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு), ஜம்மு & காஷ்மீர் (25.6 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு), சத்தீஸ்கர் (13.8 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு) மற்றும் ஒடிசாவில் (13.3 சதவீத புள்ளிகள் அதிகரிப்பு) அஸ்ஸாமில் இரத்த சோகை அதிகமாக உயர்ந்துள்ளது.

"குறைந்த பிறப்பு விளைவுகள், குறைந்த பிறப்பு எடை, குறைப்பிரசவம் மற்றும் அறிவாற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் பிரசவத்திற்கு இரத்த சோகை ஒரு அடிப்படை நிலை என்பதால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது மிகவும் முக்கியமானது" என்று, இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (PHFI) பொது சுகாதார ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா கண்டேலாவல் கூறினார்.

Full View


Full View

இரத்த சோகை பன்முகத்தன்மை கொண்டது, மேலும் இரும்பை உட்கொள்வது இந்த நிலையை கவனிக்காது, கந்தேல்வால் விளக்கினார். "ஒட்டுமொத்தமாக, மோசமான உணவுத் தரம் இரத்த சோகையை ஏற்படுத்தும் மற்றும் துரதிர்ஷ்டவசமாக, உணவுகளின் தரத்தை மதிப்பிட உதவும் குறிகாட்டிகளை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் சேர்க்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார். தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் வளர்ச்சி குன்றியது மற்றும் ஊட்டக்குறைபாடு போன்ற குறிகாட்டிகள், எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன, ஆனால் தேவையான நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லாமல் கலோரிகள் நிறைந்த உணவில் கூட எடையை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார். தொற்றுநோய்களின் போது, ​​வீடுகளில் தானிய-கனமான உணவுகள் கிடைக்கப்பெற்றன, அதே சமயம் இரத்த சோகையை எதிர்ப்பதற்கு நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவு முக்கியமானது, என்று அவர் விளக்கினார்.

ஃபோலிக் குறைபாடு, பி-12 குறைபாடு மற்றும் கொக்கி புழு தொல்லை அனைத்தும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும் என்று கண்டேல்வால் கூறினார்.ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நடவடிக்கைகளைத் தவிர, பெண்களின் கல்வியை மேம்படுத்துவது இந்தியாவின் இரத்த சோகை சுமையைக் குறைப்பதில் மிக முக்கியமான தலையீடாக இருக்கலாம் என்று பிப்ரவரி 2019 இல் தெரிவித்தோம்.

இந்தியா முழுவதும், ஏறக்குறைய 18.7% பெண்கள் குறைந்த உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ), ஒரு மீ2க்கு 18.5 கிலோவுக்கும் குறைவாக உள்ளனர். இது 2015-16ல் 22.9% ஆக குறைந்துள்ளது. குறைந்த பிஎம்ஐ உள்ள பெண்களுக்கு 20%க்கும் அதிகமான பாதிப்பு விகிதம் என்பது சிறப்பு கவனம் தேவைப்படும் தீவிரமான சூழ்நிலை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சுட்டிக்காட்டி கூறுகிறது. இது ஜார்கண்ட் (26.2%), பீகார் (25.6%), குஜராத் (25.2%), சத்தீஸ்கர் (23.1%), மத்தியப் பிரதேசம் (23%), மகாராஷ்டிரா (20.8%) மற்றும் ஒடிசாவில் (20.8%) உள்ளது.

அதே நேரத்தில், அதிகமான பெண்கள் (24%) அதிக எடை அல்லது பருமனாக உள்ளனர் --ஒரு m2 க்கு 25 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட அளவீடுகள் - சமீபத்திய கணக்கெடுப்பில், 2015-16 இல் 20.6% ஆக இருந்தது. நகர்ப்புறங்களில் 10ல் மூன்று பெண்களும், கிராமப்புறங்களில் 10ல் இரண்டு பெண்களும் உடல் பருமனாக இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதிகபட்ச விகிதம் பஞ்சாப் (40.8%) மற்றும் தமிழ்நாடு (40.4%) ஆகும்.

பருவநிலை மாற்றம் சத்தான உணவு கிடைப்பதில் சிக்கலை மேலும் மோசமாக்கலாம், குறிப்பாக பெண்களுக்கு, ஸ்வேதா நாராயண், இவர், ஹெல்த் கேர் வித்தௌட் கேர் என்ற காலநிலை மற்றும் சுகாதார அமைப்பின் பிரச்சாரகர் கூறினார். இந்தியாவில் வறட்சி, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகள் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் உணவு உற்பத்தியை பாதிக்கும், மேலும் சில ஆய்வுகள் புவி வெப்பமடைதல் உணவில் உள்ள ஊட்டச்சத்தை குறைக்கக்கூடும் என்று அவர் விளக்கினார். "இவை அனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் நமது சமூகம் எப்படி இருக்கிறது, நம் பெண்களுக்கு கடைசியாக உணவு கிடைக்கும். எனவே உணவுக்கான அணுகல் குறைவாக உள்ளது மற்றும் சத்தான உணவுக்கான அணுகல் குறைவாக உள்ளது" என்றார்.

தொற்றா நோய்கள்

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் இப்போது அதிகமான பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை உள்ளது.

Full View


Full View
Full View
Full View


உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Similar News