புதுடெல்லி: பொருளாதார நிலை கணவனுக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேல் இருக்கும் பெண்கள், குடும்ப வன்முறையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முடிவெடுப்பதில் இத்தகைய பெண்களுக்கு அதிக உறுதியான பங்கு உள்ளது என்பதாலும், ஆணாதிக்க அதிகார சமநிலையை மீண்டும் நிலைநாட்ட ஆண்கள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர் என்பதற்கும், காரணமான ஆதாரங்களை, இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

திருமணமான பெண்களில் , உயர்சாதி திருமணம் செய்த -- பெண்கள் உயர் சமூக அந்தஸ்துள்ள ஆண்களை திருமணம் செய்ய விரும்புதல் -- பெண்களுடன் ஒப்பிடும் சம அந்தஸ்து உள்ள பெண்கள், 14% குடும்ப வன்முறையை சந்திக்க நேரிடுவதாக, இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. சாதி, வர்க்கம், வயது, வசிக்கும் பகுதி மற்றும் பல புவியியல் காரணிகள்-சமூக பொருளாதார பின்னணியில், திருமணமான தம்பதிகளது முடிவுகள் உள்ளன.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 (NFHS-4) தரவின் ஆசிரியர்களது பகுப்பாய்வின்படி, சம அந்தஸ்து அல்லாத திருமணங்களில் பெண்களின் சதவீதம் 22%ஆகும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) கருத்தின்படி, குடும்ப வன்முறை பெண்களுக்கு ஏற்படும் பொதுவான துஷ்பிரயோக வடிவமாக மாறியுள்ளது-இது உலகளவில் மூன்று பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. தற்போதைய ஆய்வு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தரவு மற்றும் வன்முறை தொடர்பான கேள்விகளுக்கு, 15-49 வயதுடைய 65,806 பெண்களின் பதில்களை பகுப்பாய்வு செய்தது. கணக்கெடுப்புக்கு முந்தைய 12 மாதங்களில் 27% உடல்ரீதியான வன்முறை, 5% பாலியல் வன்முறை, 11% உணர்ச்சி வன்முறை மற்றும் 25% "ஏதேனும்" ஒரு வன்முறை ஆகியவற்றைக் கண்டது.

பொருளாதார ரீதியாக பெண்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்கள், அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதை, இது குறிக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பாலின சமத்துவம் பற்றிய கொள்கைகள், அமல்படுத்தக்கூடிய சட்டம் மற்றும் குறுக்கீடுகளுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

பூகோள ரீதியாக, மக்கள் தொகை முழுவதும்

இந்தியாவில் கடந்த நான்கு தசாப்தங்களில், தங்கள் மனைவியைவிட சிறந்த கல்வி பெற்ற ஆண்களின் சதவீதம் 90% -க்கு மேல் இருந்து, 60% ஆக குறைந்துள்ளது; மேலும் கணவர்களை விட சிறந்த கல்வி பெற்ற பெண்களின் சதவீதம் 10% க்கும் குறைவாக இருந்து, 30% க்கு மேல் உயர்ந்துள்ளது.

"இந்த [ஆய்வின் தரவு] திருமணங்களில் பெண்கள் அதிக அதிகாரம் பெற்றவர்கள் போல் தோன்றலாம், ஆனால் அவர்கள் சம அந்தஸ்து என்ற மணவாழ்க்கையை மீறுவதாலும், அதிக கல்வியறிவு பெற்றிருப்பதாலும், அவர்கள் [உண்மையில்] இன்னும் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர், " என்று, டெல்லி சிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், ஆய்வின் முதன்மை ஆசிரியருமான புனர்ஜித் ராய்சவுத்ரி கூறினார். (முன்னதாக, அவர் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்தார்).

ஆசிரியர்கள், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4 தரவின் அளவுருக்கள்- அதாவது குடியிருப்பு பகுதி (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்), குழந்தைகளின் இருப்பு, வீட்டு வகை (ஒன்று/இரண்டு தலைமுறை vs மூன்று தலைமுறை குடும்பங்கள்), வீட்டு செல்வம் (ஏழை, ஏழை, நடுத்தர, பணக்கார மற்றும் பணக்காரர்), சாதி காரணிகள் (ஒரே அல்லது வெவ்வேறு சாதியினரின் வாழ்க்கைத் துணைவர்கள்), தம்பதிகளின் சராசரி வயது மற்றும் திருமணத்தின் காலம் (ஐந்து வருடங்களுக்கு மேல்) ஆகிய முழுவதும் பகுப்பாய்வு செய்தனர்.

