தரவு, படுக்கைகள், பயிற்சி பெற்ற மருத்துவர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் இந்தியாவின் தீக்காய மேலாண்மை

Update: 2019-11-29 00:30 GMT

உஜ்ஜைன்: அது, வைசாகி நாளான ஏப்ரல் 14, 2019. இது இந்தியாவின் பல பகுதிகளில் வசந்தகால அறுவடை விழாவை குறிக்கிறது. 63 வயதான சாதனா கார்கரே, மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்கால கோயில் நகரமான உஜ்ஜைனில் இருக்கும் சிவன் கோவிலில், காலை நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் கோவில் அகல் விளக்கில் அவரது புடவை பட, நொடிப்பொழுதில் புடவைப்பற்றிக் கொண்டு தீப்பிடித்து, உடலெங்கும் பரவியது; உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

சாதனாவின் கணவர் பிரமோத், 64, அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு தீக்காயங்களுக்கு சிகிச்சை தர வசதியில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். முதலுதவி கூட அளிக்காமல், 38 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கார்கரேஸ் அறிவுறுத்தப்பட்டனர். இந்தூரில் உள்ள சோத்ராம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை அடைந்தபோது, சாதனா இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளாகி இருந்ததை மருத்துவர்கள் தெரிவித்தனர் - அவரது உடலில் 70% தீக்காயங்கள் இருந்தன. அங்கு, சாதனா சிகிச்சை பெற மூன்று மணி நேரத்திற்கும் மேலானது. அங்கு, அவர் 48 மணி நேரம் உயிருக்கு போராடினார்; தீக்காய சிகிச்சைகளுக்கு பலனளிக்காமல், அவர் ஜூன் 1, 2019இல் இறந்தார்.

பயிற்சி பெற்ற பணியாளர்கள் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை வழங்கி இருந்தால் தீக்காயங்கள் காரணமாக இறப்பு மற்றும் இயலாமை பெருமளவில் தடுக்கப்படும் என்று இந்தூரின் சோய்த்ராம் மருத்துவமனையின் தீக்காயப்பிரிவு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்பால் சிங், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். தீக்காயங்களுக்கு சிகிச்சை மற்றும் மேலாண்மை என்பது சூப்பர்-ஸ்பெஷாலிட்டியின் ஒரு தனித்துவமான பிரிவாகும். மேலும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள தீக்காய சிகிச்சை பிரிவுகள், பொதுவாக நகரங்களில் தான் அமைந்திருக்கின்றன, கிராமப்புறங்களில் அல்ல என்று அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தீக்காயங்களால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கு, இந்த உள்கட்டமைப்பு இல்லாதது என்பது மெதுவான, வேதனையான மரணத்தையே தருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிதமான அல்லது கடும் தீக்காயங்களுக்கு ஆளாகின்றனர் என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தனது 2017-18 ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மதிபீட், மார்ச் 2009 இல் தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான 70 லட்சம் என்ற எண்ணிக்கையை விட இது கணிசமாகக் குறைவாக இருக்கிறது.

இந்தியாவில் தீ தொடர்பான இறப்புகள் குறித்து பல தரவுத்தொகுப்புகளை ஆராய்ந்த அவர்கள், 2001ஆம் ஆண்டில் மட்டும் நாட்டில் 70 லட்சம் மக்கள் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும், இதனால் 1,63,000 பேர் இறந்ததாகவும் மதிப்பிட்டனர். அதாவது, 2001இல் இந்தியாவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 2% தீக்காயங்களால் ஏற்பட்டன.

மலேரியா, காசநோயைவிடவும் இந்தியாவில் தீக்காயங்களால் அதிகமானவர்கள் இறப்பதை சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. டெல்லியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனை%E

Similar News