#தரவுக்காட்சி: புவி வெப்பமடைதலால் இந்தியா ஆண்டுதோறும் 259 பில்லியன் மணிநேர உழைப்பை இழந்தது

உலகளவில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் இழக்கப்படும் உற்பத்தி நேரம், முந்தைய மதிப்பீடுகளை விட சுமார் 400 பில்லியன் மணிநேரம் அதிகமாகும், இது கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இழந்த வேலை நேரங்களின் அளவைப் போன்றது.

Update: 2022-01-26 00:30 GMT

மும்பை: ஈரப்பதமான வெப்பத்தின் தாக்கத்தால், 2001 முதல் 2020 வரை இந்தியா ஆண்டுதோறும் சுமார் 259 பில்லியன் மணிநேர உழைப்பை இழந்துள்ளது என்று டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த உற்பத்தி நேரங்களின் இழப்பு, இந்தியாவிற்கு $624 பில்லியன் (ரூ. 46 லட்சம் கோடி) மதிப்புடையது - இது அதன் 2017 ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட 7%க்கு சமம்.

கட்டுரையாளர்கள், 'ஈரமான வெப்பம்' (humid heat) என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர், அவை வெப்பமான மற்றும் வறண்ட அல்லது வெப்பமான மற்றும் ஈரப்பதமான தொழிலாளர் உற்பத்தித்திறனைக் குறைக்கும்.

உலகளவில், ஈரப்பதமான வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் 677 பில்லியன் மணிநேர உழைப்பை இழந்தது, இதன் மதிப்பு $2.1 டிரில்லியன் (ரூ. 156 லட்சம் கோடி). காலநிலை மாற்றம் இந்த இழப்புகளை மோசமாக்குகிறது.

"உலகளாவிய காலநிலை மாற்றத்தின் ஒரு பகுதியின் பின்னங்கள் கூட தொழிலாளர்களுக்கு பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்" என்று, ஆய்வு கூறுகிறது. விரைவான உமிழ்வு குறைப்புகள் இல்லாமல், காலநிலை மாற்றம் ஏற்கனவே வெப்பமான நாடுகளில் இழப்புகளை மேலும் அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளது, மேலும் வரலாற்று ரீதியாக, குளிர்ச்சியான நாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்க தொழிலாளர் இழப்பைக் காணத் தொடங்கும் என்று, டெல்லியை சேர்ந்த காலநிலை ஆராய்ச்சி நிறுவனமான, க்ளைமேட் ட்ரெண்ட்ஸின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View


Full View

இந்த நூற்றாண்டின் முதல் 20 ஆண்டுகளில், முந்தைய 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ஆண்டுதோறும் 25 பில்லியன் மணிநேரங்களை இந்தியா இழந்துள்ளது என்று, Environmental Research Letters இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கண்டறிந்து உள்ளது. "கடந்த நான்கு தசாப்தங்களில், உலகளவில் வெப்பம் தொடர்பான தொழிலாளர் இழப்புகள் குறைந்தது 9% (> ஆண்டுக்கு 60 பில்லியன் மணிநேரம்) அதிகரித்துள்ளது" என்று ஆய்வு கூறுகிறது. காலநிலைப் போக்குகள் மாநாட்டின்படி, மனித நடவடிக்கைகளால் உலக சராசரி வெப்பநிலை சுமார் 0.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது.

முன்னர் கருதப்பட்டதை விட, குறைந்த வெப்பம் மற்றும் ஈரப்பதம் மட்டங்களில் தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைக்கப்படலாம் என்பதையும் புதிய தரவு கண்டறிந்துள்ளது. இந்த மதிப்பீடுகள் விவசாயம், மீன்பிடி, வனவியல் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மட்டுமே என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகள் பல பிராந்தியங்களில் உள்ள ஒட்டுமொத்த பணியாளர்களின் குறிப்பிடத்தக்க விகிதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
Tags:    

Similar News