சம அந்தஸ்து விதிமுறைகளை மீறுவது, துணை மக்கள்தொகை முழுவதும் குடும்ப வன்முறையுடன் தொடர்ந்து தொடர்புடையது என்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த தொடர்பு இந்தியாவுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை: தான்சானியா, இங்கிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள், கண்டுபிடிப்பை மீண்டும் வலியுறுத்துகின்றன.

"இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்பாகும், ஏனென்றால் எந்த வீட்டு வன்முறை கொள்கையும் செயல்படுத்தப்பட வேண்டிய அளவு மிகப்பெரியது என்பதை இது காட்டுகிறது" என்று ராய்சவுத்ரி கூறினார்.

சுயாதீனமான முடிவெடுத்தல்

ஆணாதிக்க விதிமுறைகள் குடும்பங்களில் அனைத்து முதன்மை முடிவுகளும் ஆண்களால் எடுக்கப்பட வேண்டும் என்கிறது, பெண்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் ஆண்களின் ஒப்புதலைப் பொறுத்தது. குடும்ப முடிவுகளை எடுப்பதில் பாரம்பரிய பாலின பாத்திரங்கள் தலைகீழாக மாறும்போது என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்தது-பெரிய வீட்டு பொருட்கள் வாங்குவது, உறவினர்களுக்கான வருகைகள் மற்றும் பெண்களின் வருவாய் எவ்வாறு செலவிடப்படுகிறது.

சம அந்தஸ்து அல்லாத திருமணங்கள், ஆணாதிக்க பாலின நம்பிக்கைகள் மற்றும் விதிமுறைகளை மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, பெரிய வீட்டுப் பொருட்களை வாங்குவது குறித்து பெண்கள் குறைந்தபட்சம் 3%, குடும்ப வருகைகளில் குறைந்தது 9%, மற்றும் பெண்களின் வருவாயை குறைந்தது 7%செலவழிப்பது போன்ற முடிவை அவர்கள் எடுக்கிறார்கள்.

கணவன்மார்கள் குடும்ப வன்முறையைப் பயன்படுத்தி தங்கள் மனைவிகளின் வேலை, பணி வாய்ப்புகளையும் "நாசப்படுத்துகிறார்கள்" என்று ஆய்வு கூறுகிறது. இதுபோன்ற கணவன்மார்கள் தங்கள் மனைவிகள் மற்ற ஆண்களுடன் பழகுவதைப் பற்றி பொறாமைப்படுவது, அவர்கள் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டுவது அல்லது அவர்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள வலியுறுத்துவது போன்ற பொதுவான அம்சங்களை கொண்டுள்ளனர்.

பாலின வன்முறை இந்தியாவின் பொருளாதாரத்தைத் தடுக்கிறது, மேலும் பாலின சமத்துவத்தை அடைவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை, 700 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கக்கூடும் என்று 2015 மெக்கின்சி அறிக்கை குறிப்பிட்டது.

சமூக பொருளாதார மேம்பாடு போதாது

"ஆண்களின் இந்த [வீட்டு வன்முறை] ஆண்பால் கருத்துக்களை நிவர்த்தி செய்ய அதிக முயற்சி எடுக்கப்படாததால், பெண்கள் தற்போதுள்ள விதிகளை மீற முயற்சிக்கும்போது ஏற்படும் ஆண்களுக்கான பின்னடைவாக நீங்கள் பார்க்கலாம்" என்று, உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான சர்வதேச பெண்கள் ஆராய்ச்சி மையம் (ஐசிஆர்டபிள்யூ) ஆசியாவின் ஆராய்ச்சி மற்றும் திட்டங்களின் இயக்குனர் பிரணிதா அச்யுத் கூறினார்.

இது திருமண வயதை ஒரு வருடம் கூட உயர்த்தினால் பெண்களுக்கு குடும்ப வன்முறைக்கு எதிராக அதிகாரம் அளிக்க முடியும் என்ற ராய்சவுத்ரியின் 2021 ஆய்வு முடிவுக்கு பிறகு, தற்போதைய ஆய்வு முடிவு வருகிறது. ஆனால் அந்த ஆராய்ச்சி கூட, தாமதமான திருமணங்கள் பெண்களை ஒரு சிறந்த கல்வியைப் பெற அனுமதித்தாலும், குடும்பத்தில் பேரம் பேசும் சக்தியைப் பெற்றாலும், அது கூட்டாளரிடம் இருந்து "வலுவான பின்னடைவை" ஏற்படுத்தியது, இந்தியாஸ்பெண்ட் நவம்பர் 2018 கட்டுரை குறிப்பிட்டது.

இந்த வன்முறை எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கு "பெண் குற்ற உணர்வு" ஒரு முக்கியமான காரணியாகும் என்று மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் சவுமியா தனராஜ் கூறினார், அவர் வித்யா மஹாம்பரேவுடன் இணைந்து பெண்ணிய பொருளாதாரம் (Feminist Economics) என்ற, வரவிருக்கும் ஒரு ஆய்வை எழுதியுள்ளார், இது, வேலை செய்யும் பெண்கள் அதிக குடும்ப வன்முறையை எதிர்கொள்ள முனைகிறார் என்றது.

"எங்கள் ஆராய்ச்சி, வேலை செய்யாத பெண்களை விட வேலை செய்யும் பெண்கள் வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள் என்று காட்டுகிறது. கணவன் மற்றும் குடும்பத்திற்கு அவர்கள் நிர்ணயித்த கடமைகளில் இருந்து விலகி, வேலையில் நேரத்தை செலவிடுவதில், அவர்கள் குற்ற உணர்ச்சியடைகிறார்கள். எனவே பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றிருந்தாலும், நம்மில் மிகவும் கடினமாக இருக்கும் விதிமுறைகள் மாற, அதிக நேரம் எடுக்கும், "என்று சவும்யா தனராஜ் கூறினார்.

கடந்த பத்தாண்டுகளில் தேசிய மற்றும் மாநில அளவில் பெண்களை பலப்படுத்தும் திட்டங்கள், அதாவது பேடி பச்சாவோ பேடி பதாவோ, ஆப்கி பேடி ஹுமாரி பேடி, பெண் குழந்தையை மையமாகக் கொண்ட லாட்லி திட்டம் , கிராமப்புறப் பெண்களுக்கான பிரதம மந்திரி மகளிர் திறன் மையம் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா போன்றவை தொடங்கப்பட்டன.

ஆனால் இந்த பிரச்சாரங்கள், குடும்ப வன்முறையை இயல்பாக்கும் சமூக மதிப்பு அமைப்பில் மாற்றங்களை இலக்காகக் கொண்டவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதன் பொருள், சமூக விதிமுறைகளை மாற்றுவதையும், பாலின வன்முறையைத் தடுப்பதையும், அதைச் சமாளிக்க சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், குடும்ப வன்முறைக்கு எதிராக சமூக மற்றும் சட்ட ஆதரவை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட கொள்கைகளை செயல்படுத்துவதாகும்.

கொள்கை தலையீடுகள் எப்படி உதவும்

வன்முறைகளில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் மாநிலத் தலையீடுகள் பயனளிக்காது என்று, இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் 2017 கட்டுரை தெரிவித்தது. வீட்டு வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்-2005 நிறைவேற்றப்பட்டபோது, ​​தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) 2014 இல் சட்டத்தின் கீழ் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு பகுப்பாய்வு, சட்டத்தால் வரையறுக்கப்பட்ட குடும்ப வன்முறை மற்றும் பொதுவாக, கடுமையாகக் குறைக்கப்பட்டதாகக் காட்டுகிறது.

ஆனால் பாலின பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள், அவை அதிகாரம் பெற விரும்புவோரின் மீது எதிர்பாராத எதிர்மறையான தாக்கங்களை குறிப்பாக கலாச்சார விதிமுறைகளின் வெளிச்சத்தில் ஏற்படுத்தும் என்று, இந்தியாஸ்பெண்ட் மார்ச் கட்டுரை தெரிவித்தது.

இந்த பொதுவான மற்றும் சிக்கலான வன்முறைச் செயலைக் குறைக்க, நாம் பல நிலைகளில் செயல்பட வேண்டும் என்று, ஐசிஆர்டபிள்யூவின் பிரனிதா அச்யுத் கூறினார். "நாம் முதன்மை தடுப்பு, இரண்டாம் நிலை தடுப்பு மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு ஆகியவற்றில் வேலை செய்ய வேண்டும். கூடுதலாக, பின்னடைவின் சாத்தியமான புள்ளிகளைக் குறைக்க நாம் பல்வேறு பங்குதாரர்களுடன் ஈடுபட வேண்டும்" என்றார். முதன்மை தடுப்பு வன்முறையை செயல்படுத்தும் பாலின சமத்துவமின்மை போன்ற சமூக நிலைமைகளை மாற்ற முற்படுகிறது, மேலும் இது சமூகங்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படை அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளில் பரந்த மாற்றம் தேவைப்படுகிறது. ஆலோசனை மற்றும் தங்குமிடங்களை வழங்குவதன் மூலம் மீண்டும் மீண்டும் வன்முறைச் செயல்களை நிறுத்த இரண்டாம் நிலை தடுப்பு வேலை செய்கிறது. மூன்றாம் நிலை தடுப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதிலும், துஷ்பிரயோகம் செய்பவர்களை ஆதரவுக் குழுக்கள் மற்றும் சட்ட தலையீடுகள் மூலம் பொறுப்பேற்பதிலும் கவனம் செலுத்துகிறது.

ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைக்கான சங்கம் (SNEHA) போன்ற அமைப்புகள் சமூகங்களில் வீட்டு வன்முறையை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் செயல்படுகின்றன. "நாங்கள் சமூகங்களில் பிரச்சாரங்களைச் செய்கிறோம்-நாங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழுக்களை உருவாக்குகிறோம், வன்முறையைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஆண்களுக்குக் கல்வி கற்பித்து அவர்களை கூட்டாளிகளாக்க முயற்சிக்கிறோம்" என்று, SNEHA அமைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான திட்ட இயக்குனர் நயரீன் தருவாலா கூறினார். "நாங்கள் பெண்கள் கூட்டாக அமைக்கிறோம், இது பெண்கள் ஒன்றாக வருவதற்கு ஒரு இடத்தை வழங்குகிறது" என்றார்.

தொற்றுநோய் தொடர்பான எழுச்சி

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரடங்குகள், வீட்டு வன்முறை நிகழ்வுகளில் அதிகரிப்பைக் கண்டன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், வீட்டு வன்முறையை " நிறுத்தம்" செய்ய வேண்டுகோள் விடுத்ததால், இந்தியாவில் சிவில் சமூகத்துடன் இணைந்து அரசாங்கங்கள் இரண்டாம் நிலை தடுப்பு ஆதரவு முறைகளை அமல்படுத்தின. ஊரடங்கின் போது வீட்டு வன்முறை அதிகரிப்பை குறிப்பிட்ட தேசிய மகளிர் கவுன்சில், இது குறித்து புகார் அளிக்க, ஒரு வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியது; கேரள அரசு தொலைபேசி ஆலோசனை வசதியைத் தொடங்கியது. மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட அரசு சாரா நிறுவனம் (NGO) அக்ஷரா மையம், டாடா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இணைந்து, 'வன்முறைக்கு எதிரான நிலைப்பாடு' (Stand Up Against Violence) என்ற வலை பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது.

கூடுதலாக, என்ஜிஓக்கள் அவசர ஆலோசனைகள், சட்ட உதவிகள், மனநலம் சார்ந்த ஆதரவு மற்றும் தங்குமிடம் வழங்கத் தொடங்கின. ரெட் டாட் முன்முயற்சி போன்ற பொது முயற்சிகள் வேகத்தை பெற்றன, பெண்கள் தங்கள் உள்ளங்கையில் ஒரு அம்சம் மூலம் துயரத்தை தெரிவிக்க அனுமதித்தது.

இருப்பினும், இந்த திட்டங்கள் மிகப் பெரிய அளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். "பொதுவான நம்பிக்கை என்னவென்றால், பெண்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கக்கூடிய ஒரு அமைப்பு இன்னும் நம்மிடம் இல்லை" என்று SNEHA அமைப்பின் தருவாலா கூறினார். "ஆனால் வன்முறையைக் குறைக்க முற்படும் பயனுள்ள அணுகுமுறைகளின் ஆதாரம் இல்லாததால் அது இல்லை. நமக்கு இப்போது உண்மையில் தேவை, இது குறித்து செயல்படவும், தடுப்பு மற்றும் பதில் இரண்டிலும் வேலை செய்யவும் அரசியல் விருப்பம் மற்றும் முதலீடு" என்றார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.